Pages

Ads 468x60px

Showing posts with label பார்த்தது. Show all posts
Showing posts with label பார்த்தது. Show all posts

1 June 2012

நவீன நரகாசுர ஊர்வலங்கள்!


ரொம்ப நாளா என் மனசுல உறுத்திட்டிருக்கற விஷயத்தை இப்ப உங்ககூட பகிர்ந்துக்கப் போறேன். முந்தா நாளா நான் மைலாப்பூர்லருந்து தி.நகருக்கு பஸ்ல வந்துட்டிருந்தேன். அப்போ ரோட்ல எதிர்ல ஒரு சவ ஊர்வலம் கிராஸ் பண்ணிச்சு. நடுரோட்டில வெடிகளை வெடிச்சு, டிராஃபிக்கை ஸ்தம்பிக்க வெச்சுட்டு கிராஸ் பண்ணினாங்க. 

முன்னால ‘உற்‌சாகத்தோட’ ஆடிட்டு வந்த ரெண்டு பேரு மாலையில இருந்து பூக்களைப் பிச்சு சுத்திலும் எறிஞ்சுட்டே போனாங்க. அதில ஒரு பூ ஜன்னலோரம் உட்கார்ந்திருந்த என் மடில வந்து விழ... அருவெறுப்போட தூக்கி எறிஞ்சேன். அந்த சவ ஊர்வலம் கிராஸ் பண்ணி, ட்ராஃபிக் கிளியராகி பஸ் நகர்றதுக்குள்ள எனக்கு லேசா மயக்கமே வந்துடுச்சு.

பொதுவா... நம்மைச் சேர்ந்த சொந்தங்கள்ல ஒண்ணு பிரிஞ்சிடுச்சுன்னா... அது பெரிய வேதனை இல்லையா? அந்த நபரின் இறுதி ஊர்வலம் அமைதியாத்தா‌னே நடக்கணும்? புராண காலத்துல நரகாசுரன்னு ஒருத்தன் தான் இறந்த தினத்தை மக்கள் துக்கம் எதுவுமில்லாம பட்டாசு வெடிச்சு, ஸ்வீட் சாப்பிட்டு கொண்டாடணும்னு வரம் கேட்டானாம். அதான தீபாவளின்னு ஒரு விஷயம் கேள்விப்பட்டிருக்கேன்.

 இப்படி இறந்தவரோட சவ ஊர்வலத்துல வெடியெல்லாம் வெடிச்சு கொண்டாடிட்டுப் போனா, அவங்க இறப்பினால உறவினர்களுக்கு துக்கம் இல்லை... சாவைக் கொண்டாடறாங்கன்னுதானே அர்த்தம் ஆவுது? இறந்து போனவங்க நரகாசுரன் மாதிரி ஏதாவது அசுரர்களா என்ன?

இந்த என் ஆதங் கத்தை எங்கம்மா கிட்ட (வழக்கம்போல) ஷேர் பண்ணிக் கிட்டப்ப ஒரு விஷ யம் சொன்னாங்க. ‘‘நிரூமா! மன்னர்கள் காலத்துல எல்லாம் முறையான சாலை கள் கிடையாது. வெளியூர்லருந்து வர்ற உறவினர்கள் ரோட்ல பூ கிடக்கறதைப் பாத்தா, பிண ஊர்வலம் புறப்பட்டுடுச்சுன்னு தெரிஞ்சுக்கிட்டு, அந்தப் பூக்களை ஃபாலோ பண்ணி, மயானத்துக்கு வருவாங்க. அதுக்காகத்தான் பாதையில பூக்களைத் தூவிக்கிட்டுப் போனாங்க. இதைத் தவிர பூக்களைத் தூவி இறந்தவரை சொர்க்கத்துக்கு அனுப்பறதுன்னும் ஒரு நம்பிககை உண்டு’’ அப்டின்னாங்க. முன்னோர்கள் காலத்துல ரோட்டு வசதி இல்லாததால அப்படிப் பண்ணினாங்கன்னா... இப்பவும் என்ன, ஏதுன்னு எதுவும் யோசிக்காம அதை அப்படியே தொடரணுமா என்ன?

இறந்த உடலை அதிக நாட்கள் வீட்ல வெச்சுக்காம உடனே புதைக்கவோ, எரிக்கவோ செய்யறதுக்குக் காரணமே இறந்த உடல்களிலிருந்து பரவும் கிருமித் தொற்று அதிகம்கறதுதான். அப்படிப்பட்ட பிணங்களின் மேல போடப்பட்ட மாலைகளை பிய்ச்சு, ரோடு பூரா எறிஞ்சுட்டுப் போறது என்ன நாகரீகம்னு புரியலை. பூவோட இதழ்களை உதிர்த்தாக் கூட கொஞ்சம் பரவாயில்லன்னு சொல்லலாம். பூக்களையே சுத்துப்பக்கம் யார் இருக்காங்கன்னுகூட கவனிக்காம, இப்படி வெறித்தனமா வீசிட்டுப் போறங்களே... என்ன அநியாயம்!

