Pages

Ads 468x60px

Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

4 August 2012

நான்... கொசு!


டென்னிஸ்‌ பேட் போலிருந்த அதை காற்றில் ஒரு வீசு வீசினாள் அவள். பட் பட் என்ற சத்தம் கேட்டதும் பூரிப்பாய்த் தன் கணவனைத் திரும்பிப் பார்த்தாள். ‘‘எப்பூடி?’’

‘‘ஆமா... நீ பெரிய சானியா மிர்ஸா! சர்வீஸ் போட்டு கேமை ஜெயிச்சுட்டே. ஏண்டி... கொசுவை அடிக்கற பேட்டை வெச்சுட்டு இத்தனை அமர்க்களம்?’’ என்றார் அவர்.

“அமர்க்களமா..? ஈ தொல்லை அதிகமா இருக்குன்னு மருந்தடிச்சுப் பாத்தேன். கொஞ்சம் தான் போச்சு. கொசுவையாவது அழிச்சுடலாம்னு பாக்கறேன்...”

“நான் ஈ பாத்தப்பறம் எல்லா ஈயும் ஹெல்மட் போட்டுக்க பழகிடுச்சுடி. அதான் அழிக்க முடியலை...” என்று சொல்லி ஈயென்று சிரித்தார் அவர்.

“அப்படிச் சிரிக்காதீங்க பயமா இருக்குது...” என்றதும் வாயை மூடினார். “நான் கடைவரைக்கும போய்ட்டு வர்றேன்...” என்றார்.

‘‘என்னது...? வடையா? நேத்துதானே பண்ணிக் குடுத்தேன். மறுபடி கேட்டா என்ன அர்த்தம்ங்கறேன்?’’ என்று அவள் அலறினாள். ‘‘கஷ்டம்டா சாமி...’’ என்று தலையில் அடித்துக் கொண்டு சத்தமாகப் பேசினார். ‘‘கடைக்குப் போயிட்டு வர்றேன்னு சொன்னேன்டி ச.தி.சுந்தரி’’

‘‘கடைக்கா..? அதை தெளிவா சொல்றதுக்கென்ன... இப்படி என் பேரைச் சுருக்காதீங்கன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்?’’

‘‘நாசமாப் போச்சு. ‌சவுந்தர்யலட்சுமி திரிபுரசுந்தரின்னு உன் பேரை முழுசாச் சொல்லி முடிக்கறதுக்குள்ள அரை நாளாயிடும்...’’

‘‘இங்க மட்டும் என்ன வாழுதாம்..? சீனிவாச சுந்தரவரத நரசிம்மன்னு உங்க பேரை யாராவது முழுசாச் சொல்லியிருக்காங்களா? கோபக்காரர்ங்கறதால சிம்மம்னுதானே கூப்பிடறாங்க?’’

‘‘சரி... சரி... ’’ என்றார் அவர். ‘‘அன்னிக்கு பாங்க்ல அக்கவுண்ட் ஓபன் பண்ண ஃபார்ம் குடுத்தான். நான் திருமதின்னு போட்டு என் பேரோட உங்க பேரைச் சேர்த்து எழுதறதுக்கு எக்ஸ்ட்ரா ஷீட் கேக்க வேண்டியதாப் போ்ச்சு... சிரிக்கறான் அந்த ஆளு...’’

‘‘விடுடி! நான் ‌‌போயிட்டு அரை மணி நேரத்துல வர்றேன்... எக்ஸிபிஷன் போகணும்னியே... பசங்களை ரெடி பண்ணி வை..,’’ என்று சத்தமாகப் பேசிய (கத்திய?) வரின் மூக்கில் மோதிக் கீழே விழுந்தது அந்தப் ப்ளையிங் டிஸ்க். தொடர்ந்து ‘ஓ’வென்ற கூச்சலுடன் ஓடிவந்தன அவர் பெற்ற ஆறு செல்வங்களும்! ‘‘சனியன்களா... வீட்டுக்குள்ளயா விளையாடறது? ரோட்டுக்குப் போங்க...’’ என்று பெயருக்கேற்றபடி அவர் கத்த (கர்ஜிக்க?) கண்ணை மூடிக் கொண்டு ஓடிவிட்டன அத்தனையும்!

‘‘இன்னுமா ரெடியாகலை? அலங்காரம் பண்ண இவ்வளவு நேரம? எப்ப எக்ஸிபிஷன் போயிட்டு எப்ப வர்றது?’’ என்று சிம்மம் கத்திக் கொண்டிருந்தார். ‘‘அடாடாடா... எல்லாத்துலயும் கஞ்சியக் கால்ல கொட்டிண்ட மாதிரி அவசரம் உங்களுக்கு. போய் கார்ல உக்காருங்க. பசங்களைக் கூட்டிட்டு வர்றேன்...’’ என்று அவள் பதிலுக்குக் கத்த, அவர் போகும்போது எதிரே வந்தாள் வேலைககாரி அமிர்தவல்லி. (ஏன் வேலைக்காரின்னா, முனியம்மா, முனீஸ்வரின்னுதான் பேர் வெக்கணுமா?).

‘‘ஏம்மா... பைய நான் வீட்டுக்கு எடுத்துட்டுப் போகட்டுமா?’’ என்று அவள் கேட்க, அசுவாரஸ்யமாகத் தலையசைத்தபடி, ‘‘பசங்களா கிளம்புங்க. அப்பா கத்தறார் பாருங்க...’’ என்றாள் சுந்தரி. ‘‘ஓ’’வென்ற உற்சாகக் கூச்சலுடன் வாண்டுகள் வாசலுக்கு ஓட, அவளும் தொடர்ந்தாள்.

க்ஸிபிஷனில் ஸ்டால் ஸ்டாகப் புகுந்து நிறையப் பைகளை வாங்கியபடி வரும்போது யதேச்சையாகக் கவனித்த சிம்மம் சொன்னார்- ‘‘சுந்தரி... ஏதோ குறையறது போலருக்கே... சரி பாரு...’’ என்று. ‘‘இல்லியே... சரியாத்தானே வெச்சிருக்கேன்...’’ என்று அவள் பைகளை எண்ணத் தொடங்க, கோபமாக தலையில் தட்டினார்: ‘‘அடியேய்... நான் சொன்னது இதில்லை. நாம பெத்த புத்திர சிகாமணிகளை! சரியா இருக்கான்னு எண்ணிப் பாக்கச் சொன்னேன்’’

ஒவ்வொன்றாகக் கவனித்த சுந்தரி அலறினாள். ‘‘என்னங்க... சின்னவனைக் காணோம்...’’

