Pages

Ads 468x60px

Showing posts with label கதம்பம். Show all posts
Showing posts with label கதம்பம். Show all posts

11 July 2012

கம கம கதம்பம் - 3


                        ஆஹா... பிரம்மச்சாரிகள்!

ரு காலத்துல ஃபேஷனா இருந்தது காணாமப் போய் மறுபடி இன்னொரு காலத்துல ஃபேஷனா உருமாறி வரும்னு கேள்விப்பட்டிருக்கேன். சில ட்ரெண்டுகளும் கூட அப்படி ஆகுமோ என்னமோ... தெரியலை. பழைய படங்கள்லயும் சரி, சினிமாக்கள்லயும் சரி ஒரு விஷயத்தை நான் கவனிச்சிருக்கேன்- ‘‘பேச்சிலர்க்கெல்லாம் வீடு கொடுக்கறதில்லப்பா. ஃபேமிலிக்குத் தான் நாங்க வீடு கொடுப்போம்’’ என்று ஹவுஸ் ஓனர்கள் சொல்வதாக வரும். அந்த நிலைமை இப்போது அப்படியே உல்டாவாகி விட்டிருக்கிறது. ‘‘ஃபேமிலிக்கெல்லாம் நாங்க வீடு தர்றதில்லை. பேச்சிலர்ஸ் வந்தாப் பரவாயில்லை’’ என்று ஹவுஸ் ஓனர்கள் அறிவிக்காத குறைதான்.

ஒரு குடும்பத் தலைவன் மூக்கால அழுதுக்கிட்டே ஆறாயிரம் ரூபா வாடகை தர்றான்னு வெச்சுக்கங்க. அதே நாலு பேச்சிலர்களைக் குடி வெச்சா, ஆளுக்கு ரெண்டாயிரம் போட்டு, எட்டாயிரம் தந்துடறாங்க. அதிக வாடகை தவிர, பேச்சிலர்ஸ் மோஸ்ட்லி சமையல் பண்றதில்லங்கறதால தண்ணி செலவும் குறைச்சல். இப்டில்லாம் கணக்குப் ‌போட்டு வீட்டு ஓனர்கள் இப்பல்லாம் அதிகமா பேச்சிலர்ஸ்க்கே வீடுதர ஆரம்பிச்சிட்டாங்க. இந்த ட்ரெண்ட் மாறுதா இல்லயான்னு பாத்துட்டு என் 50வது வயசுல ஒரு பதிவு போட்டுடறேன். தவறாம அப்பவும் வந்து கமெண்ட் போட்றணும் எல்லாரும். ஓ.கே.வா? (நான் இருக்கற ஏரியாவுல கவனிச்சுப் பாத்ததை வெச்சுத்தான் இந்த மேட்டர் எழுதியிருக்கேன். உங்க ஏரியாவுல அப்படி இல்லன்னா சந்தோஷம்தான்)

* * * * * * * * * * * * * * * * * * * * * * * *

                சோம பானம் தெரியுமா?

சோமம் என்றால் பச்சை இலை. இமயமலை அருகில் உள்ள சிறு மலைகளில் வளர்ந்து செழித்துக் கிடக்கிறது! சோமம் என்ற வார்த்தைக்கு போதை-ம்யக்கம் என்று பொருள். இந்த சோமச் செடியைக் கசக்கிப் பிழிந்து சாறெடுத்து புளிக்கச் செய்து வைத்துக் குடிப்பார்கள். இதுதான் ஆரம்ப காலத்து மது! அதனால் சோமபானம் என்று இந்த மதுவுக்குப் பெயர்! இதைக் குடித்து அரசர்களும் மந்திரிகளும் அந்தக் காலத்தில் ஆட்டம் போட்டார்கள். நாடும் நட்பும் இழந்து கஷ்டமும் பட்டார்கள். பகை வளர்த்து அடிக்கடி சண்டை இட்டும் கொண்டார்கள்.