இந்த மாதிரி ஆர்ப்பாட்டம் பண்ணிட்டு, மத்தவங்களுக்குத் தொல்லை கொடுத்துட்டுப் போறவங்களுக்கு ‘நம்ம -------- இறந்தப்ப. சும்மா அமர்க்களமா எடுத்துட்டுப் போயி ஊ‌ரையே கலக்கிட்டோம்ல...’ என்று பெருமையடித்துக் கொள்வதைத் தவிர வேறு என்ன பிரயோஜனம்னு தெரியலை! இப்படி மத்தவங்களை எரிச்சலும் கோபமும் பட வெச்சுட்டு இறப்பு ஊர்வலம் நடத்தணும்னு எந்த மதத்திலயும், எந்த ஆன்மீக புத்தகங்களும் சொன்னதா எனக்குத் தெரியலை.

நான் பார்த்த ஒரு சினிமாவுல அதோட கதாநாயகி ரோட்ல ஆம்புலன்ஸ் கிராஸ் பண்றதைப் பார்த்தா, அதுல போறவங்களுக்கு என்ன கஷடமோ, அது உடனே சரியாகணும்னு சாமிகிட்ட ஒரு செகண்ட் வேண்டிக்கிட்டு அப்புறம்தான் நடப்பான்னு ஒரு விஷயம் சொல்லியிருந்தாங்க. அது எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அதுமாதிரி சவ ஊர்வலங்கள் கிராஸ் பண்ணினா, ‘ஐயோ பாவம், யாரோ என்னவோ... ஒரு உயிர் போயிடுச்சே’ன்னு மனசுல பரிதாபமும் துயரமும் வரணும். இந்த மாதிரி ஊர்வலங்களைப் பாக்கிறப்பல்லாம் எனக்கு அந்தச் சவங்களின் மேலேயே வெறுப்பும் கோபமும்தான் வருது.

‘‘ரொம்பக் கொடூரமா சிந்திக்கறடி நீ’’ன்னு எத்தனை பேர் என்னை அடிக்கப் போறீங்களோ... இல்ல, ‘‘சரியாச் சொன்ன நிரூ!’’ன்னு எத்தனை பேர் கை குலுக்கப் போறீ்ங்களோ... தெரியலை. ஆனா... இந்த விஷயத்தை உங்க எல்லார் கிட்டயும் பகிர்ந்துக்கிட்டதுல எனக்கு மனசு ரொம்ப லேசாயிடுச்சு. பொறுமையாப் படிச்சதுக்கு ரொம்ப தாங்க்ஸ்!
மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "நவீன நரகாசுர ஊர்வலங்கள்!"

30 May 2012

கதை சொல்லப் போறேன்!

ஹாய்... ஒரு பழைய்ய புத்தகத்துலருந்து ‘சுட்ட’ கேள்வியை நான் இங்க குடுத்திருக்கேன். ரொம்ப ஸிம்பிளான இந்தக் கேள்விக்கு விடை கண்டுபிடிக்கணும் நீங்க. யோசிச்சுக கண்டுபிடிச்சுட்டா, எனக்குச் சொல்லுங்க. சாக்லெட் தர்றேன்.
 
 
 
இப்ப... கணக்குப் போடற வரைக்கும் உங்களுக்கு போரடிக்காம இருக்க ஒரு கதை சொல்லப் போறேன்.

கதறிய கழுதை!

ரு வியாபாரி தன்னோட வீட்ல ஒரு கழுதையையும், நாயையும் வளர்த்துட்டிருந்தான். நாய் கழுதையோட நட்பா பழகிட்டிருந்தது. ஆனா விஸ்வாசத்தைக் காட்டி நல்ல பேர் வாங்கறதுக்காக கழுதை பேசறதை முதலாளி கிட்ட போட்டக் கொடுத்துடும். இந்த விஷயம் தெரியாம கழுதை நாயை நம்பிட்டிருந்தது.