‘‘யாரு, அந்தக் குட்டிப் பிசாசா?’’

‘‘ஆமாங்க...’’

‘‘அடிப்பாவி! திங்க்ஸை வாங்கிக் குவிக்கறதுலயே குறியா இருந்தியே... குழந்தைகளைக் கொஞ்சமாவது கவனிக்க மாட்டியா?’’ என்று அவர் கத்த, ‘‘நான் மட்டுமா பெத்தேன்? பெத்த அப்பான்னு எதுக்கு இருக்கீங்க? நீங்க கவனிச்சிருக்கலாம்ல..?’’ என்று அவள் எகிற, மற்ற பிள்ளைகள் சுற்றி நின்று கூச்சலிட, ஒரே களேபரம். அவர்களைச் சுற்றி ஒரு கூட்டமே கூடிவிட, கூட்டத்தில் ஒருவர் தமிழ்நாட்டு மரபுப்படி இலவச ஆலோசனை சொன்னார்: ‘‘சார், எக்ஸிபிஷன் அனவுன்ஸ்மென்ட் ஸ்டால்ல போய் மைக்ல சொன்னீங்கன்னா... யாராவது பையனப் பாத்தாலும் கூட்டிட்டு வந்துடுவாங்க...’’ என்று.

இவர்கள் அனவுன்ஸ்மெண்ட் ஸ்டாலுக்குச் சென்ற சில நிமிடங்களில் ஒலிபெருக்கி அலறியது. ‘‘நீல டிராயரும், நீல கட்டம்போட்ட சட்டையும் அணிந்த ஏழு வயது குட்டிப் பிசாசு எங்கிருந்தாலும் ஸ்டாலுக்கு வரவும். அப்பாப் பிசாசு... மன்னிக்கவும், அப்பா இங்கே காத்திருக்கிறார்...’’ என்றது.

‘‘ஐயோ... ஐயோ...’’ என்று தலையிலடித்துக் கொண்டாள் சுந்தரி. ‘‘ஏன்னா... கிரிதர ராஜகோபாலன்னு அவனுக்கு வெச்ச பேர்ல வீட்லதான் கூப்பிட மாட்டீங்க. இங்கயாவது அப்படிச் சொல்லியிருக்கலாம்ல? அதென்ன குட்டிப்பிசாசு?’’

‘‘குட்டிப் பிசாசுன்னு கூப்பிட்டே பழகிடுச்சா? அவனுக்கு வெச்ச பேர் மறந்து போய்டுத்துடி. ஹி... ஹி...’’ என்று பெரிதாக இளித்து அசடு வழிந்தது சிம்மம்.

அறிவிப்பு செய்து இரண்டு மணி நேரத்துக்கு மேல் காத்திருந்தும் பையன் கிடைப்பதாக இல்லை. போலீசில் புகார் செய்து விட்டு நொந்து நூலாகி வீடு திரும்பும் போது இரவு மணி எட்டரையாகி விட்டது.

வாசலிலேயே தோளில் தூங்கிக் கொண்டிருந்த ‘குட்டிப் பிசாசு’டன் காத்திருந்தாள் அமிர்தவல்லி.

“ஏம்மா... எக்ஸிபிஷன் போய்ட்டுவர இம்மா நேரமா? பாவம் புள்ள... பசின்னு கேட்டுது. சாப்பாடு தந்ததும் தூங்கிடுச்சு பாரு...” என்று அவள் முறையிட. குழந்தையை வாங்கிக் கொஞ்சிய சுந்தரி. அவளிடம் கோபமாகக் கேட்டாள். “உன்கிட்ட எப்படிடி குழந்தை வந்துச்சு... நீயும் எக்ஸிபிஷன் வந்தியா?”

“சரியாப் போச்சு... என்கூட என் வீட்டுக்கு வரேங்கறான். பையனை கூட்டிட்டு போகட்டான்னு கேட்டப்ப நீங்கதானே சரின்னீங்க?” என்று அவள் சொல்ல. “பையன்னா கேட்டே? பைய எடுத்துட்டு போகவான்னு கேட்டேன்னு நினைச்சுல்ல சரின்னுட்டேன்...” என்று அசடு வழிந்தாள் சுந்தரி. கைகளால் தலையில் மடேர் மடேரென்று அடித்துக்  கொண்டது சிம்மம்.

மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "நான்... கொசு!"

9 May 2012

என் முதல் தொடர்கதை!


ன் இனிய தமிழ் மக்களே...! உங்‌களோடும் இந்த மண்ணோடும் விளையாடி வந்த உங்கள நிரஞ்சனா எழுதும் முதல் தொடர்கதை இது. இதற்கு உங்கள் ஆதரவைத் தர வேண்டுமென்று வேண்டுகிறாள் உங்கள் பாசத்துக்குரிய இந்த நிரூ!

              காதல் (தோல்வி) வட்டம்

‘அப்படி எதை கண்ணன் வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறான்?’ சத்தம் இல்லாமல் பூனைப் பாதம் வைத்து அவன் பின்னால் சென்று எட்டிப் பார்த்தான் அவன் அறைத் தோழன் ஆனந்த். ‘‘அடப்பாவி..! உஷாவோட ஃபோட்டோ உனக்கெப்படிடா கிடைச்சது?’’ என்று ஆனந்த் குரல் கொடுக்க, தூக்கிவாரி்ப் போட்டவனாய் திரும்பினான் கண்ணன்.

‘‘டேய் ஆனந்த்! இதை உஷாவுககுத் தெரியாம சுட்டுட்டு வந்தேன். நான் அவளை உயிருக்குயிரா காதலிக்கிறேன்டா. இந்த ஜென்மத்துல அவளை விட்டா வேற பொண்ணை கல்யாணம் பண்ணிக்கப போறதில்லன்னு முடிவோட இருக்கேன்டா... ஆனா, அவகிட்ட ‌சொல்லத்தான் தைரியம் வர மாட்டேங்குது...’’ என்று கண்ணன் சொன்னதைக் கேட்டு சிரித்தான் ஆனந்த்.

