சுஜாதாவின் கதைகளைப் படிச்சு ரசிச்சு நான் எழுதின பதிவுல நண்பர் அ.குரு சுஜாதாவோட படைப்புகளை டவுன்லோட் பண்ணிப் படிக்கலாம்னு இந்த லிங்க்கைக் கொடுத்திருந்தார். டவுன்லோட் பண்ணிப் படிச்சேன். அதுல என்னை அசரடிச்ச சுஜாதா ஸாரோட ஒரு நாடகத்தைப் பத்தி இங்கே உங்களோட பகிர்ந்துக்கப் போறேன்.
Dr.நரேந்திரனின் வினோத வழக்கு
டாக்டர் நரேந்திரன் அரசாங்க மருத்துவமனையில் அடுத்த டீனாக வரவேண்டியவர். வெளிநாடுகளில் படித்துப் பல பட்டங்கள் வாங்கியவர். அவர் மீது ஒரு நோயாளியின் வாழ்வாதாரங்களைப் பிடுங்கி மூச்சை நிறுத்தியது, தன் கீழ் வேலை செய்த கல்யாணமாகாத பெண்ணின் கர்ப்பத்தைக் கலைக்க உதவியது, தடை செய்யப்பட்ட மருந்து ஒன்றைக் கொடுத்த ஒரு சிறுவன் சாகக் காரணமாயிருந்தது என்று மூன்று குற்றங்கள் சுமத்தப்பட்டு கோர்ட்டில் கேஸ் துவங்குகிறது.
வழககில் வினோதம் என்னவென்றால் டாக்டர் நரேந்திரன் மூன்று குற்றங்களையும் ஒப்புக் கொளகிறார். இது ஏற்கனவே முடிவு தீர்மானிக்கப்பட்ட வழக்கு, அதனால் வக்கீல் இல்லாமல் நானே வாதாடிக் கொள்கிறேன் என்கிறார். நீதிபதி அதை ஒப்புக் கொள்ளாமல் லாயர் கணேஷிடம் நரேந்திரன் வழக்கை எடுத்து வாதாடச் சொல்கிறார். டாக்டர் ஒத்துழைக்க மறுத்தாலும் கணேஷும் வஸந்தும் விசாரணையில் இறங்கி அவர் குற்றமற்றவர் என்பதைக் கண்டறிகின்றனர். கோர்ட்டில் வழக்கு நடக்க, டாக்டரைக் காப்பாற்ற தங்களால் இயன்றவரை வாதாடுகின்றனர்; போராடுகின்றனர்.
வழக்கின் போக்கில் டாக்டர் நரேந்திரன் அவர்களிடம் மனம் திறந்து பேசுகிறார். முதல் இரண்டு கேஸ்களிலும் தன் மீது தவறில்லை என்றாலும் மூன்றாவதான அந்தச் சிறுவன் ஒரு Child Prodigy. அவன் இறக்கும்படி விட்டது தனககுத் தோல்வி, அதனால் தான் தண்டனை அடைய விரும்புவதாகச் சொல்கிறார். இதனிடையில் கணேஷ்-வஸந்த் பொறிபறக்க திறமையாக வாதாடுவதைக் கண்டு இளவழகன் என்ற அரசியல் அல்லக்கை ஒருவன் வந்து அவர்கள் கேஸிலிருந்து விலக பேரம் பேசுகிறான். கணேஷ்-வஸந்த் வெகுண்டு அவனைத் திட்டி அனுப்பி விடுகின்றனர். ஒரு அரசியல்வாதி ஒரு பிரச்னையிலிருந்து மீள கண் துடைப்பிற்காக பொய் வியாதியைச் சொல்லி ஆஸ்பத்திரியில் அட்மிட்டாவதற்கு வர, அட்மிட் செய்ய நரேந்திரன் மறுத்தனால் வஞ்சம் வைத்து பழிவாங்கப்படுகிறார் என்பதை உணர்கின்றனர்.