அந்த வியாபாரி எப்ப வியாபாரத்துக்காகப் போனாலும் கழுதை மேல தன் சுமைகளை ஏத்திக்கிட்டுப் ‌போவான். ஒவ்வொரு முறை சுமை அதிகமாக சுமத்தப்படும் போதும் கழுதை கனம் தாங்காமல் முனகல் குரல் எழுப்பும். வியாபாரியும் அதன் மேல பரிதாபப் படற மாதிரி நடிச்சு, அதோட சுமையிலருந்து கொஞ்சத்தைக் குறைப்பான். அப்பாவிக் கழுதையும் தனக்காக சுமையக் குறைச்சிருக்கானேன்னு கஷ்டப்பட்டு பாரத்தைச் சுமந்துக்கிட்டு நடை போடும்.

அந்தக் கழுதை தனக்கு இருந்த ஒரு மனக்குறைய தன் தோழன் (என்று நம்பி) நாயிடம் சொன்னது. ‘‘இந்த முதலாளி என்னைக் கடுமையா வேலை வாங்கறான். ஆனா எனக்குச் சரியான சாப்பாடு தர்றதில்லை. ஆறிப் போன சோறும், அழுக்கான தண்ணியும் தான் தர்றான். அதை நினைச்சாத்தான் கடுப்பா வருது’’ அப்படின்னு கழுதை சொன்னதும், ‘‘அடப்பாவமே!’’ன்னு அதுக்கு ஆதரவாப் பேசின நாய், வழக்கம் போல முதலாளிகிட்ட போட்டுக் குடுத்துடுச்சு.

அந்த மனுஷன் பாத்தான். ஒரு ஐடியா பண்ணினான். அடுத்த நாள் கழுதையக் கட்டிப் போட்டுட்டு, அதனோட மூக்குக் கிட்ட சாப்பாட்டையும், தண்ணியையும் காட்டிட்டு வீட்டுக்குக் கொண்டு போயிட்டான். அதுவும் கயிறு அனுமதிக்கற தூரம் வரை ஓடி வந்து ஏமாந்துடுச்சு. இப்படியே அதை சாப்பாடு, தண்ணி தராம அஞ்சாறு நாள் பட்டினி போட்டான். காஞ்சு ‌போய்க் கிடந்த கழுதையோட மனசுல, ‘‘அது கிடைச்சாலே போதுமே, அதுக்காக கஷ்டப்பட்டாலும் பொறுத்துக்கலாமே... இப்படிக் கிடைக்காம கஷ்டப்படறது கொடுமையால்ல இருக்கு?’’ன்னு நினைப்பு ஓடிச்சாம்.

அதுக்கப்புறமா ஒருநாள் வந்து கழுதையோட கட்டை அவுத்துவிட்டுட்டு, அதுக்கு எதிரா ஆறின சோறையும், அழுக்குத் தண்ணியையும் வெச்சான். காஞ்சு ‌போயிருந்த கழுதை மடமடன்னு சாப்பிட்டுட்டு, தண்ணியைக் குடிச்சிடுச்சு. முதலாளியைப் பார்த்து அது கண்ணீர் விட்டு, ‘‘ஐயா... நான் இனிமே எதுவும் கேக்க மாட்டேன். இந்த பழைய சோறும், அழுக்குத் தண்ணியும் எனக்குக் கிடைச்சாலே போதும்...’’ன்னு கதறி அழுதுச்சாம். தன்னோட தந்திரம் பலிச்சுப் போச்சேன்ற சந்தோஷத்துல நாயைக் கூட்டிட்டு வீட்டுக்குள்ள போனானாம் மனுஷன்.

-என்ன, சின்னப் பசங்களுக்கு சொல்ற ‘பஞ்சதந்திரக் கதை’ மாதிரி இருக்கேன்னு நினைக்கறீங்களா? ரெண்டு நாளா பஸ்(நெரிசல்)லதான் போய் வந்துட்டிருக்கேன். பஸ் பிரயாணத்தின் போது இந்தக் கதை மனசுல தோணிச்சு. உங்ககிட்ட ஷேர் பண்ணிக்கிட்டேன். மத்தபடி மனசுல வேற எதையும் நினைச்சுக்கிட்டு இந்தக் கதைய நான் சொல்லலைப்பா..!

இப்ப, அந்தக் கணக்கைச் சரியாப் போட வராதவங்களுக்காக இங்க விடையைத் தர்றேன்:


மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "கதை சொல்லப் போறேன்!"

16 May 2012

நிறைய அமிர்தம், கொஞ்சம் விஷம்!


போன வாரம் ஒரு அதிர்ச்சியான விஷயம் நடந்துச்சு. இன்னும் அந்த ஷாக்லருந்து நான் மீளலை. அதைப் பத்தி எழுதலாமா வேணாமான்னு ரொம்பவே யோசி்ச்சுட்டு, எழுதலாம்னு முடிவு பண்ணி, இப்ப உங்ககிட்ட பகிர்ந்துக்கறேன்.

