Pages

Ads 468x60px

26 April 2012

‌என் எருமை ஏஞ்சல்!

ஞ்சல் பேர்ல மட்டும் ஏஞ்சல் இல்லீங்க... அழகுலயும் அப்படித்தான். எங்க காலேஜ்லயே ப்ரைட் ஃபிகர்! பசங்கல்லாம் பயங்கரமா ‌ஜொள்ளு விடுவாங்க. எல்லாம் போன மாசம் வரைதான்... இப்ப அவ ஃப்ரெண்ட்ஸும் மத்தவங்களும் அவளை ‘எருமை ஏஞ்சல்’ன்னு கூப்பிட்டுக் கிண்டல் பண்றப்ப... எதுவும் செய்ய முடியாம பல்லைக் கடிச்சுககிட்டு ஓடிடறா. அவ பேரோட இந்த எருமை வந்து ஒட்டிக்கிட்டது இருக்கே... அதுவே தனிக் கதை! ‘என்ன கதை அது?’ன்னு நீங்க சொல்றது எனக்குக் கேக்குது. சொல்றேன்...

போன மாசத்துல ஒரு நாள் சைதாப்பேட்டை ஏரியாவுல அவ ஸ்கூட்டியில போயிட்டிருந்தாங்க. வண்டியை ஒரு கடை வாசல்ல நிறுத்திட்டு வந்து பாத்தா... வண்டி கவுத்துப் போட்ட கரப்பாம் பூ்ச்சியாட்டம் கீழ விழுந்து கிடக்கு. பக்கத்துல ஒரு எருமை அசால்ட்டா வண்டியை மோந்து பாத்து ஆராய்ச்சி பண்ணிட்டிருக்கு. கடுப்பாகிப் போன ஏஞ்சல், பின்னாடியே வந்து எருமையப் பிடிச்ச எருமையோட ஓனரைப் பாத்து கன்னாபின்னான்னு கத்த ஆரம்பிக்க ஒரு கூட்டமே கூடிடுச்சுங்க...

‘‘என்னம்மா... என்னாச்சு?’’ன்னு முன்னால வந்தாரு குண்டான குள்ளமான ஒரு ஆளு. பட்டையக் கிளப்பற வெயில்ல அவர் வழுக்கைத் தலை டாலடிக்க, கையால கண்ணை மறைச்சுக்கிட்டே பேசினா ஏஞ்சல். ‘‘பாருங்க ஸார்... நான் ஸ்கூட்டியைப் பார்க் பண்ணிட்டு இந்தக கடையில சுருட்டு வாங்கப் போனேன்... அப்ப...’’

அந்த ஆள் அதிர்ச்சியில அலறியிருக்கான்- ‘‘பொம்பளைங்க சிகரெட் பிடிக்கிறதே அநியாயம். இதுல சுருட்டு வேற பிடிப்பியா நீ? கலிகாலம்!’’ன்னு.  இவளானா தலையில அடிச்சுக்கிட்டு, ‘‘எனக்கு இல்ல ஸார்... எங்க தாத்தாவுக்கு. சுருட்டு வாங்கிட்டு வந்தா, இந்த ஆளோட எருமை இடிச்சு, என் ஸ்கூட்டியைத் தள்ளி விட்டிருக்கு. பாருங்க... ஹெட்லைட்டே ‌உடைஞ்சு நொறுங்கியிருக்கு. மரியாதையா இந்த ஆளை நூத்தம்பது ரூபாயை எடுத்து வெக்கச் சொல்லுங்க...’’ன்னு கத்தியிருக்கா.