‘‘டேய், காதல்கிறது ஜலதோஷம் மாதிரிடா. எப்ப வேணா வரும். யாருக்கு வேணா வரும். ஆனா அதைச் சொல்றதுக்கு தயங்கக் கூடாதுடா. நான்கூட சமீபத்துல உஷாவோட ஃப்ரெண்ட் ராதிகா‌வை விரும்பிட்டிருக்கேன். நாளைக்கு அவ பர்த்டேங்கறதால தயங்காம போய் என் காதலைச் சொல்லப் ‌போறேன். தயங்கினா ‌வேலைக்காகாது கண்ணா. இப்பவே போய்ச் சொல்லிடு’’ என்ற ஆனந்தின் வார்த்தைகளி்ல் தைரியம் பெற்ற கண்ணன் ஒரு முடிவுடன் உஷாவைச் சந்திக்கப் புறப்பட்டான்.

                                                                 *   *   *   *

லைப்ரரியில் தனியாய் உட்கார்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்த உஷாவை நெருங்கினான் கண்ணன். அ‌வனை ஏறிட்ட அவளிடம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, கையிலிருந்த ஒற்றை ரோஜாவையும், காதல் சொல்லும் கடிதத்தையும் நீட்டினான். பொறுமையாகப் படித்த அவள், சைகை காட்டி அவனை லைப்ரரியை விட்டு வெளியே வரச் சொல்லி நடந்தாள். வெளியே வந்து மரநிழலில் நின்றதும் கண்ணனிடம் ‌சொன்னாள். ‘‘மிஸ்டர் கண்ணன்! நீங்க ரொம்ப நல்லவர். எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாதவர்ங்கறதை நான் கவனிச்சிருக்கேன். ஆனா என்னால உஙகளை லவ் பண்ண முடியாது. ஏன்னா.... என் மனசை ஏற்கனவே ஒருத்தர்கிட்டப் பறி கொடுத்திட்டேன். ஸாரி கண்ணன்... என்னை மறந்துடுங்க’’ என்று விட்டு அவள் செல்ல, சிலையாய் உறைந்து நின்றான் கண்ணன்.

                                                                     *   *   *   *

ராதிகா பார்க்கில் தனியாய் அமர்ந்திருக்க, அவளை நெருங்கினான் ஆனந்த். ‘‘ஹாய் ராதிகா! மெனி மோர் ஹாப்பி ரிடர்ன்ஸ் ஆஃப் த டே!’’ என்றவாறு அவளிடம் பொக்கேயை நீட்டினான். ‘‘தேங்க்யூ’’ என்று சிரித்தபடி வாங்கிக் கொண்டாள். ‘‘நீ எப்ப தனியாவேன்னு காலையில இருந்து காத்துட்டிருந்தேன் ராதி! நான் சுத்தி வளைச்சுப் பேச விரும்பலை. ஐ லவ் யூ...!’’ என்றான் ஆனந்த். ‘‘ஸாரி ஆனந்த்! என்னை மன்னிச்சுடுங்க... நான் வேற ஒருத்தரை விரும்பறேன். இன்னிக்கு என்னோட லவ்வை அவர்கிட்டச் சொல்லிடறதா முடிவு பண்ணி, அவரை வரச் சொல்லியிருக்கேன். அவருக்காகத்தான் இப்ப வெயிட் பண்ணிட்டிருக்கேன்...’’ என்றாள். ரத்தமெல்லாம் இழந்தது‌ போல முகம் வாடியவனாய் தொய்வுடன் நடந்தான் ஆனந்த்.

ஆனந்த் நகர்ந்த ஐந்தாவது நிமிடம், கண்ணன் வந்தான். ‘‘என்ன ராதிகா... எதுக்கு ஃபோன் பண்ணி அவசரமா வரச் சொன்னீங்க?’’ என்று கேட்க, அவனிடம் தன் காதலைச் சொன்னாள் ராதிகா. கண்ணன் விரக்தியாய்ச் சிரித்தான். ‘‘உன் ஃப்ரெண்டு உஷாவை நான் லவ் பண்றேன் ராதிகா. அவ என்னை விரும்பலைன்னு ‌சொல்லிட்டா. இருந்தாலும் என்னால வேற ஒருத்தியை நினைச்சே பார்க்க முடியலை. ஸாரி...’’ என்றவன் மறுபேச்சு பேசாமல் கிளம்பிச் சென்றுவிட, அதிர்ந்தவளாய் உட்கார்ந்திருந்தாள் ராதிகா.

                                                                    *   *   *   *

பார்க்கை விட்டு தொய்ந்த நடையுடன் வெளியே வந்த ஆனந்த்தை, ‘‘ஹாய் ஆனந்த்!’’ என்ற குரல் நிறுத்தியது. உஷா! ‘‘உங்களைத் தனியாப் பாத்துப் பேசணும்னு பல நாள் நினைச்சதுண்டு. இப்பத்தான் கண்ணன் இல்லாம தனியா கிடைச்சிருக்கீங்க. இனியும் ‌ச‌ொல்லாம இருக்க முடியாது ஆனந்த். ஐ லவ் யூ!’’ என்றாள் உஷா. மேலும் ஒரு அதிர்ச்சி தாக்க, வியப்புடன் அவளைப் பார்த்தான் ஆனந்த். ‘‘உஷா1 கண்ணன் உ.ன்னை....’’

‘‘தெரியும் ஆனந்த். என்கிட்ட சொன்னார். ஆனா, உங்களை நினைச்சிருக்கற இந்த மனசில வேற யாருக்கும் இடமில்லைன்னு அவர்ட்ட சொல்லிட்டேன்’’ என்றாள் உஷா. ‘‘நானும் அப்படித்தான் உஷா. உன் ஃப்ரெண்ட் ராதிகாவை உயிருக்குயிரா விரும்பறேன். அவ என் காதலை மறுத்துட்டாலும், இந்த உயிர் இருக்கற வரைக்கும் வேற பொண்ணை என்னால ஏத்துக்க முடியாது உஷா’’ என்றவனாய் அந்த இடத்தை வி்ட்டு ஆனந்த் அகல, மனம் நொறுங்கிவளாய் திக்பிரமையுடன் நின்றிருந்தாள் உஷா.

                                                                      *   *   *   *

ன்னங்க பாக்கறீங்க...?

கண்ணன் உஷாவை விரும்ப, உஷா ஆனந்தை விரும்ப, ஆனந்த் ராதிகாவை விரும்ப, ராதிகாவோ கண்ணனை விரும்ப இவங்க யாரும் விட்டுக் கொடுக்காததால இந்தக் காதல் வட்டம் சன் டிவில வர்ற மெகா சீரியல்களே முடிஞசாலும்கூட முடியாம தொடரப்போற ஒரு தொடர்கதை தானே?