என் ஃப்ரெண்ட் ஒருத்தி (பேர் போட வேணாம்னு கேட்டுக்கிட்டா) அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்குப் போகப் போறதா சொன்னா. நான் இதுவரைக்கும் போனதில்லை. ரொம்ப பிரம்மாண்டமான நூலகம்னு கேள்விப்பட்டிருக்கேன். அவகிட்ட எங்க கோர்ஸ்க்குத் தேவையான ஒரு ரெஃபரன்ஸ் எடுத்துக்கிட்டு வரச் சொன்னேன். சரின்னுட்டுப் போனவ, ஒரு மணி நேரம் கழிச்சு எனக்குப் போன் பண்ணினா.

‘‘நிரூ... என்ன பண்ணிட்டிருக்கே?’’

‘‘அம்மாவோட ஒரு ஃபங்ஷனுக்கு வந்திருக்கேன்டி...’’

‘‘அம்மா அங்க இருந்துக்கட்டும். நீ உடனே புறப்பட்டு லைப்ரரிக்கு வா. உனக்காக நான் வெயிட் பண்ணிட்டிருக்கேன். ரொம்ப முக்கியமான மேட்டர்...’’ அப்படின்னு கூப்பிட்டா. சரின்னு அம்மாட்ட சொல்லிட்டு, ஸ்கூட்டிய எடுத்துட்டு வேகமா அங்க போனேன்.

 உள்ள நுழைஞ்சு வண்டிய பார்க் பண்ணினதும்  டூ வீலர்க்கு பார்க்கிங் கட்டணம் எதுவும் கிடையாதுன்னு அங்க பாத்ததும் ரொம்ப குஷியாயிடுச்சு எனக்கு. லைப்ரரி வாசல்லயே என் ஃப்ரெண்ட் காத்திருந்தா. ‘‘எதுக்குடி அவ்வளவு அவசரமா கூப்பிட்ட?’’ன்னு கேட்டதுக்கு, ‘‘முதல்ல உள்ள வந்து லைப்ரரிய கொஞ்சம் சுத்திப் பாரு. அப்றம் சொல்றேன்’’ன்னா.

லைப்ரரி ரொம்ப அமர்க்களமா இருக்குது. ஃபுல்லா ஏ.ஸி. பண்ணியிருக்காங்க. ஒவ்வொரு ஃப்ளோர்லயும் சப்ஜெக்ட் வாரியா புத்தகங்கள் அடுக்கப்பட்டு, இன்டெக்ஸ்லாம் பண்ணியிருந்தது பார்க்கறதுக்கே ரம்மியமா இருந்துச்சு. அங்க இல்லாத சப்ஜெக்ட்‌‌ஸே இல்லங்கறதுதான் உண்மை. இவ்வளவு எழுத்தாளர்கள் இருக்காங்களா, இத்தனை சப்ஜெக்ட்ல புத்தகங்கள் இருக்கான்னு பிரமிப்பு உண்டாச்சு எனக்கு. சரி, இனி வாரா வாரம் ஸன்டேல இங்க விஸிட் பண்ணி, நிறைய புத்தகங்கள் படிச்சு (கொஞ்சநஞ்சம் இருக்கற) அறிவை டெவலப் பண்ணிக்கணும்னு முடிவே பண்ணிட்டேன்.

அவ, என்‌னை தனியா ஒரு பகுதிக்கு கூட்டிட்டுப் போயி, அங்கருந்த ஷெல்ப்லருந்து ஒரு புக்கை உருவி, ‘‘இதைப் படிடி’’ன்னு ஒரு பக்கத்தைப் பிரிச்சுக் காட்டினா. ஒரு பாரா படிச்சதுமே உறைஞ்சு போய் நின்னுட்டேன். ஆங்கிலப் புத்தகமான அதுல ஆண் பெண் உறுப்புகளையும், உடலுறவையும் பச்சை பச்சையான வார்த்தைகள்ல எழுதியிருந்துச்சு. லைஃப்ல இதுநாள் வரைக்கும் அப்படி ஒரு ஆபாசமான விஷயத்தை நான் படிச்சதில்லை. என்னைச் சுதாரிச்சுக்கறதுக்கு ரெண்டு நிமிஷமாச்சு எனக்கு. அவ முதுகுல பளார்னு ஒரு அறை வெச்சு, ‘‘சனியனே! சப்ஜெக்ட்டுக்கு ரெஃபரன்ஸ் எடுத்துட்டு வான்னா, இப்படி கர்மத்தைப் படிச்சுட்டு, என்னை வேற கூப்பிட்டுக் காட்டறியேடி....’’ன்னு குரலை உசத்தாம திட்டினேன்.