கோர்ட்டில் நரேந்திரனுக்கு ஆதரவாக கணேஷ்-வஸந்த் சமர்ப்பிக்கும் சாட்சிகள் எல்லாம் பயமுறுத்தல் + பணம் காரணமாக பல்டி அடிக்கின்றனர். தீர்ப்புக்காக கோர்ட் கலையும் போது முன்பே தண்டனை தீ்ரமானிக்கப்பட்டது என்றும் தனக்கு என்ன தண்டனை விதித்து தீர்ப்பு வரும் என்பதை டாக்டரே சொல்கிறார். அப்போது இளவழகனுக்கு மாரடைப்பு வர, வஸந்தின் எதிர்ப்பையும் மீறி, டாக்டர் சிகிச்சை செய்கிறார். பின்னணியில் டாக்டர் சொன்ன அதே தீர்ப்பு நீதிபதியின் குரலில் ஒலிக்கிறது. நாடகம் நிறைகிறது.
Dr.நரேந்திரனின் வினோத வழக்கு
டாக்டர் நரேந்திரன் அரசாங்க மருத்துவமனையில் அடுத்த டீனாக வரவேண்டியவர். வெளிநாடுகளில் படித்துப் பல பட்டங்கள் வாங்கியவர். அவர் மீது ஒரு நோயாளியின் வாழ்வாதாரங்களைப் பிடுங்கி மூச்சை நிறுத்தியது, தன் கீழ் வேலை செய்த கல்யாணமாகாத பெண்ணின் கர்ப்பத்தைக் கலைக்க உதவியது, தடை செய்யப்பட்ட மருந்து ஒன்றைக் கொடுத்த ஒரு சிறுவன் சாகக் காரணமாயிருந்தது என்று மூன்று குற்றங்கள் சுமத்தப்பட்டு கோர்ட்டில் கேஸ் துவங்குகிறது.
வழககில் வினோதம் என்னவென்றால் டாக்டர் நரேந்திரன் மூன்று குற்றங்களையும் ஒப்புக் கொளகிறார். இது ஏற்கனவே முடிவு தீர்மானிக்கப்பட்ட வழக்கு, அதனால் வக்கீல் இல்லாமல் நானே வாதாடிக் கொள்கிறேன் என்கிறார். நீதிபதி அதை ஒப்புக் கொள்ளாமல் லாயர் கணேஷிடம் நரேந்திரன் வழக்கை எடுத்து வாதாடச் சொல்கிறார். டாக்டர் ஒத்துழைக்க மறுத்தாலும் கணேஷும் வஸந்தும் விசாரணையில் இறங்கி அவர் குற்றமற்றவர் என்பதைக் கண்டறிகின்றனர். கோர்ட்டில் வழக்கு நடக்க, டாக்டரைக் காப்பாற்ற தங்களால் இயன்றவரை வாதாடுகின்றனர்; போராடுகின்றனர்.
வழக்கின் போக்கில் டாக்டர் நரேந்திரன் அவர்களிடம் மனம் திறந்து பேசுகிறார். முதல் இரண்டு கேஸ்களிலும் தன் மீது தவறில்லை என்றாலும் மூன்றாவதான அந்தச் சிறுவன் ஒரு Child Prodigy. அவன் இறக்கும்படி விட்டது தனககுத் தோல்வி, அதனால் தான் தண்டனை அடைய விரும்புவதாகச் சொல்கிறார். இதனிடையில் கணேஷ்-வஸந்த் பொறிபறக்க திறமையாக வாதாடுவதைக் கண்டு இளவழகன் என்ற அரசியல் அல்லக்கை ஒருவன் வந்து அவர்கள் கேஸிலிருந்து விலக பேரம் பேசுகிறான். கணேஷ்-வஸந்த் வெகுண்டு அவனைத் திட்டி அனுப்பி விடுகின்றனர். ஒரு அரசியல்வாதி ஒரு பிரச்னையிலிருந்து மீள கண் துடைப்பிற்காக பொய் வியாதியைச் சொல்லி ஆஸ்பத்திரியில் அட்மிட்டாவதற்கு வர, அட்மிட் செய்ய நரேந்திரன் மறுத்தனால் வஞ்சம் வைத்து பழிவாங்கப்படுகிறார் என்பதை உணர்கின்றனர்.