எப்பூடி இருக்குது நிரூ எழுதின தொடர்கதை! ஹய்யய்யோ... ஹேமாக்கா கருக்கு மட்டையத் தேடறாங்க. ராஜியக்கா கையில பூரிக்கட்டை தெரியுதே.... நிரூஊஊஊஊஊ ஓடிட்ரா செல்லம்!
மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "என் முதல் தொடர்கதை!"

26 April 2012

‌என் எருமை ஏஞ்சல்!

ஞ்சல் பேர்ல மட்டும் ஏஞ்சல் இல்லீங்க... அழகுலயும் அப்படித்தான். எங்க காலேஜ்லயே ப்ரைட் ஃபிகர்! பசங்கல்லாம் பயங்கரமா ‌ஜொள்ளு விடுவாங்க. எல்லாம் போன மாசம் வரைதான்... இப்ப அவ ஃப்ரெண்ட்ஸும் மத்தவங்களும் அவளை ‘எருமை ஏஞ்சல்’ன்னு கூப்பிட்டுக் கிண்டல் பண்றப்ப... எதுவும் செய்ய முடியாம பல்லைக் கடிச்சுககிட்டு ஓடிடறா. அவ பேரோட இந்த எருமை வந்து ஒட்டிக்கிட்டது இருக்கே... அதுவே தனிக் கதை! ‘என்ன கதை அது?’ன்னு நீங்க சொல்றது எனக்குக் கேக்குது. சொல்றேன்...

போன மாசத்துல ஒரு நாள் சைதாப்பேட்டை ஏரியாவுல அவ ஸ்கூட்டியில போயிட்டிருந்தாங்க. வண்டியை ஒரு கடை வாசல்ல நிறுத்திட்டு வந்து பாத்தா... வண்டி கவுத்துப் போட்ட கரப்பாம் பூ்ச்சியாட்டம் கீழ விழுந்து கிடக்கு. பக்கத்துல ஒரு எருமை அசால்ட்டா வண்டியை மோந்து பாத்து ஆராய்ச்சி பண்ணிட்டிருக்கு. கடுப்பாகிப் போன ஏஞ்சல், பின்னாடியே வந்து எருமையப் பிடிச்ச எருமையோட ஓனரைப் பாத்து கன்னாபின்னான்னு கத்த ஆரம்பிக்க ஒரு கூட்டமே கூடிடுச்சுங்க...

‘‘என்னம்மா... என்னாச்சு?’’ன்னு முன்னால வந்தாரு குண்டான குள்ளமான ஒரு ஆளு. பட்டையக் கிளப்பற வெயில்ல அவர் வழுக்கைத் தலை டாலடிக்க, கையால கண்ணை மறைச்சுக்கிட்டே பேசினா ஏஞ்சல். ‘‘பாருங்க ஸார்... நான் ஸ்கூட்டியைப் பார்க் பண்ணிட்டு இந்தக கடையில சுருட்டு வாங்கப் போனேன்... அப்ப...’’

அந்த ஆள் அதிர்ச்சியில அலறியிருக்கான்- ‘‘பொம்பளைங்க சிகரெட் பிடிக்கிறதே அநியாயம். இதுல சுருட்டு வேற பிடிப்பியா நீ? கலிகாலம்!’’ன்னு.  இவளானா தலையில அடிச்சுக்கிட்டு, ‘‘எனக்கு இல்ல ஸார்... எங்க தாத்தாவுக்கு. சுருட்டு வாங்கிட்டு வந்தா, இந்த ஆளோட எருமை இடிச்சு, என் ஸ்கூட்டியைத் தள்ளி விட்டிருக்கு. பாருங்க... ஹெட்லைட்டே ‌உடைஞ்சு நொறுங்கியிருக்கு. மரியாதையா இந்த ஆளை நூத்தம்பது ரூபாயை எடுத்து வெக்கச் சொல்லுங்க...’’ன்னு கத்தியிருக்கா.

அந்த ஆள், எருமைக்காரனைப் பாத்து, ‘‘அவங்க சொல்றது நியாயம்தானேப்பா. நீ பணம் குடுத்துத்தான் ஆகணும்...’’ அப்படின்னு சொல்ல, ‘‘நான் என்ன மாட்டேன்னா சொன்னேன்? கொத்தவால் சாவடித் தெருவுல இருககற என் வீட்டுக்குப் போயி எடுத்துட்டு வரணுங்க... இவங்க இப்பவே பணத்தக் குடுன்னுல்ல வம்பு பண்றாங்க...’’ன்னு சொல்லியிருக்கான். அந்த வழுக்கைத் தலையர் எருமைககாரனுக்கு சப்போர்ட் பண்ணி, ‘‘சரி, நீ போய் பணத்தை எடுத்துட்டு வா. ஆனா அதுவரைக்கும உன் எருமை இங்கதான் இருக்கணும்’’ன்னு சொல்லவும், எருமைக்காரன், ‘‘சரி ஸார்... முருகனை பத்திரமா பாத்துக்கங்க...’’ன்னிருக்கான்.

வழுக்கைத் தலையருக்கு வந்ததே கோபம்... ‘‘ஏன்யா... எருமைக்கு வைக்கறதுக்கு உனக்குப் பேரா கிடைக்கல..? இதுக்கப் போயி முருகன்னு நல்ல பேரா?’’ன்னு கத்தியிருக்காரு. அவன் எதுவும் புரியாம, ‘‘உங்களுக்கு என்னங்கய்யா இதுல கஷ்டம்?’’ன்னு கேக்க, அவர் தர்மசங்கடமா, ‘‘என் பேரும் முருகன்தான்யா...’’ன்னு சொல்லியிருக்காரு. ஏஞ்சல் சிரிப்பை அடக்க முடியாம சிரிச்சுட்டா. எருமைக்காரன் ‘ஙே’ன்னு முழிச்சுக்கிட்டே அங்கருந்து கிளம்பிப் போயிருக்கான்.