‘‘என்ன நிரூ... நான் படிச்சு ரசிச்சேன்னா நினைச்சே..? உன்னை படிச்சு ரசிக்கறதுக்கா கூப்பிட்டேன்? இங்க இருக்கற புத்தங்கள் எல்லாமே அரசு நியமிச்சிருக்கற ஒரு குழுவால பரிந்துரை செய்யப்பட்டு வாங்கி வைக்கப்பட்டிருக்கு. இந்த புக்ஸ் லல்லாம் பாரு... சப்ஜெக்ட்ல EROTICன்னு போட்டிருக்கான். இந்த வார்த்தைக்கு அர்த்தம் உனக்கும் எனக்குமே புரியுது. கவர்மென்ட்ல உள்ளவங் களுக்குப் புரியாதா? அட்லீஸ்ட், ஒரு புத்தகத்தை வாங்கி வெக்கறதுக்கு முன்னால சில பாராக்களாவது படிச்சு அது என்ன சப்ஜெக்ட்ன்னு தெரியாமலா வாங்கி வெபபாங்க?’’ன்னு கேட்டா.

‘‘நிஜம் தான்டி. படிக்கிறவங்க மனசுல வக்ரத்தை விதைக்கிற இந்த மாதிரி புத்தகங்கள் அரசு லைப்ரரியில எப்படின்னு எனக்கும் புரியலையே...’’ன்னேன் அதிர்ச்சியா.

 ‘‘உன்னைக் கூப்பிட்டுக் காட்டினதுக்கு காரணம் என்னன்னா... நீ ப்ளாக்ல எழுதறேன்னும், உன்னை (கூட) 40 பேர் படிக்கறாங்கன்னும் பெருமைப்பட்டுப்பியே... இதை நீ எழுதணும்கறதுக்காகத்தான். முன்னொரு காலத்துல அரசாங்கம் மது குடிக்கவே கூடாதுன்னு பூரண மது விலக்கை அமல் பண்ணியிருந்தது. எம்.ஜி.ஆர். காலத்துல, கள்ளு, சாராயத்துக்கு மட்டும் தடை விதிச்சுட்டு, ஒயின் ஷாப்க்கு அனுமதி கொடுத்து பார்ஷியலா மதுவிலக்கு அமல் பண்ணினாங்க. இப்ப அரசாங்கமே சந்துக்கு சந்து கடையத் திறந்து வெச்சு, தமிழக மக்களை ‘குடி’ மகன்களாக்கி அழகு பாத்துட்டிருக்கு. அது மாதிரித் தான்டி.... முன்னொரு சமயத்துல ஃபோர்னோகிராபி புக்ஸ்லாம் ப்ரிண்ட் பண்றதும் தப்பு, படிக்கிறதும் தப்புன்னு சட்டம் இருந்துச்சு. மறைச்சு வெச்சுப் படிப்பாங்களாம். இப்ப அதையும் அரசாங்கமே லைப்ரரியில வெச்சு மக்களைப் படிச்சு சந்தோஷப்படுங்கன்னு சொல்லுது. சந்தோஷமான இந்த நல்ல தகவலை நீ உன் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட ஷேர் பண்ணிக்க வேணாமாடி? அதான் உன்கிட்ட காட்டினேன்’’அப்படின்னு சொன்னா.

இதை அவ சிரிச்சுக்கிட்டே சொன்னாலும், அதுக்குப் பின்னாடி இருந்த வேதனையும், கோபமும் எனக்கு தெளிவாப் புரிஞ்சுச்சு. எனக்கே புரிஞ்சிடுச்சுன்னா, என்னை விட அறிவில பெரியவங்களான உங்களுக்கெல்லாம் புரியாமப் போய்டுமா ‌என்ன...
மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "நிறைய அமிர்தம், கொஞ்சம் விஷம்!"

14 April 2012

IPL கிரிக்கெட்டும்... மைலாப்பூர் தேரும்!

ஹாய் எவ்ரிபடி! எக்ஸாம்ஸ்லாம் முடியற வரைக்கும் நெட் பக்கம் போனா முழியை நோண்டிடுவேன்னு மம்மி 144 போட்டிருந்தாங்க. நிரூவை (அழகான) கண் இல்லாம பாக்கச் சகிக்காதுங்கறதால ஒரு சின்ன அஞ்ஞாத வாசம். இப்போ மறுபடி வந்தாச்சு. நிரூவுக்கு இனி இல்லை இடைவேளை..!