கோர்ட்டில் நரேந்திரனுக்கு ஆதரவாக கணேஷ்-வஸந்த் சமர்ப்பிக்கும் சாட்சிகள் எல்லாம் பயமுறுத்தல் + பணம் காரணமாக பல்டி அடிக்கின்றனர். தீர்ப்புக்காக கோர்ட் கலையும் போது முன்பே தண்டனை தீ்ரமானிக்கப்பட்டது என்றும் தனக்கு என்ன தண்டனை விதித்து தீர்ப்பு வரும் என்பதை டாக்டரே சொல்கிறார். அப்போது இளவழகனுக்கு மாரடைப்பு வர, வஸந்தின் எதிர்ப்பையும் மீறி, டாக்டர் சிகிச்சை செய்கிறார். பின்னணியில் டாக்டர் சொன்ன அதே தீர்ப்பு நீதிபதியின் குரலில் ஒலிக்கிறது. நாடகம் நிறைகிறது.
நாடகம் என்பது பெரும்பாலும் வர்ணனைகள் குறைவாக வசனங்களிலேயே நகர்வதல்லவா..? அதிலும் கதையில் பாதி்க்கும் மேல் கோர்ட்டிலேயே நடப்பதால், வாதப் பிரதிவாதங்கள் அனல் பறககின்றன. சுஜாதவின் ஷார்ப்பான வசனங்கள் நாடகம் முழுதுமே மிகப் பிரமாதமாக இருக்கிறது. அசரவைக்கிறது. வஸந்த் கதாபாத்திரம் வடிவமைக்கப் பட்டிருக்கும் விதம். பொதுவாக ஜோக்கெல்லாம் அடித்துக் கொண்டிருககும் ஜாலியான இளைஞன் என்பதற்கும் மேலாக சமூக அக்கறையுள்ள ஒருவன் என்பதை நாடகம் அழகாகச் சித்தரிக்கிறது. கண்ணெதிரே பொய்ச் சாட்சிகளும், உண்மை மறைக்கப்பட்டு அநீதி கோலோச்சுவதைப் பார்த்து ஒரு கட்டத்தில் வஸந்த் கோபப்படுகிறார் பாருங்கள்...
நீதிபதி: மிஸ்டர் வஸந்த்! நீங்க சொல்றது எல்லாம் டோட்டலி இர்ரெலவன்ட் டு தி கேஸ்.
வஸந்த்: யுவர் ஆனர்! நீங்க எவ்வளவு வாங்கியிருக்கீங்க?
-எக்ஸலண்ட்! படிக்கும்போதே பிரமிக்க வைத்தது என்னை. வஸந்த் கேரக்டரை உயர்த்திப் பிடித்த இந்த நாடகம், டாக்டர் நரேந்திரனின் கதாபாத்திரமும் மனதில் இடம் பிடிக்கிறது. நீதியையும் நேர்மையையும் அரசியங்கற சக்தி (சாக்கடை?) எப்படியெல்லாம் தூக்கிச் சாப்பிடுகிறது என்கிற சமகால அவலத்தை அழுத்தமாய் மனதில் பதியவைத்தது இந்த நாடகம். நாவல் என்ற வடிவத்தில் சுஜாதா இதை எழுதியிருந்தால் இந்த Impact கிடைத்திருககாதோ என்றுதான் எனக்குத் தோன்றியது. Hats Off to Sujatha Sir! நீங்களும் இதைத் தவறாமல் பதிவிறக்கம் பண்ணி தவறாம படிச்சு ரசிககணும்கறது என்னோட சிபாரிசு மற்றும் விருப்பம். இனி, நான் ரசித்த வ்சனங்களில் சில:
* * *
வஸந்த் : பிராஸிகியூஷன் படி பாத்தா ஆஸ்பத்திரியில ருத்ரதாண்டவம் ஆடியிருக்கீங்க போலருக்கே...
* * *
டாக்டர் : எனக்கு டாக்டர்கள் மேல நம்பிக்கையில்ல.
வஸந்த் : அப்படிச் சொல்லிட்டா எப்படி? எனக்குக் கூடத்தான் டாக்டர்கள் மேல நம்பிக்கையில்ல. இருக்கிற டாக்டர் எல்லாம் கொள்ளை அடிக்கிறவங்கன்னு அபிப்ராயம். அதுக்காக என்னால சொந்தமா ஒரு கத்தியை எடுத்துண்டு அப்பெண்டிக்ஸ் ஆபரேஷன் பண்ணிக்க முடியுமா?