ரை மணி நேரம் ஆச்சு... அந்த ஆள் வரலை. இவ, ‘‘இப்ப என்ன பண்றது ஸார்?’’ன்னு கூட இருந்த வழுக்கையரைக் கேக்க, ‘‘கொத்தவால் சாவடித் தெருவுன்னுதானே சொன்னான். அங்கயே போய்டலாம். முருகன் இருக்கற வரை நீ கவலைப்படாத’’ன்னு சொல்ல, அவ அப்பாவியா, ‘‘எந்த முருகனைச் சொல்றீங்க ஸார்?’’ன்னு கேட்டிருக்கா. அவர் தலையில அடிச்சுக்கிட்டு, ‘‘எருமையச் சொன்னேன்மா. இதை வாங்க அவ்ன் பணம் குடுத்துத்தானே ஆகணும்? இதோட கயித்தைப் புடிச்சுக்கிட்டு கூடவே வா’’ன்னுட்டு நடக்க ஆரம்பிச்சுட்டாரு. இவளும் வேற வழியில்லாம அவர் பின்னாலேயே எருமைக் கயித்தைப் புடிச்சு அதை இழுத்துட்டுப் போயிருக்கா.
அவ கெட்ட நேரம்... அப்ப பாத்துத்தானா காலேஜ்ல அவளைப் பாத்து ஸின்ஸியரா லவ் பண்றேன்னு ‌லிட்டர் லிட்டரா ஜொள்ளு விட்டுட்டிருக்கற சுரேஷ் எதிர்ல வரணும்? அவன் இவ நடந்து வந்த கோலத்தைப் பாத்து குபீர்னு சிரிச்சு, ‘‘உங்கப்பாவும், எங்கப்பா மாதிரியே நீ படிக்கறதுக்கு லாயக்கில்லை, மாடு மேயக்கத்தான்டி லாயக்குன்னு திட்டிட்டாரா? இவ்வளவு சீரியஸா செயல்ல இறங்கிட்டியே...’’ன்னு கேட்ருக்கான். இவ அழுதுட்டா. நடந்ததை அவன்கிட்ட சொல்லிட்டு, ‘‘வேணா இவரைக் கேட்டுப் பாரு’’ன்னு திரும்ப, அந்த வழுக்கையர் எஸ்கேப் ஆயிட்டது அப்பத்தான் தெரிஞ்சிருக்கு. இந்த நேரம் பாத்து, ஒரு டாடா சுமோ பக்கத்துல வந்து ஹாரன் அடிக்க, எருமை மிரண்டு ஓடியிருக்கு.

‘‘ஐயோ... சுரேஷ் உடனே அதைப் பிடி...’’ன்னு இவ கத்த, அவன் எருமை பின்னால ஓட, இவளும் ‘புடிங்க.. புடிங்க...’’ன்னு கத்திக்கிட்டு பின்னாடியே ஓடியிருக்கா. எதிர்ல வந்த மூணு யூத்ஸ் ‘சுரேஷ், இவகிட்ட வம்பு பண்ணிட்டு ஓடி வர்றான் போலருக்கு, அதான் அவனைப் புடிக்கச் சொல்றா’ன்னு நினைச்சு, அவனைப் புடிச்சு செம சாத்து சாத்த ஆரம்பிச்சிருக்காங்க. அவன் ‘‘ஐயோ, அம்மா’ன்னு அலற... இவ போய் அவங்க கிட்ட விளக்கிச் சொல்லி, அவனைக் காப்பாத்தியிருக்கா.

நல்லவேளையா... எருமைக்காரன் எதிர்ல வந்ததால அது அடங்கி அவன் பக்கத்துல போய் நின்னுடுச்சு. அவன், ‘‘என்னம்மா இப்படிப் பண்ணிட்டீங்க?’’ன்னு புலம்பிக்கிட்டே பணத்தைக் குடுத்துட்டு எருமையக் கூட்டிட்டுப் போயிட்டான். இவள் ஸ்கூட்டிய எடுத்துட்டு வீட்டுககு வந்துட்டா. அடுத்த நாள் காலேஜ்ல இவகிட்ட வழிஞ்ச சுரேஷை கண்டுக்காம ஏஞ்சல் போனதுல, அவன கடுப்பாகி இந்த ‘எருமை’ மேட்டரை விரிவா எல்லார் கிட்டயும் பத்த வெச்சுட்டான்.

பசங்கல்லாம் அவளைப் பாத்தாலே ‘எருமை ஏஞ்சல்’ன்னு கூப்பிட்டு டீஸ் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. நாங்க கேர்ள்ஸ் மட்டும் அப்படிக் கூப்பிடறதில்லை. எனக்கு யார் மேலயாவது கோபம் வந்தா, ‘‘ச்சீ போ எருமை’’ன்னு சொல்ற பழக்கம் இருந்தது. ஒரு தடவை அவளைக் கோவிச்சுக்கிட்டு அந்த வார்த்தையச் சொல்லிட, அவ நான் கிண்டல் பண்றேன்னு நினைச்சு அழுதுட்டுப் போயிட்டா. அப்புறம் அவளை சமாதானம் பண்ணிப் பேச வெக்கறதுக்கே ஒரு வாரம் ஆச்சுங்க...  இப்பல்லாம் நான் மறந்து கூட யாரையும் ‘போ, எருமை’ன்னு திட்டறதில்லைங்க! நெசமா...!
மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "‌என் எருமை ஏஞ்சல்!"

21 April 2012

எலி பிடிக்க எலிய வழி!

‘எலி’ங்கற வார்த்தையை யாராவது சொன்னா, மிஸ்டர் ரங்கமணிக்கு ‘கிலி’ பிடித்து விடும். ஏன்னா... அவர் அடைஞ்ச அனுபவம் அப்படி. போன வாரத்துல ஒரு நாள்...

‘‘என்னங்க... வீட்டுல ஒரு எலி நடமாடிக்கிட்டிருக்கு. அதோட தொல்லை தாங்க முடியலை. அதை ஒழிக்க வழி ‌சொல்லுங்களேன்...’’ என்றாள் தங்கமணி.

‘‘இதுக்கேன்டி மண்டைய .உடைச்சுக்கற...? பொறி வாங்கி வெச்சுட்டா எலி மாட்டிக்கும்...’’ என்றார் ரங்கமணி.

‘‘அது என்ன மீனுன்னு நினைச்சீங்களா, பொரி வெச்சா கடிச்சு மாட்டிக்கறதுக்கு?’’

‘‘நாசமாப் போச்சு... பொரி இல்லடி... பொறி! எலிப்பொறியை வாங்கி ‌அது, அடிக்கடி நடமாடற இடத்துல வையின்னு சொன்னேன்’’ அப்படின்னார், அதோட விபரீத விளைவை உணராதவராக.