இந்த சோமபானம் உடலுக்குத் தீங்கு தராதது! .உடல் பலத்தையும், நலனையும் பாதுகாக்க வல்லது. இதைப் பின்பற்றி கள் பானம் மனிதன் கண்டுபிடித்தான். இதுவும் உடல் பலம் அளித்தது. அளவோடு குடித்தால் ஆயுளும் தந்தது! இன்றைக்கு விஞ்ஞான யுகத்தில் கெமிக்கலில் மது தயாரித்து வேக மரணத்துக்கு வழி கண்டுபிடித்து விட்டான் மனிதன்! இந்த கெமிக்கல் மதுக்கள் இளமையை ஊஞ்சலாடச் செய்து- மரணத்தைக் கூடவே வைத்துக் கொள்ள உதவுகிறது.

      -எதேச்சையா கண்ல பட்ட ‘ஸ்ரீகாளி முரசு’ங்கற புத்தகத்துல இருந்த தகவல்.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * *

         சங்கரன் பிள்ளையின் பேசும் நாய்

த்குரு ஜகி வாசுதேவ் சொல்லும் சங்கரன்பிள்ளை ஜோக்குகள் நிறையவே பிரபலம். அதிலிருந்து ஒன்று இங்கே .உங்களுக்காக:

பேசும் நாய் விற்கப்படும்’ என்று சங்கரன் பிள்ளை வீட்டு வாசலில் அறிவிப்புப் பலகை மாட்டப்பட்டிருந்தது. இதைப் பார்த்த ஒரு நாய்ப் பிரியர், ‘‘நாயைப் பார்க்கணும்’’ என்றார். ‘‘கொல்லைப் பக்கம் கட்டிப் போட்டிருக்கிறேன். போய்ப் பாரும்!’’ என்றார் சங்கரன் பிள்ளை.

வந்தவர் கொல்லைப் பக்கம் போய் நாயைப் பார்த்து, ‘‘நீ பேசுவியாமே’’ என்று கேட்டார்.

நாயும், ‘‘ஆமா... ஆமா... ’’ என்றது.

‘‘உன்னைப் பற்றிச் சொல்லேன்’’ என்றார் நாய்ப் பிரியர்.

‘‘சின்ன வயசிலயே என்னால் பேச முடியும்னு தெரிஞ்சுக்கிட்டேன். அரசாங்கத்துக்கு உதவ நினைச்சேன். அவங்க என்னை நாய் உளவுப் பிரிவில் சேர்த்துக்கிட்டாங்க. விமானத்தில் நாடு விட்டு நாடு அனுப்புவாங்க. உலகத்தின் பல தலைவர்களின் வீட்டு வாசலில் போய்க் காத்திருப்பேன். யாருமே நாயை உளவாளின்னு நினைக்க மாட்டாங்கல்ல... எட்டு வருஷம் இப்படி உலகம் முழுக்க சுத்தினேன். அப்புறம் ரொம்பக் களைபபாயிடுச்சு. அதனால விமான நிலையத்திலேயே சந்தேகப்படுற மாதிரி ஆளுங்களை வேவு பார்த்து உதவி செஞ்சேன். பதக்கம்லாம் கொடுத்துக் கெளரவிச்சாங்க. அப்புறம் ஒரு பெண் நாயைக் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அப்புறம் நிறையக் குட்டிகள் போட்டோம். இப்ப நான் ரிட்டயர்ட் ஆகப் போ்றேன்’’ என்றது.

வந்தவர் வியப்பில் ஆழ்ந்தார். எப்பேர்ப்பட்ட திறமையான நாய் இது என ஆச்சரியப்பட்டார். உடனே அதை வாங்க முடிவு பண்ணி சங்கரன் பிள்ளையிடம் விலை கேட்டார். அவர், ‘‘250 ரூபாய்’’ என்று சொல்ல, ‘‘அப்படியா? 250 ரூபாய்தானா? ஏன் இவ்வளவு மலிவான விலை?’’ எனக் கேட்டார்.