அந்த ஆள், எருமைக்காரனைப் பாத்து, ‘‘அவங்க சொல்றது நியாயம்தானேப்பா. நீ பணம் குடுத்துத்தான் ஆகணும்...’’ அப்படின்னு சொல்ல, ‘‘நான் என்ன மாட்டேன்னா சொன்னேன்? கொத்தவால் சாவடித் தெருவுல இருககற என் வீட்டுக்குப் போயி எடுத்துட்டு வரணுங்க... இவங்க இப்பவே பணத்தக் குடுன்னுல்ல வம்பு பண்றாங்க...’’ன்னு சொல்லியிருக்கான். அந்த வழுக்கைத் தலையர் எருமைககாரனுக்கு சப்போர்ட் பண்ணி, ‘‘சரி, நீ போய் பணத்தை எடுத்துட்டு வா. ஆனா அதுவரைக்கும உன் எருமை இங்கதான் இருக்கணும்’’ன்னு சொல்லவும், எருமைக்காரன், ‘‘சரி ஸார்... முருகனை பத்திரமா பாத்துக்கங்க...’’ன்னிருக்கான்.

வழுக்கைத் தலையருக்கு வந்ததே கோபம்... ‘‘ஏன்யா... எருமைக்கு வைக்கறதுக்கு உனக்குப் பேரா கிடைக்கல..? இதுக்கப் போயி முருகன்னு நல்ல பேரா?’’ன்னு கத்தியிருக்காரு. அவன் எதுவும் புரியாம, ‘‘உங்களுக்கு என்னங்கய்யா இதுல கஷ்டம்?’’ன்னு கேக்க, அவர் தர்மசங்கடமா, ‘‘என் பேரும் முருகன்தான்யா...’’ன்னு சொல்லியிருக்காரு. ஏஞ்சல் சிரிப்பை அடக்க முடியாம சிரிச்சுட்டா. எருமைக்காரன் ‘ஙே’ன்னு முழிச்சுக்கிட்டே அங்கருந்து கிளம்பிப் போயிருக்கான்.

ரை மணி நேரம் ஆச்சு... அந்த ஆள் வரலை. இவ, ‘‘இப்ப என்ன பண்றது ஸார்?’’ன்னு கூட இருந்த வழுக்கையரைக் கேக்க, ‘‘கொத்தவால் சாவடித் தெருவுன்னுதானே சொன்னான். அங்கயே போய்டலாம். முருகன் இருக்கற வரை நீ கவலைப்படாத’’ன்னு சொல்ல, அவ அப்பாவியா, ‘‘எந்த முருகனைச் சொல்றீங்க ஸார்?’’ன்னு கேட்டிருக்கா. அவர் தலையில அடிச்சுக்கிட்டு, ‘‘எருமையச் சொன்னேன்மா. இதை வாங்க அவ்ன் பணம் குடுத்துத்தானே ஆகணும்? இதோட கயித்தைப் புடிச்சுக்கிட்டு கூடவே வா’’ன்னுட்டு நடக்க ஆரம்பிச்சுட்டாரு. இவளும் வேற வழியில்லாம அவர் பின்னாலேயே எருமைக் கயித்தைப் புடிச்சு அதை இழுத்துட்டுப் போயிருக்கா.
அவ கெட்ட நேரம்... அப்ப பாத்துத்தானா காலேஜ்ல அவளைப் பாத்து ஸின்ஸியரா லவ் பண்றேன்னு ‌லிட்டர் லிட்டரா ஜொள்ளு விட்டுட்டிருக்கற சுரேஷ் எதிர்ல வரணும்? அவன் இவ நடந்து வந்த கோலத்தைப் பாத்து குபீர்னு சிரிச்சு, ‘‘உங்கப்பாவும், எங்கப்பா மாதிரியே நீ படிக்கறதுக்கு லாயக்கில்லை, மாடு மேயக்கத்தான்டி லாயக்குன்னு திட்டிட்டாரா? இவ்வளவு சீரியஸா செயல்ல இறங்கிட்டியே...’’ன்னு கேட்ருக்கான். இவ அழுதுட்டா. நடந்ததை அவன்கிட்ட சொல்லிட்டு, ‘‘வேணா இவரைக் கேட்டுப் பாரு’’ன்னு திரும்ப, அந்த வழுக்கையர் எஸ்கேப் ஆயிட்டது அப்பத்தான் தெரிஞ்சிருக்கு. இந்த நேரம் பாத்து, ஒரு டாடா சுமோ பக்கத்துல வந்து ஹாரன் அடிக்க, எருமை மிரண்டு ஓடியிருக்கு.