டுத்த தினம் குளித்து விட்டு, தலை சீவுவதற்காக ட்ரஸ்ஸிங் டேபிள் அருகில் வந்தவர், ‘ஆ’வென்று பெரிதாக அலறினார். காலை உதறிக் கொண்டு, புதுவிதமான பரதநாட்டியம் ஆடினார். காலுக்குக் கீழ் கட்டை இருக்க, காலுக்கு மேல்புறத்தை கம்பி அழுத்தமாக கவ்விக் கொண்டிருக்க, எலிப்பொறி அவர் காலைக் கவ்வி இருந்தது. பதறிப் போய் ஓடி வந்த தங்கமணி அதை அவர் காலிலிருந்து விடுவித்தாள்.

‘‘அடிப்பாவி! இதை வெக்கறதுக்கு உனக்கு வேற இடம் கிடைக்கலியாடி?’’ என்றார் வே‌தனைக் கண்ணீருடன். ‘‘நீங்கதானே அது நடமாடற இடத்துல வெக்கச் சொன்னீங்க. அது ட்ரஸ்ஸிங் டேபிள் பக்கம் ஓடறதை ரெண்டு மூணு தடவை பார்த்தேன். அதான் அங்க வெச்சேன். வாங்க, உடனே டாக்டர்கிட்டப் போகலாம்...’’ அப்படின்னா தங்கமணி.

ட்டோவுல போயி டாக்டரைப் பார்த்து காலி்ல் மருந்து வைத்து கட்டுப் போட்டுக் கொண்டு வந்ததும், ‘‘ஆபீஸ் கிளம்பணும். லீவில்லைடி.’’ என்றார் ரங்கமணி. தன் காலைப் பார்த்து வேதனைப் பெருமூச்சு விட்டபடி, ‘‘கொழுக்கட்டை பணணித் தான்னு ஒரு வாரமா கேட்டுட்டிருந்தேன். இப்படி என் கா‌லை கொழுக்கட்டை மாதிரி ஆக்கிட்டியேடி’’ என்றபடி டிரெஸ் பண்ணிக்கிட்டு கிளம்பினார்.

அடிபட்ட காலை தரையில் ஊன்றாமல் மற்றொரு காலால் அவர் துள்ளித் துள்ளிக் குதித்து பைக்கை நோக்கிப் போக, ‘‘ஹை! நாங்க ஓட்டாஞ்சில்லு எறிஞ்சு பாண்டி விளையாடுவோம் சின்ன வயசுல. அது மாதிரியே அழகாத் தாவறீங்களே...’’ என்றாள் தங்கமணி. பைக்கை நெருங்கி விட்டிருந்த அவர் வெறி கொண்டு திரும்ப, அவள் வீட்டினுள் எஸ்கேப்!

மாலை வீட்டுக்கு வரும்போது வேறொரு எலிப்பொறியை வாங்கிட்டு வந்தார் அவர். ‘‘அடியே... இதுல இங்க கம்பி இருக்கு பாத்தியா... இதுல தின்பண்டத்தை வெச்சுட்டு இப்படி இழுத்து விட்டுட்டயின்னா, எலி கடிச்சதும் கூண்டு மூடிக்கும். நாம அதை வீட்டுக்கு வெளியில தூக்கிப் போட்டுரலாம்டி’’ என்றார்.

‘‘சரிங்க... நான் இப்பவே அதிரசம் செய்யறேன்’’ என்றாள் அவள்.

‘‘எலி விழுந்தப்புறமா ஸ்வீட் செஞ்சு கொண்டாடலாம். இப்பவே எதுக்குடி பண்ற?’’ என்றார் அப்பாவி ரங்கமணி.

‘‘ஆசையப் பாரு... ஸ்வீட் உங்களுக்கில்ல... கூண்டுல வெக்க... எலிக்கு!’’ என்று அவள் சொல்ல, அவர் முகம் ஆயிரம் கோணலானது. அதிரசம் செய்து கூண்டில் வைத்தாள் தங்கமணி. அன்று எலி விழவில்லை. அடுத்த நாள் போளி செய்து வைத்தாள். அப்போதும் எலி கூண்டில் விழவில்லை.

‘‘என்னங்க இது... எலி மாட்டவே மாட்டேங்குது?’’

‘‘அந்த எலிக்கு ஒருவேளை டயபடிஸ் இருக்கும்னு நினைக்கிறேன்... எதுக்கும் அதுகிட்ட விசாரிச்சுட்டு நீ ஸ்வீட் வெச்சிருக்கணும்’’ என்றார் ரங்கமணி. 

அடுத்த கணம் அவரை நோக்கிப் பறந்து வந்த பூரிக் கட்டையை அவர் கேட்ச் பிடித்த அழகை செலக்ஷன் டீம் பார்த்திருந்தால் இந்திய கிரிக்கெட் அணிக்கு செலக்ட் ஆகியிருப்பார் ரங்கமணி.

‘‘கோபிச்சுக்காதடி. நான் சொல்றதைக் கேளு. மசால் வடையைப் பண்ணி அதுக்குள்ள வை. கண்டிப்பா எலி அதைக் கடிச்சுட்டு மாட்டிக்கும்...’’ என்றார். ‘‘மசால்வடை ‌பண்ணிக் குடுன்னு ரெண்டு நாளா சொல்லிட்டிருந்தீங்க. எலியைச் சாக்கு வெச்சு சாப்பிடலாம்னு ப்ளானாக்கும்... சரி, அதையும் செஞ்சு பாக்கறேன்...’’ என்றாள் அலுப்பாக தங்கமணி.

ரவு. கட்டிலை யாரோ ஆட்டுவது போலிருந்தது. கட்டிலிலிருந்து உருண்டு கீழே விழுந்ததில் அலறிக் கண் விழித்தார் ரங்கமணி. சில கணம் கழித்துத்தான் நில நடுக்கம் ஏற்பட்டிருந்தது புரிந்தது. அத்தனைக்கும் கண் விழிக்காத தங்கமணி, எலிப் பொறியின் கதவு ‘டப்’பென்று மூடிக் கொண்ட சத்தத்திற்கு கண் விழித்தாள்.

‘‘என்னங்க... விழுந்துடுச்சு...  விழுந்துடுச்சு...’’ என்று அலறினாள்.