* * * * * * * * * * * * * * * * * * * * * * * *
 
மீபத்துல மயிலாப்பூர் கோயில்ல தேரோட்டமும், அறுபத்து மூவர் உற்சவமும் நடந்தது. போயிருந்தேன். கடைத் தெரு முழுக்க பதுசு புதுசாக் கடைகள் முளைச்சிருந்துச்சு. சின்னப் பசங்களுக்கு பலூன்களும், ஊதல்களும் விக்கிற கடைங்களும், ஐஸ்கிரீம், பானி பூரி ‌மாதிரி ஸ்நாக்ஸ் கடைங்களுமா பாக்க சந்தோஷமா இருந்தது. ஏராளமான கூட்டத்துக்கு நடுவுல நடமாடறதுல ஒரு த்ரில் வேற.

அங்க நிறைய பெரிய பெரிய நிறுவனங்கள் இலவசமா நீர் மோர்ப் பந்தலும், அன்னதானப் பந்தல்களும் வெச்சிருந்தாங்க. நம்ம ஜனங்க அங்கங்க போய் வெண் பொங்கலும், ‌புளியோதரையும் அவங்க தர்ற பேப்பர் ப்ளேட்ல வாங்கிச் சாப்பிட்டுட்டு, பிளேட்டுகளை ரோட்டுலயே போட்டுட்டுப் போயிட்டிருந்தாங்க. நீர்மோர் குடிச்ச டிஸ்போஸபிள் டம்ளர்கள் வேற ரோடு முழுக்க இறைஞ்சு கிடந்துச்சு. நடக்கறவங்க அதையெல்லாம் மிதிச்சுட்டுப் போறதைப் பார்த்ததும் எனக்கு அருவருப்பா இருந்துச்சு.

குப்பைகளை எல்லாம் ரோட்டு ஓரத்துல இருக்கற குப்பைத் தொட்டிகள்லதான் எறியணும்கற பேஸிக் மேனர்ஸ் கூட இல்லாம இந்த ஜனங்கல்லாம் இருக்காங்களேன்னு கோபமா இருந்துச்சு எனக்கு. ஆனா கண்ணை நல்லாத் திறந்து சுத்துப் பக்கத்தைப் பார்த்ததும்தான் ஒரு விஷயம் புரிஞ்சுது. ஜனங்களை மட்டும் குறை சொல்லிப் பிரயோஜனமில்லை. ஏன்னா... குப்பைத் தொட்டிகள் எதுவும் அங்க வைக்கப்படலை. தெப்பக்குள ரோடு திருப்பத்துல இருந்த ஒரே ஒரு குப்பைத் தொட்டிதான் கண்ணுல பட்டுச்சு. பாவம்... ஜனங்கதான் என்ன செய்வாங்க?ன்னு தோணிச்சு.

எவ்வளவோ செலவு பண்ணி (விளம்பரத்துக்காக) அன்னதானப் பந்தலும், நீர்மோர்ப் பந்தலும் வெக்கிற கம்பெனிங்க, அதுக்குப் பக்கத்துலயே ஒரு குப்பைத் தொட்டியையும் வைக்கணும்கறது என்னோட யோசனை! (ஆமா... இவ சொன்னா அடுத்த நிமிஷம் கேட்டு செயல்படுத்திட்டுத்தான் வேற வேலை பாக்கப் போறாங்களாக்கும்...!)

* * * * * * * * * * * * * * * * * * * * * * * *

மைலாப்பூர்லருந்து மாம்பலத்துக்கு டிரெய்ன்ல வந்துட்டிருந்தப்ப... சேப்பாக்கம் ஸ்டேஷனை ரயில் தாண்டினப்ப... கைப்பிடிச் சுவர்ல பல்லி மாதிரி சில இளைஞர்கள் ஒட்டிக்கிட்டு எதையோ எட்டிப் பாத்துட்டிருந்தாங்க. என்னத்தை அப்படிப் பாக்கறாங்கன்னு நான் ஜன்னல் வழியா எட்டிப் பாத்தப்ப... அவங்க ஆங்கிள்லருந்து சேப்பாக் கிரவுண்டில நடந்துட்டிருந்த கிரிக்கெட் மேட்ச் தெளிவாப் பாக்க முடிஞ்சுது. இந்த விளையாட்டு மேல என்ன அப்படி ஒரு கிரேஸ் ஜனங்களுக்குன்னு எப்பவும் எனக்கு வியப்புதான். இதைப் பத்தி சமீபத்துல படிச்ச ஒரு தகவல் வியக்க வெச்சது. நிறையப் பேருக்குத் தெரிஞ்சிருக்குமோ என்னமோ... எனக்கு இது புதுசு.