‘‘ஐயோ... சுரேஷ் உடனே அதைப் பிடி...’’ன்னு இவ கத்த, அவன் எருமை பின்னால ஓட, இவளும் ‘புடிங்க.. புடிங்க...’’ன்னு கத்திக்கிட்டு பின்னாடியே ஓடியிருக்கா. எதிர்ல வந்த மூணு யூத்ஸ் ‘சுரேஷ், இவகிட்ட வம்பு பண்ணிட்டு ஓடி வர்றான் போலருக்கு, அதான் அவனைப் புடிக்கச் சொல்றா’ன்னு நினைச்சு, அவனைப் புடிச்சு செம சாத்து சாத்த ஆரம்பிச்சிருக்காங்க. அவன் ‘‘ஐயோ, அம்மா’ன்னு அலற... இவ போய் அவங்க கிட்ட விளக்கிச் சொல்லி, அவனைக் காப்பாத்தியிருக்கா.

நல்லவேளையா... எருமைக்காரன் எதிர்ல வந்ததால அது அடங்கி அவன் பக்கத்துல போய் நின்னுடுச்சு. அவன், ‘‘என்னம்மா இப்படிப் பண்ணிட்டீங்க?’’ன்னு புலம்பிக்கிட்டே பணத்தைக் குடுத்துட்டு எருமையக் கூட்டிட்டுப் போயிட்டான். இவள் ஸ்கூட்டிய எடுத்துட்டு வீட்டுககு வந்துட்டா. அடுத்த நாள் காலேஜ்ல இவகிட்ட வழிஞ்ச சுரேஷை கண்டுக்காம ஏஞ்சல் போனதுல, அவன கடுப்பாகி இந்த ‘எருமை’ மேட்டரை விரிவா எல்லார் கிட்டயும் பத்த வெச்சுட்டான்.

பசங்கல்லாம் அவளைப் பாத்தாலே ‘எருமை ஏஞ்சல்’ன்னு கூப்பிட்டு டீஸ் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. நாங்க கேர்ள்ஸ் மட்டும் அப்படிக் கூப்பிடறதில்லை. எனக்கு யார் மேலயாவது கோபம் வந்தா, ‘‘ச்சீ போ எருமை’’ன்னு சொல்ற பழக்கம் இருந்தது. ஒரு தடவை அவளைக் கோவிச்சுக்கிட்டு அந்த வார்த்தையச் சொல்லிட, அவ நான் கிண்டல் பண்றேன்னு நினைச்சு அழுதுட்டுப் போயிட்டா. அப்புறம் அவளை சமாதானம் பண்ணிப் பேச வெக்கறதுக்கே ஒரு வாரம் ஆச்சுங்க...  இப்பல்லாம் நான் மறந்து கூட யாரையும் ‘போ, எருமை’ன்னு திட்டறதில்லைங்க! நெசமா...!

பேஸ்புக் வழியாகவும் கருத்திட வாங்க

42 comments:

  1. நல்ல இருக்குங்க...நிஜத்துல நடந்ததா...இல்லே கற்பனை எருமையை சாரி..குதிரையை தட்டி விட்டிடீங்களோ ...?

    அருமை...

    ReplyDelete
    Replies
    1. ‘மோதின எருமையோட ஓனர்கிட்ட டாமேஜ் வாங்கிட்டேன்ல’ என்று ஃப்ரெண்ட் சொல்லியது நிஜம். அதற்கு மேல் தறிகெட்டு ஓடியது என் கற்பனை எருமை, ஸாரி, குதிரை... எருமையை அருமைன்னு ‌ரைமிங்கோட சொல்லிப் பாராட்டினதுக்கு Many Many Thanks to you!

      Delete
  2. hahahahaha ஜயோ பாவம் அந்த பொண்ணு
    இனிமேலாவது கிணடல் பண்ணாம இருங்கப்பா
    ஏஞ்ஞலயும் அந்த எருமையையும் றொம்ப விசாரிச்சன் என்டு சொல்லுங்க...