‘‘ஏன்னா, இது நிறையப் பொய் பேசும்’’ என்றார் சங்கரன் பிள்ளை.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * *

    நெல்லி சாப்பிடுங்கோ ஃப்ரெண்ட்ஸ்!

வீட்டில் நெல்லி மரம் வளர்ப்பது மிகுந்த நன்மை தரும். பெருமாளுக்கு நெல்லி இலையால் அர்ச்சனை செய்யலாம். அவருக்குப் பிடித்தமான நைவேத்தியம் நெல்லிக் கனி. வீட்டின் வாசலில் நெல்லி மரம் இருந்தால் பில்லி, சூனியம் ஆகியவை நெருங்காது என்பது நம்பிக்கை. ஏகாதசியில் நெல்லிக் கனியை தண்ணீரில் போட்டு வைத்து, மறுநாள் துவாதசி அன்று எடுத்துச் சாப்பிட்டால் காசியில் குடியிருப்பதற்கு ஒப்பான பலன் கிடைக்கும். நெல்லி மரம் உள்ள வீட்டில் லட்சுமி தங்குவாள் என்பது ஐதீகம்.

-வேற வேற புத்தகங்கள்லருந்து நான் திரட்டின தகவல்கள் இது. எனக்குப் பிடிச்ச நெல்லிக் கனியைத் தரும் மரத்தை வீட்ல வளர்த்தா எவ்வளவு நல்லது பாருங்க... நெல்லிக்காயை வெச்சு சமையல்கூட பண்ணலாம்னு இந்தப் பதிவுல பார்த்துத் தான் தெரிஞ்சுக்கிட்டேன். நீஙகளும் நெல்லிக் கனியை.... வெயிட்... வெயிட்... ஓவரா நெல்லி புராணம் பாடற இவளை நெல்லியாலேயே அடிச்சா என்னன்னு யாரோட மைண்ட் வாய்ஸோ எனக்குக் கேக்குது. அடுத்த மேட்டருக்கு எஸ்கேப்...!

* * * * * * * * * * * * * * * * * * * * * * * *

           ஐயோ பாவம் முதியவர்கள்!

சில வயசானவங்க தங்களோட முதுமையை ஏத்துக்க மறுக்கறது ஏன்னே புரியலை உதாரணத்துக்கு எங்க பக்கத்து வீட்ல இருக்கற ஒரு பாட்டி. அவங்களை மகனும் மருமகளும் எந்தக் குறையும் சொல்லாம தாங்கறாங்க. ஆனா இவங்களுக்குள்ள ‘நமக்கு வயசாய்டுச்சே. முன்ன மாதிரி எந்த வேலையும் செய்ய முடியலையே‘ன்ற காம்ப்ளக்ஸ் இருக்கும போல... அதனால அவங்க சொல்லச் சொல்லக் கேக்காம எல்லா வேலையையும் இழுத்துப் போட்டுக்கிட்டு செய்வாங்க. அதனால ஏதாவது தப்பாகி திட்டும் வாங்கிப்பாங்க.

உதாரணத்துக்கு நேத்து மகனும் மருமகளும் கிளம்பிப் போனதும் தன் செல்லுக்கு ரீசார்ஜ் பண்றேன்னுட்டு கடைக்குப் போயி நம்பர் எழுதிக் குடுத்திருக்காங்க. வீட்டுக்கு வந்து அரை மணி நேரம் கழிச்சும் ரீசார்ஜ் ஆகலையேன்னு கடையில போய் கேட்டப்ப. கடைக்காரர் இவங்க எழுதின நம்பரைப் படிக்க, அப்பத்தான் தான் கடைசி நம்பரை 5க்கு பதிலா 3 எழுதிக் கொடுத்துட்டது புரிஞ்சது. அப்புறம் என்ன... அந்த நம்பருக்கு போன் பண்ணினா ஒரே ’ஸ்விட்ச் ஆஃப்’ மெஸேஜ்தான். கடைக்காரரும் கை விரிச்சுட்டாரு. சாயங்காலம் மகன் வந்ததும் 300 ரூபா நஷ்டமானதைச் சொல்லிப் புலம்ப... ‘என்ட்ட சொல்லிருந்தா நான் பண்ணியிருக்க மாட்டேனா’ன்னு மகன சத்தம் போட்டாரு. அந்தப் பாட்டியைப் பாக்கவே பாவமா இருந்துச்சு எனக்கு. முதுமைய ஏத்துக்கிட்டு இயல்பா அமைதியா இருக்க இந்த மாதிரி சில முதியவங்களால ஏன் முடியலைன்னுதான் தெரியலை.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * *

    ச்சும்மா... கொஞ்சம் ஹெல்த் டிப்ஸ்!

* கொதிக்கும் எண்ணெய் காலில் பட்டுப் புண்ணாகி விட்டதா..? பச்சை .உருளைக் கிழங்கை அரைத்துப் புண்ணின் மேல் வைத்துக் கட்டுங்கள். புண் ஆறி விடும்.

* உருளைக்கிழங்கு வாயுப் பொருளல்ல. குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு மிகத் தேவையானது. உருளைக் கிழங்கிலுள்ள புரதப் பொருள், தானியங்களிலுள்ள புரதப் பொருள்களை விடச் சிறந்தது. உருளைக் கிழங்கு மற்ற தானியங்களைவிட சுலபமாக ஜீரணமாகும். சோறை வைத்துக் கொண்டு உதவி காய்கறிகளை வைத்துக் கொள்வது போல உருளைக் கிழங்கை வைத்துக் கொண்டு உதவிக்கு காய்கறிகளை வைத்துக் கொள்ளலாமே! உருளைக் கிழங்கு மனிதன் உணவில் தவிர்க்க முடியாத பங்கினைப் பெற்றிருக்கிறது.

* பல் ஈறுகளில் வீக்கம் இருக்கிறதா? உப்புப் பொடியையும், மஞ்சள் பொடியையும் சம பாகமாகக் கலந்து பல் துலக்கிய பிறகு ஈறுகளில் வைத்துத் தேய்த்துவிட்டு வாயைக் கொப்புளித்துக் கொண்டு வந்தால் ஈறு சம்பந்தப்பட்ட தொல்லைகள் நீங்கி விடும்!

                                            -இந்தத் தகவல்களையெல்லாம் எனக்குச் சொன்னது
                                                                                       ‘கல்கண்டு’ புத்தகமுங்கோ!

மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "கம கம கதம்பம் - 3"

9 June 2012

கமகம கதம்பம்-2

டந்த ஒரு வாரமா ஒரு வி.ஐ.பி.யோட வருகையினால பெங்களூரு ரொம்பவே குளிர்ந்து போச்சு. அந்த வி.ஐ.பி.யோட பேரைச் சொல்லலாம்னா... தன்னடக்கம் தடுக்குது! ஆனா ஒண்ணுங்க.. (ஆனா ஒண்ணுதான். ஆவன்னாதான் ரெண்டுன்னு கவுண்டமணி மாதிரி யாரும் கடிக்கக் கூடாது) அங்கருக்குற க்ளைமேட்டுலருந்து சென்னைக்குள்ள வந்ததுமே ‘ஏன்தான் வந்தோமோ’ன்னு இங்கருக்கற வெயில் சலிச்சுக்க வெக்குது. இப்ப... நான் படிச்ச புத்தகங்களலருந்து ‘சுட்ட’ கதம்பச் செய்திகள் உங்களுக்காக...
  
                           ஐஸ்ஹவுஸின் வரலாறு

னிக்கட்டி ராஜா என்று புகழ் பெற்ற ‘பிரெடிரிக் ட்யூடர்’ என்னும் அமெரிக்கர் ஒரு சிறந்த வியாபாரி. 1783 லிருந்து 1864 வரை உலகின் பல பாகங்களுக்கும் ஐச் கட்டிகளை ஏற்றுமதி செய்தவர். நியூ இங்கிலாந்து பகுதியிலிருந்து உருவான ஐச்கட்டிகளைச் செங்கற்களைப் போல அடுக்கி அவை உருகாமலிருக்க மரத்தூள், தவிடு போன்றவை கொண்டு மூடி வைப்பார்.