‘‘அறிவு கெட்டவளே! என்னமோ பரிசுப் போட்டியில பரிசு விழுந்துடுச்சுங்கற மாதிரி கத்தறியே..! நிலநடுக்கம்டி... வா, வீட்டுக்கு வெளில ஓடலாம்....’’ என்றபடி வெளியே ஓடினார் ரங்கமணி. வாழ்க்‌கைல முதல் முறையா கணவனை பின்பற்றினா தங்கமணி. நில நடுக்கம் நின்னதுக்கப்பறம் வீட்டுக்குள்ள வந்து பார்த்தப்ப, கூண்டு மூடிக்கிட்டிருந்தது; எலி மாட்டலை.

அப்புறம்தான் தங்கமணிக்கு ஞானோதயம் ஏற்பட்டுது. ‘‘பொதுவா சமையலறை பரண்லதாங்க எலிங்க ஒளிஞ்சுக்கும்னு சொல்லுவாங்க... அதை க்ளீன் பண்ணினா மாட்டிடும்...’’ என்று அவரைப் பாடாய்ப் படுத்தி பரணில் இருக்கும் பாத்திரங்‌களை இறக்கச் சொன்னாள். எலி கீழே குதித்தால் அடிக்க கையில் ஒரு தடிக் கம்புடன் நின்றிருந்தாள் தயாராக.

ஒரு பெரிய அண்டாவை அவர் எடுக்க, எலி அதிலிருந்து அவர் தோளில் குதிக்க... அடுத்த கணம் பொடேரென்று அடித்தாள் தங்கமணி- எலியை இல்லீங்க... அவரை! அந்தப் பொல்லாத எலிதான் அவர் தோளிலிருந்து லாங் ஜம்ப் பண்ணி ஜன்னல் மேல் தாவி, அங்கருந்து ஹை ஜம்ப் பண்ணி வீட்டை விட்டு வெளில போய்டுச்சே!

தங்கமணி அதிகம் ஒண்ணும் எடையில்லங்க... 90 கிலோதான். அந்த வெயிட்டோட தடியோட ஸ்பீடும் சேர்ந்து தாக்கினதுல, 45 கிலோ எடையுள்ள ரங்கமணி... ‘‘ஐயோ, அம்மா’’ன்னு அலறிட்டு விழுந்தவர் எழுந்திருக்கவே இல்ல. அவரோட மயக்கத்தை தெளிய வெச்சு, ஆறுதல்படுத்தி, ஸாரி கேட்டு எல்லாம் ஆனப்பறம், வீட்டுல எல்லா ஜன்னல்களுக்கும் வலைக் கம்பி அடிச்சு, எலி என்ன... கொசு கூட வர முடியாதபடி பண்ணிட்டா தங்கமணி.

டுத்தநாள் ராத்திரி எலித் தொந்தரவு இல்லாம ஏ.ஸி.யப் போட்டுக்கிட்டு ரொம்பவே நிம்மதியாத் தூங்கினா தங்கமணி. ஆனா, பாவம்... ரங்கமணி தான் தூங்கவே இல்ல.ஏன்னா கேக்கறீங்க..? ஏ.ஸி. மிஷின் போடற சத்தத்தை விட நாலு மடங்கு சத்தம் தங்கமணி கிட்டருந்து வந்துக்கிட்டிருந்ததே ‘குறட்டை’ங்கற பேர்ல. அந்த எட்டாவது ஸ்வரத்தைக் கேட்டுடடிருக்கற அவரால எப்படிங்க தூங்க முடியும்?

பின்குறிப்பு : இனிய வலைத்தள நட்புகளே... உறவுகளே...! ஃபர்ஸ்ட் டைமா குட்டியா கதை எழுதலாம்னு ட்ரை பண்ணியிருக்கேன். நல்லா இருந்தது்ன்னு நினைச்சா தட்டிக் கொடுங்க... இல்லன்னாலும் ‘‘சின்னப் புள்ள தானே நிரூ, தட்டிக் கொடுத்தாதான் இனிமேயாவது நல்லா எழுதுவா’’ன்னு அப்பவும் தட்டிக் ‌கொடுங்க. ஹி... ஹி...
மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "எலி பிடிக்க எலிய வழி!"

18 April 2012

மஞ்சள் நிறத் தவளை கண்டதுண்டா!


நிரூ எவ்வளவு பெரிய அறிவாளின்னு உங்களுக்கெல்லாம் நல்லாத் தெரியும்தானே... (சரீ... சரீ... கம்பைக் கீழ போடுங்க) சின்ன வயசுலருந்தே அவ எம்புட்டு அறிவாளியா இருந்தாங்கறதை விளக்கமா நான் எடுத்துச் சொன்னாத்தானே நீங்க புரிஞ்சிக்க முடியும். சில சாம்பிள் சம்பவங்களைப் பாருங்க...

                                                                     சம்பவம் : 1

ப்பா டி.வி.யில் ‘சன் மியூசிக்’ வைத்து, மீனாவை ஊஞ்சல் ஆட்டி, நதியாவைப் பார்த்து காதல் பாட்டுப் பாடும் ‘ராஜகுமாரன்’ பிரபுவை ரசித்துக் கொண்டிருக்கிறார். குட்டி நிரஞ்சனா அருகில் வருகிறாள்.

நிரூ : அப்பா...

அப்பா: நிரூக்குட்டி! இந்த கவுன் .உனக்கு ரொம்ப அழகா இருக்கே... வாடா, செல்லம்! (மடியில் அமர்த்திக் கொள்கிறார்.)

நிரூ: அப்பா... Frag எல்லாம் Green கலர்லதானே இருக்கும்..?

அப்பா: ஆமாண்டா குட்டி! தவளை பச்சையாத்தான் இருக்கும்!

நிரூ: எனக்கு Yellow Colour தவளையைப் பார்க்கணும் டாடி... கூட்டிட்டுப் போயி காட்டுங்க... ப்ளீஸ்!

அப்பா: (குழப்பமாய்) Yellow Colour தவளையா? அப்படி ஒண்ணு கிடையாதும்மா...

நிரூ: போங்க டாடி..! பொய் சொல்றீங்க... (டி.வி.யைக் காட்டி) அந்த அங்கிள் ஆன்ட்டியப் பாத்து, ‘அந்தி மஞ்‌சள் நிறத் தவளை’ன்னு பாட்டு பாடிட்டிருக்கார். ஐயாங்... எனக்கு உடனே மஞ்சள் நிறத் தவளையப் பாத்தாகணும் டாடி... காட்டுங்க...!