    ReplyDelete
    Replies
    1. நான் கிண்டல் பண்ண மாட்டேன். ப்ரெண்டாச்சுதே! எஸ்தர் விசாரிச்சதா சொல்லிடறேன் நிச்‌சயமா...! Many Many Thanks to you!

      Delete
  3. எருமையான பகிர்வு... :) அட அருமையான பகிர்வு சொல்ல வந்தேன் நிரஞ்சனா. நானும் ஒரு பதிவு போட்டேன் கொஞ்ச காலத்திற்கு முன்.... முடிந்தால் படியுங்களேன்.

    http://venkatnagaraj.blogspot.in/2012/03/blog-post_14.html

    நல்ல கற்பனா சக்தி உங்களுக்கு. ”எருமை வாலைப் பிடித்து ஓடிய ஏஞ்சல்” காட்சியை கற்பனை செய்து பார்த்தேன் - ஏரியாவே அல்லோகலப் பட்டு இருக்குமே... :)

    ReplyDelete
    Replies
    1. Ha... Ha... நானும்கூட இப்படி ஒரு மாடர்ன் கேர்ள் ரோட்ல வந்தா எப்படியிருக்கும்னு நினைச்சதுலருந்துதான் விரிவா எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் சேர்த்து எழுதினேங்க. உங்களுக்கும் பிடிச்சிருந்ததுல... I Feel Happy and My heartful Thanks to you!

      Delete
  4. // கையால கண்ணை மறைச்சுக்கிட்டே பேசினா ஏஞ்சல் //
    இந்த லைன் நல்ல இருக்கு. over all story telling is superb...you are improved a lot...becoming like a trained writer keep it up.

    // முருகன் இருக்கற வரை நீ கவலைப்படாதன்னு சொல்ல, அவ அப்பாவியா, // this line is simply supb...

    ReplyDelete
    Replies
    1. Oh, ரசிச்ச வரிகளைச் சொல்லி நீங்க பாராட்டினதுலருந்து எனக்கு நிறைய ஐடியாஸ் தோணுது. எழுதறதுக்கு எனக்கு Energy Tonic குடுத்த உஙகளுக்கு My Heartful Thanks Friend!

      Delete
  5. சுவாரஸ்யமான பகிர்வு..சரளமாக படிப்பதற்கு ஈஸியா இருக்குங்க..தொடருங்கள், வாழ்த்துக்களோடு என் நன்றிகள்,

    ReplyDelete
    Replies
    1. சுவாரஸ்யமான பகிர்வுன்னு சொல்லி என்னைப் பாராட்டி, வாழ்த்தின உங்களுக்கு என்னுடைய Heartful Thanks!

      Delete
  6. //அவன் இவ நடந்து வந்த கோலத்தைப் பாத்து குபீர்னு சிரிச்சு, ‘‘உங்கப்பாவும், எங்கப்பா மாதிரியே நீ படிக்கறதுக்கு லாயக்கில்லை, மாடு மேயக்கத்தான்டி லாயக்குன்னு திட்டிட்டாரா? இவ்வளவு சீரியஸா செயல்ல இறங்கிட்டியே...’’ன்னு கேட்ருக்கான். இவ அழுதுட்டா. //

    எ[அ]ருமையான பதிவு. பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. // எ[அ]ருமையான பதிவு. பாராட்டுக்கள். // அருமை

      Delete
    2. அருமையான பதிவென்று ரசித்துப் பாராட்டிய வை‌.கோ. Uncleக்கு with Full of my Heart a lot of Thanks!

      Delete
    3. Thank you verymuch for your nice encouragements Seenu Sir!

      Delete
  7. எருமைய பத்தி அருமையா பதிவு அற்ப்புதம் மா . மறுபடியும் சிரிச்சி ஒரு வழியாகிட்டேன் .