இப்படி கப்பல் மூலம் கொண்டு வரும் டன் கணக்கான ஐஸ்கட்டிகளைப் பாதுகாக்க அவர் மதறாஸ், பம்பாய், கொல்கத்தா ஆகிய நகரங்களிலும் ஐஸ்ஹவுஸ்களைக் கட்டினார். அவற்றுள் சென்னையில் மட்டுமே அவர் கட்டிய ஐஸ்ஹவுஸ் இன்னும் பாரம்பரியமிக்க இடமாக இருக்கிறது.

1880-ல் ஐஸ் வியாபாரம் தொய்வு கண்டபின் பிலிகிரி ஐயங்கார் என்ற வழக்கறிஞர் அக்கட்டடத்தை வாங்கி, தம் நண்பரான நீதிபதி கெர்னனின் நினைவாக ‘கெர்னன் மாளிகை’ என்று பெயரிட்டார்.  பின்னர் அக்கட்டடத்தில் சில மாற்றங்களைச் செய்தார் என்றாலும் குடியிருப்பதற்குத் தகுந்த காற்றோற்றம் இல்லை.

வசதியற்ற, படிப்பில் பின் தங்கிய மாணவர்கள் தங்குமிடமாக அதை மாற்றி 1893ல் மேலும் திருத்தங்கள் பல செய்வதற்காக ரூ.7,000 கடன் வாங்கினார். ‘மைசூர் ஐயங்கார் அறக்கட்டளை’ என்ற பெயரில் ஒரு லட்சத்த்துக்கு மேல் நிதி திரட்டி சமுதாய நலப்பணிகளும் கல்விப் பணியும் செய்துவந்தார்.

சுவாமி விவேகானந்தரின் வருகைக்குப் பின்னரே ‘ஐஸ்ஹவுஸ்’ வரலாற்றுச் சிறப்பும், பாரம்பரிய மிக்கதொரு புண்ணிய பூமியாகவும் மாறி ராம கிருஷ்ண இயக்கத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நின்றது எனலாம்.

                                                                                           - ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்

                பிள்ளையாரை நீரில் ஏன் கரைக்கிறார்கள்?

`நித்ய பூஜை' செய்யாமல் விக்ரஹங்களை வைத்திருக்கக் கூடாது. மண்ணால் செய்யப்பட்ட விக்ரஹம் என்றால் அதை நீர்நிலையில் சேர்ப்பித்துவிட வேண்டும். அதுவும் ஊர்வலமாக எடுத்துச் சென்றுதான் நீர்நிலையில் சேர்க்கவேண்டும் என்று ஆகம சாஸ்திரங்கள் கூறுகின்றன. எனவே, விநாயகரை கடலில் கொண்டு சென்று கரைப்பது என்பது விநாயகருக்கு இழைக்கப்படும் கொடுமை அல்ல. ஆகம விதிகளின்படி செய்யும் பக்தி வழிபாட்டின் ஓர் அங்கமே. `விசர்ஜன ஊர்வலம்' என்பது வடநாட்டில் ரொம்பப் பிரசித்தி. பத்மபுராணத்தில் கதை ஒன்று உண்டு-

ஒரு சமயம் பார்வதிதேவி கங்கையில் நீராடியபோது தன் அழுக்கைத் திரட்டி பொம்மையாக்க, அது யானைத் தலையும் மனித உருக்கொண்டும் அமைந்தது. அதை அன்னை கங்கையில் எறிய, பேருருக் கொண்டு விநாயகர் வெளிப்பட்ட தாகவும், அப்போது பார்வதியும் கங்கையும் அவரை பிள்ளையாக ஏந்திக் கொண்டனராம். இக்காரணத்தால் பார்வதி, கங்கை இருவருமே அவருக்கு அன்னையராயினர். இதனாலேயே சதுர்த்தி முடிந்ததும் பிள்ளையாரைக் கங்கையில் கரைக்கும் வழக்கம் ஏற்பட்டதாம்.