அப்பா: அவ்வ்வ்வ்வ்வவ்!

*********************************************************

                                                             சம்பவம் : 2

ம்மா, குட்டி நிரஞ்சனாவை அருகில் வைத்துக் கொண்டு பூஜையறையில் பூஜையை ஆரம்பிக்கிறாள். டேப்பில் கந்தசஷ்டி கவசத்தைப் போட்டுவிட்டு...

அம்மா: நிரூ செல்லம்! முருகக் கடவுளைப் பத்தினது இந்தப் பாட்டு. நல்லாக் கவனிச்சுக் கேளு. முருகன் எவ்வளவு பெரியவர்னு தெரியும். சரியா...?

நிரூ: சரிம்மா... (உன்னிப்பாக பாடலைக் கவனிக்க ஆரம்பிக்கிறாள்.) சற்று நேரத்தில் பூஜையை முடித்து விட்டு...

அம்மா: நிரூ... கந்தசஷ்டி கவசம் கேட்டியா? உனக்கு என்ன புரிஞ்சுது?

நிரூ: (அருகில் படுத்துக்கிடந்த கைக்குழந்தையான தங்கையைக் காட்டி) இவளுககு நான் நிறைய ஹெல்ப் பண்ணனும்னு புரிஞ்சுக்கிட்டேம்மா...

அம்மா: (குழப்பமாக) என்னடி சொல்ற நீ? கந்தசஷ்டி கவசத்துக்கும், தங்கச்சிக்கு ஹெல்ப் பண்றதுக்கும் என்ன சம்பந்தம்?

நிரூ: போம்மா, உனக்கு ஒண்ணுமே தெரியல... ‘சிஸ்டருக்கு உதவும் செங்கதிர் வேலா’ன்னு பாடினாங்களே... முருகனே சிஸ்டருக்கு உதவறார்ன்னா... நான் உதவ வேண்டாமா?

அம்மா: ங்ங்ங்ங்ங்ஙே...!

*********************************************************

                                                                  சம்பவம் : 3

10ம் வகுப்பு படிக்கும் நிருவின் அருகில் பள்ளித் தோழி அனு அமர்ந்திருக்கிறாள்.

நிரூ: ஏய் அனு! நேத்து தமிழ் மிஸ் திருக்குறள் பத்தி சொந்தமா யோசிச்சு ஒரு கட்டுரை எழுதிட்டு வரச் சொன்னாங்களே. எழுதினியாடி.

அனு: எழுதிட்டேன். படிச்சுப் பாருடி... (நோட்டை நிரூவிடம் தந்துவிட்டு) நீ என்ன எழுதியிருக்க... குடு பாப்போம்... (நிரூவின் நோட்டை வாங்கிப் புரட்டுகிறாள்.)

நிரூ: ம்... பரவால்லடி. நல்லாவே எழுதியிருக்க... நான் எழுதினது எப்படி இருக்கு?

அனு: என்னுதை விட நல்லாவே எழுதியிருக்க... அதுசரி நிரூ... உனக்கு இப்பவே கல்யாண ஆசை வந்துடுச்சா? நான் வேணா உன் மம்மி கிட்ட சொல்லட்டுமா, உனக்கு கல்யாணம் பண்ணி வெக்கச் ‌சொல்லி...

நிரூ: (குழப்ப முகத்துடன்) என்னடி உளர்ற? நான் எவ்வளவோ படிக்கணும்னு ப்ளான் வெச்சிருக்கேன். என்னைப் போய் இப்பவே கல்யாணம் பண்ணிக்கச் சொல்றே...?

அனு: இல்லடி... ‘அறம் வலியுறுத்தல்’ங்கற அதிகாரத்துல ஒரு குறளை ரெஃபர் பண்ணி எழுதும் போது, ‘அத்தான் வருவதே இன்பம்’ன்னுல்ல எழுதியிருக்கியே...

நிரூ: (நோட்டைப் பார்த்து) ஸ்பெல்லிங் மிஸ்டேக்டி! 'அறத்தான் வருதே இன்பம் மற்றெல்லாம் புறத்த புகழும் இல்'ன்னு வந்திருக்கணும். அவ்வ்வவ்வ்வ்!

*********************************************************

நோ... நோ...நிரூவோட புத்திசாலித்தனத்து மேல பொறாமைப்பட்டு தக்காளி, அழுகின முட்டை எல்லாம் கைல எடுக்கக் கூடாது.... எதுவா இருந்தாலும் பேசித் தீத்துக்கலாம், சரியா? நல்ல புள்ளையா இப்பப் ‌போயிட்டு என்னோட அடுத்த பதிவுக்கும் வந்துடுங்க. அது போதும்...!
மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "மஞ்சள் நிறத் தவளை கண்டதுண்டா!"

3 March 2012

வணக்கம்! என் முதல் வணக்கம்!



 ஹாய் எவ்ரிபடி! வணக்கம்! வந்தனம்! நமஸ்தே! நமோஷ்கார்! நான் நிரஞ்சனா. புதுசா இன்னிக்கு உங்களுக்கு அறிமுகமாயிருக்கேன். என்னோட ரசனைகளை Share பண்ணிக்கவும், உங்களோட ரசனைகளைத் தெரிஞ்சுக்கவும் ஆசை. முதல் பதிவுங்கறதால சும்மா Funnyயா சில படங்களைப் பார்த்து ரசிங்க. அடுத்த பதிவுலருந்து நாம பேசலாம். ஓ.கே.வா?

பா.... பா.... பா.... பாம்பு!
மச்சி! Sharing பண்ணாட்டி விட்ருவமா நாங்க?
தமிழ்நாட்டுக்கு நெறைய தண்ணி விடுங்கடான்னா கேக்கறாங்களா?

டிரஸ் பண்ணினாத்தான் என் ஆளு லவ் பண்ணுவானாம். உன் டிரஸ்ஸைக் குடு!


இவங்களைப் பாத்து...
பாசத்தைக் கத்துக்கிட்டேன்!
 
இவுங்களைப் பாத்து நான்...

என் செல்லமே...!
சாப்ட்டு ஒரு வாரமாச்சு்ங்க....!

மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "வணக்கம்! என் முதல் வணக்கம்!"
 

கலை அக்கா தந்த பரிசுகள்!

கலை அக்கா தந்த பரிசுகள்!

என் தோழி விஜி தந்த விருது!

என் தோழி விஜி தந்த விருது!