    ReplyDelete
    Replies
    1. உங்களை மாதிரி நல்லா Think பண்ணி சீரியஸா எதாச்சும் எழுதலாம்னு ட்ரை பண்ணினா நிரூவால முடியல சசிக்கா. நமக்கு இதான் வருது. What to do? ஆனாலும் சிரிச்சி ஒரு வழியாகிட்டேன்னு நீங்க சொன்னது எனக்கு ரொம்பத் தெம்பா இருக்கு. Many Many Thanks to you!

      Delete
  8. அருமை.... நல்ல பதிவு... எருமை ஏஞ்சல் எப்படி இருகாங்க....?

    ReplyDelete
    Replies
    1. Actually... அவ பேர் ஏஞ்சல் இல்ல... எஸ்தர்! அந்தப் பேரை கதையில எழுதினா, நம்ம எஸ்தர் சபி படிச்சுட்டு கட்டையால என்னை அடிப்பாங்களேன்னுதான் ஏஞ்சல்னு பேர் சூட்டிட்டேன். Ha... Ha... ரசிச்சுப் பாராட்டின உங்களுக்கு My Heartful Thanks!

      Delete
  9. சிறு வயதிலேயே நல்ல கற்பனை... நகைசுவை யாக இருந்தது.. அருமை..

    ReplyDelete
    Replies
    1. நகைச்சுவையை ரசிச்சுப் பாராட்டி, என் கற்பனை வளத்துக்கு் Tonic கொடுத்த உங்களுக்கு Many Thanks with full of my heart!

      Delete
  10. நிரஞ்சனாக்குட்டி நானும் இனி யாரையும் எருமையெண்டு திட்டமாட்டேன்.எருமை சொல்ல வரேக்கையெல்லாம் இனி உங்கட ஞாபகம்தான் வரப்போகுது !

    ReplyDelete
    Replies
    1. Ha... Ha... எப்படியும் நிரூவோட ஞாபகம் உங்களுக்கெல்லாம் இருந்தால் அதுவே போதும். Thank you verymuch for your encouraging visit!

      Delete
  11. பிரமாதம் நிரஞ்சனா. உங்க கற்பனா சக்தி சூப்பர். பாவம் ஏஞ்சல்.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்குப் பிடிச்சிருந்ததுல எனக்கு ரொம்ப ரொம்ப Happy! Many more thanks to you!

      Delete
  12. நான் அவ்வளவாக சிரிக்க மாட்டேன்.
    உம்மனா மூஞ்சின்னே நிறையபேர் சொல்லுவாங்க.
    ஆனால் இன்னைக்கு உங்க கதையைப் படிச்சிட்டு
    ரொம் நாளைக்குப் பிறகு வாய்விட்டு சிரிச்சேன்.

    நன்றி நிரஞ்சனா.

    ReplyDelete
    Replies
    1. அட... வார்த்தைக்குச் சொல்லலீங்க... Really, நீங்க சொல்லியிருக்கிறதைப் படிச்சதும் எனக்கே என் மேல ஒரு Confidence வருது. இன்னும் நல்லா எழுதணும்னு ஒரு Desire வந்துடுச்சு. எல்லாத்துக்கும் காரணமான உங்களுக்கு... Many Many Many Thanks from full of my heart!

      Delete
  13. சிரித்தேன் ரசித்தேன் நிரஞ்சனா?இனி எருமை மாடை பார்த்தால் நிரூவின் இந்த பதிவுதான் வரும் நினைவுக்கு.

    அப்படியே உங்கள் காலேஜ் மேட் ஏஞ்சல் http://www.youtube.com/watch?v=gRMRIf8MAb0 இந்தப்பாடலையும் வாய் விட்டு பாடிக்கொண்டு போனால் இன்னும் நல்லா இருந்திருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. Dear S.S. எருமை மாட்டைப் பாத்தால் மட்டும்தான் நிரூவின் நினைவா? எப்பவும் நிரூ உங்க மனசுல இருக்கணும்கறதுதான் என் பேராசை! அழகா ஒரு பாட்டைச் சொல்லியிருக்கீங்களே... ‘என் எருமைக கன்னுக்குட்டி’யைப் பாத்து ரொம்பவே ரசிச்சேன். (என்ன படம்க்கா?) என்னை Refresh பண்ணிக்கற மாதிரி தட்டிக் கொடுத்த உங்கள் வருகைக்கு My Heartful Thanks!