* * *
வஸந்த் : காப்பதற்கு ஆண் துணை இல்லாத பெண்களை ரேப்புதல் சுலபம்னு வள்ளுவர் சும்மாவா சொன்னார்?
கணேஷ் : ஏய்... உனக்கு விவஸ்தையே கிடையாதுடா. வள்ளுவர் உனககாக ஸ்பெஷலா குறள் எழுதி வெசசிருககாரா?
* * *
மஞ்சுளா : இப்ப வந்தது யாரு? அவரை எங்கேயோ பாத்த மாதிரி இருககு.
வஸந்த் : அவரை நீங்க எங்கே வேணாலும் பாக்கலாம்.
மஞ்சுளா : பேரு?
வஸந்த் : அரசியல்!
* * *
கணேஷ் : டாக்டர்! இந்த மூணு கேஸ்லயும் உங்க மனச்சாட்சிக்கு விரோதமா எதாவது நடந்திருககா?
டாக்டர் : இல்லே. மறுபடி இதே சூழ்நிலையில, இதே காரியங்களைத்தான் செய்திருப்பேன். மை கான்ஷியஸ் இஸ் க்ளியர்!
* * *
நீதிபதி : மிஸ்டர் வஸந்த்! என்னதான் சொல்ல விரும்பறீங்க? அந்த மருந்து யாரைக் குணப்படுத்தினா என்ன? எத்தனை விலையா இருந்தா என்ன? இந்தக் கேஸ்ல காலை வாரிடுத்து. இல்லையா?
வஸந்த்: (சற்று அலுப்புடன்) யுவர் ஆனர்! நான் காட்ட விரும்பறது... சொல்ல விரும்பறது... எல்லாம் ஒரே ஒரு...
நீதிபதி: (சிரித்து) நீங்க காட்ட விரும்பறதெல்லாம் நல்லா எனக்குத் தெரியுது. சுத்தி வளைக்காமே நேராக் கேளுங்க.
வஸந்த்: (கோபத்துடன்) ஆல்ரைட். நேராகவே கேக்கறேன். டாக்டர் பாலகிருஷ்ணன், இந்தக் கேஸை போலீஸ் எடுத்துக்கிட்டு கோர்ட்லே கொண்டு வர்றதுக்கு எவ்வளவு லஞ்சம் கொடுத்தீங்க?
நீதிபதி: (அதட்டி) மிஸ்டர் வஸந்த்! திஸ் இஸ் தி லிமிட்!
* * *
விட்டா... முழு நாடகத்தையுமே எழுதிடுவேன் போலருக்கு. பதிவு நீண்டுட்டதால இத்தோட ஃபுல்ஸ்டாப் வைக்கறேன். நிரூ நல்ல தமிழ்ல எழுதிப் பழகணும்னு ஒரு Friend கருத்துச் சொல்லியிருந்ததால ரொம்ப கஷ்டப்பட்டு, முடிஞ்சவரை ஆங்கிலம் தவிர்த்து இந்தப் பதிவை நல்ல தமிழ்ல எழுதியிருக்கேன். இந்த Writing Style ஓ.கே.வா?
நீதிபதி: மிஸ்டர் வஸந்த்! நீங்க சொல்றது எல்லாம் டோட்டலி இர்ரெலவன்ட் டு தி கேஸ்.
வஸந்த்: யுவர் ஆனர்! நீங்க எவ்வளவு வாங்கியிருக்கீங்க?
-எக்ஸலண்ட்! படிக்கும்போதே பிரமிக்க வைத்தது என்னை. வஸந்த் கேரக்டரை உயர்த்திப் பிடித்த இந்த நாடகம், டாக்டர் நரேந்திரனின் கதாபாத்திரமும் மனதில் இடம் பிடிக்கிறது. நீதியையும் நேர்மையையும் அரசியங்கற சக்தி (சாக்கடை?) எப்படியெல்லாம் தூக்கிச் சாப்பிடுகிறது என்கிற சமகால அவலத்தை அழுத்தமாய் மனதில் பதியவைத்தது இந்த நாடகம். நாவல் என்ற வடிவத்தில் சுஜாதா இதை எழுதியிருந்தால் இந்த Impact கிடைத்திருககாதோ என்றுதான் எனக்குத் தோன்றியது. Hats Off to Sujatha Sir! நீங்களும் இதைத் தவறாமல் பதிவிறக்கம் பண்ணி தவறாம படிச்சு ரசிககணும்கறது என்னோட சிபாரிசு மற்றும் விருப்பம். இனி, நான் ரசித்த வ்சனங்களில் சில:
* * *
வஸந்த் : பிராஸிகியூஷன் படி பாத்தா ஆஸ்பத்திரியில ருத்ரதாண்டவம் ஆடியிருக்கீங்க போலருக்கே...