ந்திய கிரிக்கெட் அணியில ‘ஏ’ பிரிவில இருக்கிற வீரர்களுக்கு வருஷத்துக்கு ஒரு கோடி ரூபாயும், ‘பி’ பிரிவு வீரர்களுக்கு 50 லட்ச ரூபாயும், ‘சி’ பிரிவில் உள்ளவர்களுக்கு 25 லட்ச ரூபாயும் சம்பளமாம். (விளையாடினாலும், விளையாடா விட்டாலும்). இதைத் தவிர டெஸ்ட் போட்டிக்கு, ஒருநாள் போட்டிக்கு 20-20 ஓவர் போட்டிக்குன்னு கணிசமா ஒரு பெரிய தொகை தரப்படுகிறதாம். மத்த நாட்டு வீரர்களுக்கு அவங்க நாட்ல கொடுக்கப்படற தொகையோட ஒப்பிடும் போது இது மிகமிக அதிகமான தொகைன்னு சொல்லப்படுகிறது. பணம் கொழிக்கும் நாடுகளான நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ‌ஆகியவைகூட தங்கள் வீரர்களுக்கு இவ்வளவு பணம் தர்றதில்லையாம்.

இந்த வருமானம் தவிர இப்ப நடந்துக்கிட்டிருக்கிற ஐ.பி.எல். ‌போட்டிகள் கிரிக்கெட்டிற்கு தங்கச் சுரங்கம் போல. சென்ற வருடம் கிரிக்கெட் வாரியத்தின் வருமானமான 1670 கோடியில 970 கோடி ஐ.பி.எல். மூலமா மட்டுமே கிடைச்சிருக்காம். ஐ.பி.எல். போட்டி நடந்தபோது டி.வி.யில 10 விநாடி விளம்பரம் செய்ய ஒரு லட்சத்திலிருந்து இரண்டு லட்சம் வரை கட்டணம் வசூலிககப்பட்டது. ஐ.பி.எல். போட்டியை நேரடி ஒளிபரப்பு செய்யும் உரிமையைப் பெற்ற செட்-மேக்ஸ் நிறுவனம் அதன் மூலம் 900 கோடி ரூபாய் லாபம் அடைஞ்சிருக்குன்றது போனஸ் ஆச்சர்யத் தகவல்!

இப்படி கிரிக்கெட் மிகப் பெரிய வியாபாரமா இன்னிக்கு இருக்கு. கவாஸ்கர், கபில்தேவ் கால வீரர்கள் இவ்வளவு விளம்பரங்கள்ல நடிக்கிற வாய்ப்பும், இவ்வளவு பணமழை கொட்டவும் வாய்ப்பில்லாமலேயே இருந்துட்டுப் ‌போயிட்டாங்க. அப்ப விளையாட்டுல ஜெயிக்கணும்கற வெறி இருந்துச்சு. இப்ப ஜெயிச்சாலும், தோத்தாலும் வீரர்களுக்குப் பணம் கொட்டறதுங்கறப்ப ஜெயிக்கிற வெறி எப்படி வரும்? 'Be sportive' என்று எல்லாத்தையும் 'Take it Easy' யாவே எடுத்துக்கறாங்க.

என்னை உறுத்துற ஒரு கேள்வி என்னன்னா... ஏன் ஜனங்க இந்த விளையாட்டுக்கு மட்டும் இவ்வளவு Importance கொடுத்துப் பாக்கறாங்க? மத்த விளையாட்டுக்களை ஏன் இந்த அளவுக்கு ஊக்கப்படுத்தறதில்லைங்கறதுதான்!

* * * * * * * * * * * * * * * * * * * * * * * *

நிரூ இந்தத் தடவை ரொம்ப சீரியஸாப் பேசியிருக்காளோன்னு தோணுது, இல்ல..? அடுத்த தடவை ரிலாக்ஸான மேட்டர்களோட சந்திக்கிறேன். ஸீ யு!
மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "IPL கிரிக்கெட்டும்... மைலாப்பூர் தேரும்!"

5 March 2012

நமது வருங்காலத் தூண்கள்?!!!!


நேத்து நான் டிவியில நேஷனல் ஜ்யாக்ரபிக் பாத்துட்டிருந்தப்ப ஜெயா டி.வி.ல ஜாக்பாட் பாட்தே தீரணும்னு மம்மி வந்து ரிமோட்டைப் பிடுங்கிக்கிட்டாங்க. வழக்கமா இந்த மாதிரி அவங்க பாக்க ஆரம்பிச்சா நான் நகர்ந்து வேற ஏதாவது படிக்கறதுக்குப் போயிடுவேன். நேத்திக்கு சென்னையிலருந்தும், திருவள்ளூர்லருந்தும் 10ம் கிளாஸ் படிக்கிற பசங்க ரெண்டு டீமா வந்து கலந்துக்கிட்டாங்கன்றதால நானும் மம்மி கூடவே பேசிக்கிட்டே பாக்க ஆரம்பிச்சேன். ஏன்தான் பாத்துத் தொலைச்சேன்னு ஆயிடுச்சு.