      Delete
    2. இனி எருமை மாடை பார்த்தால் நிரூவின் இந்த பதிவுதான் வரும் நினைவுக்கு//நிரூ நோட் இட்..நான் நிரூ என்று சொல்லவில்லை.நிருவின் பதிவு என்றுதான் சொல்லி இருக்கிறேன்.இப்ப சந்தோஷமா?அந்தப்பாடல் இடம் பெற்ற படம் மந்திரகுமாரி.ஒரு தடவை தொலைக்காடசியில் தேனும் பாலும் நிகழ்ச்சியில் பார்த்த்தில் இருந்து அப்பாடலை மிகவும் பிடித்துப்போய் விட்டது.

      Delete
  14. நிரூ குட்டி உன் பதிவை படிச்சதும், என் பள்ளி தோழியின் நினைப்பு வந்துட்டுது. அவ என்னை ஆசையா எருமை மாடேன்னுதான் கூப்பிடுவா அவ்வ்வ்வ்வ்வ். இப்போ எங்கிருக்காளோ?!

    ReplyDelete
    Replies
    1. என்னைல்லாம் வீட்ல செல்லமா அம்மா ‘கழுதே’ன்னுதான் கூப்பிடுவாங்க. உங்க ஃப்ரெண்ட் ‘எருமை’ம்பாங்களா? எங்கருந்தாலும் நல்லா இருப்பாங்கன்னு நினைப்போம். Okva? Many Many Thanks to you!

      Delete
  15. கருமையான
    எருமை பற்றிப்
    பெருமை கொள்ளவைக்கும்
    அருமையான பதிவு !

    ReplyDelete
    Replies
    1. Hai, உங்க கருத்தே ஒரு கவிதை போல அவ்வளவு அழகா இருக்கு. Many More Thanks to you!

      Delete
  16. ஃஃஃபொம்பளைங்க சிகரெட் பிடிக்கிறதே அநியாயம். இதுல சுருட்டு வேற பிடிப்பியாஃஃஃஃ

    விடுங்க விடுங்க ஆசையோட செத்தால் அப்புறம் பேயாக அலைவாங்களாம்...

    ReplyDelete
    Replies
    1. ஹா... ஹா... நல்லாச் சொன்னீங்க போங்க. ஆண்கள் சிகரெட் பிடிககிறதையே என்னால சகிச்சுக்க முடியல. இதுல பெண்கள் சிகரெட்... சுருட்டு... எல்லாம் கற்பனையோடவே இருக்கட்டும் Friend! Many Many Thanks for your encouraging visit and comment!

      Delete
  17. ரசிக்க வைத்த பதிவுங்க

    ReplyDelete
    Replies
    1. ரசித்தீங்கன்றதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்! உங்களுககு My Heartful Thanks!

      Delete
  18. உண்மையை விட கற்பனை மிக காமெடி. உங்கள் எழுத்து நடை நகைச்சுவைக்கு நன்றாக ஒத்துழைக்கிறது. நன்றி

    ReplyDelete
    Replies
    1. ஹய்யா... என் எழுத்து நடையைப் பாராட்டியிருக்கீங்களே பாலா ஸார்! ரொம்ப Happy and Energeticஆ ஃபீல் பண்றேன். Many Many Thanks to you!

      Delete
  19. ரொம்ப ரசிச்சு படிச்சேன். நல்லா இருந்தது..

    ReplyDelete
  20. என் எருமை ஏஞ்சல்! தலைப்பே சூப்பர் போங்க

    ReplyDelete

படிச்சது பிடிச்சிருந்ததா இல்லையான்னு ஒரு வார்த்தை சொல்லிட்டுத் தான் போங்களேன்.. I am Waiting eagerly!

 

கலை அக்கா தந்த பரிசுகள்!

கலை அக்கா தந்த பரிசுகள்!

என் தோழி விஜி தந்த விருது!

என் தோழி விஜி தந்த விருது!