* * *
டாக்டர் : எனக்கு டாக்டர்கள் மேல நம்பிக்கையில்ல.
வஸந்த் : அப்படிச் சொல்லிட்டா எப்படி? எனக்குக் கூடத்தான் டாக்டர்கள் மேல நம்பிக்கையில்ல. இருக்கிற டாக்டர் எல்லாம் கொள்ளை அடிக்கிறவங்கன்னு அபிப்ராயம். அதுக்காக என்னால சொந்தமா ஒரு கத்தியை எடுத்துண்டு அப்பெண்டிக்ஸ் ஆபரேஷன் பண்ணிக்க முடியுமா?
* * *
வஸந்த் : காப்பதற்கு ஆண் துணை இல்லாத பெண்களை ரேப்புதல் சுலபம்னு வள்ளுவர் சும்மாவா சொன்னார்?
கணேஷ் : ஏய்... உனக்கு விவஸ்தையே கிடையாதுடா. வள்ளுவர் உனககாக ஸ்பெஷலா குறள் எழுதி வெசசிருககாரா?
* * *
மஞ்சுளா : இப்ப வந்தது யாரு? அவரை எங்கேயோ பாத்த மாதிரி இருககு.
வஸந்த் : அவரை நீங்க எங்கே வேணாலும் பாக்கலாம்.
மஞ்சுளா : பேரு?
வஸந்த் : அரசியல்!
* * *
கணேஷ் : டாக்டர்! இந்த மூணு கேஸ்லயும் உங்க மனச்சாட்சிக்கு விரோதமா எதாவது நடந்திருககா?
டாக்டர் : இல்லே. மறுபடி இதே சூழ்நிலையில, இதே காரியங்களைத்தான் செய்திருப்பேன். மை கான்ஷியஸ் இஸ் க்ளியர்!
* * *
நீதிபதி : மிஸ்டர் வஸந்த்! என்னதான் சொல்ல விரும்பறீங்க? அந்த மருந்து யாரைக் குணப்படுத்தினா என்ன? எத்தனை விலையா இருந்தா என்ன? இந்தக் கேஸ்ல காலை வாரிடுத்து. இல்லையா?
வஸந்த்: (சற்று அலுப்புடன்) யுவர் ஆனர்! நான் காட்ட விரும்பறது... சொல்ல விரும்பறது... எல்லாம் ஒரே ஒரு...
நீதிபதி: (சிரித்து) நீங்க காட்ட விரும்பறதெல்லாம் நல்லா எனக்குத் தெரியுது. சுத்தி வளைக்காமே நேராக் கேளுங்க.
வஸந்த்: (கோபத்துடன்) ஆல்ரைட். நேராகவே கேக்கறேன். டாக்டர் பாலகிருஷ்ணன், இந்தக் கேஸை போலீஸ் எடுத்துக்கிட்டு கோர்ட்லே கொண்டு வர்றதுக்கு எவ்வளவு லஞ்சம் கொடுத்தீங்க?
நீதிபதி: (அதட்டி) மிஸ்டர் வஸந்த்! திஸ் இஸ் தி லிமிட்!
* * *
விட்டா... முழு நாடகத்தையுமே எழுதிடுவேன் போலருக்கு. பதிவு நீண்டுட்டதால இத்தோட ஃபுல்ஸ்டாப் வைக்கறேன். நிரூ நல்ல தமிழ்ல எழுதிப் பழகணும்னு ஒரு Friend கருத்துச் சொல்லியிருந்ததால ரொம்ப கஷ்டப்பட்டு, முடிஞ்சவரை ஆங்கிலம் தவிர்த்து இந்தப் பதிவை நல்ல தமிழ்ல எழுதியிருக்கேன். இந்த Writing Style ஓ.கே.வா?