வந்திருந்த பசங்கள்ல ஒரு பொண்ணு பாட்டுப் பாடிச்சு. எதிர் டீம்ல ஒரு பொண்ணு நல்லாவே Dance ஆடிச்சு. கேள்வி - பதில் ரவுண்டு வந்தப்ப ஒரு வீடியோவைப் போட்டுக் காட்டினாங்க. காந்தியடிகள் பிரார்த்தனைக் கூடத்துக்கு நடந்து வர்றப்ப, அவரை வழியில வணங்கற கோட்ஸே சட்டுன்னு தன் பாக்கெட்லருந்து Gun எடுத்து மகாத்மாவை சுடற காட்சி அது. போட்டுக் காட்டிட்டு, ‘‘இந்த கிளிப்பிங்ல மகாத்மா காந்தி சுடப்படற காட்சியைப் பாத்தீங்க. மகாத்மாவைச் சுட்டவனோட பேர் என்ன?’’ன்னு சிம்ரன் கேள்வி கேட்டாங்க.


அதுக்கு ‘ஏ’ டீம்ல கேப்டனா இருக்கற பொண்ணு ‘முசோலினி’ன்னு சொல்லிச்சு. நான் அதிர்ந்து போயிட்டேன். Display Board Noன்னு ‌சொன்னதால (பின்ன.... அதுவுமா முட்டாளா இருக்கும்?) எதிர் டீம் கிட்ட இதே கேள்வியைக் கேட்டாங்க சிம்ரன். அங்க இருந்த பசங்களுக்கும் இதுக்கு பதில் தெரியல. ‘‘இதுங்கல்லாம் பள்ளிக் கூடத்துல என்னதான் படிச்சுதுகளோ’’ என்று என் மனதில் தோணிச்சு. அதே நேரம், ‘‘ஸ்கூல்ல உங்களுக்கு என்னதான் சொல்லித் தந்தாங்க?’’ன்னு சரியாக் கேட்டாங்க சிம்ரன். அந்த நாலு பிள்ளைகளில ஒருத்தன் தன் அம்மா ஹிஸ்டரி டீச்சர் அப்படின்னு வேற சொல்லி, நிகழ்ச்சிக்கு வந்திருந்த அந்த டீச்சரையும் கை காட்டினான்.

பத்தாம் வகுப்பு வரை வந்து விட்ட மாணவச் செல்வங்களுக்கு மகாத்மா காந்தியின் வரலாறு சரியாத் தெரியலீங்க... My God! காந்திங்கற  தனிமனுஷனோட வரலாறா அது? நம்ம பாரத தேசத்தோட வரலாறும் அதுல கலந்திருக்கு இல்லையா? இதைக்கூட சரியாப் படிக்காம பத்தாம் கிளாஸ் வரைக்கும் இந்தப் பசங்க பாஸாகி வந்திருக்குன்னா... எங்க தப்பு இருக்கு? நம்ம Education System சரியா இல்லையா? இந்தத் தூண்களா வருங்காலத்துல பாரதத்தைத் தாங்கிப் பிடிக்கப் போகுது?

-இப்படி ஏராளமான கேள்விகள் எனக்குள்ள ஓடிக்கிட்டிருந்துச்சு. வெறுமனே பாழாப் போற கம்ப்யூட்டர் படிப்பை படிச்சு ஏதாவதொரு ஐ.டி. கம்பெனில இருபதாயிரம், நாப்பதாயிரம்னு சம்பளம் வாங்கிட்டு செட்டிலானா போதும்னு பெத்தவங்களோட எண்ணமா இருக்குமோ? அதனாலதான் இப்படி பசங்க, ‘ஹிட்லருக்கு சித்தப்பா காந்தி’ன்னு சொல்ற ரேஞ்சுல இருக்குதுங்களா? பேரண்ட்ஸ் தங்களோட பிள்ளைங்க என்னதான் படிக்குதுன்னு கவனிக்க மாட்டாங்களா...?

எங்க போயிட்டிருக்கோம் நாம?
மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "நமது வருங்காலத் தூண்கள்?!!!!"
 

கலை அக்கா தந்த பரிசுகள்!

கலை அக்கா தந்த பரிசுகள்!

என் தோழி விஜி தந்த விருது!

என் தோழி விஜி தந்த விருது!