                       வினாத்தாள் வாங்கியவுடன்
                       எழுதத் தொடங்குவது சரியா?

வினாத்தாளை வாங்கியவுடன் சிலர் பதில் எழுத ஆரம்பித்து விடுவார்கள். முழுவதுமாக எழுதி முடித்தவுடன் வினாவை  மறுபடியும் வாசித்தால் அவர்கள் எழுதிய பதிலுக்கும் கேட்ட வினாவுக்கும் சம்பந்தமில்லை என்பது தெரியும். வினாவின் தொடக்கத்தை மட்டுமே வாசித்து விட்டு எழுதியதால் வந்த வினை.

வினாத்தாளை முழுவதுமாக படியுங்கள். முதல் பத்து நிமிடங்கள் எந்த வினாவுக்கும் பதில் எழுதாமல் எல்லா வினாக்களையும் வாசித்து நன்றாகத் தெரிந்த பரிச்சயமான வினாக்களை தேர்ந்தெடுக்க வேண்டும். வினாக்களின் தன்மை, அவற்றுக்கு எந்த விதத்தில் எந்த முறையில் பதிலளிப்பது என்பதைத் திட்டமிட்டுக்கொள்ள வேண்டும்.

பல மாணவர்கள் மிகவும் நன்றாக எழுதக்கூடிய விடையில் மட்டும் தேர்வின் பாதி நேரத்தை செலவழித்து விட்டு மற்ற வற்றிற்கு அரக்கப்பரக்க சுருக்கி விடையளித்து ஒரு சில வினாக்கள் விடுபட பரிதாபமாகத் தோல்வியைத் தழுவி யிருக்கிறார்கள்.

                                                                        -தினமலர் ஜெயித்துக் காட்டுவோம் 
                                                                          வழிகாட்டிப் புத்தகத்திலிருந்து...

                 எந்த உபாதைக்கும் கவலை வேண்டாம்!

லை சுற்றல்:  சுக்கு, மிளகு, திப்பிலி, விலாமிச்சை வேர், சீரகம் ஆகியவைகளை 5 கிராம் வீதம் பவுடராக்கி தினசரி காலை மாலை கரண்டி சாப்பிட தலை சுற்றல் குணமாகும்.

இருமல் குணமாக:  அரச மரத்துப் பட்டையைக் காய வைத்து வறுத்து கரியானவுடன் தூளாக்கி 1 டம்ளர் நீரில் 1 கரண்டி போட்டுக் கொதித்ததும் வடிகட்டி சர்க்கரை பால் சேர்த்துக் குடிக்க இருமல் குணமாகும்.

ஜலதோஷம்:  ஜலதோஷம் காய்ச்சல் தலைவலிக்கு பனங்கிழங்கை அவித்து காயவைத்து இடித்துப் பொடியாக்கி பனங்கல்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் ஜலதோஷம் பணால்.

சளிகட்டு நீங்க: தூதுவளை, ஆடாதோடா இலை, சங்கன் இலை, கண்டங்கத்திரி இலை, சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்துச் சாப்பிட இரைப்பு சளிகட்டு நீங்கும்.

தலைவலி, மூக்கடைப்பு நீங்க:  நெல்லிக்காயில் கொட்டையை நீக்கி 1/2 லிட்டர் சாறு எடுத்து அதில் அளவாக உப்பு சேர்த்து 3 நாள் வெயிலில் காய வைத்து பின் தேங்காய் எண்ணெயை கொதிக்க வைத்து அதில் நெல்லி சாறு கலந்து கொதிக்க வைத்துக் கொண்டு மூக்கில் நுகர தலைவலி மூக்கடைப்பு விலகும்.

நெஞ்சு சளி:  தேங்காய் எண்ணெயில் கற்பூரம் சேர்த்து சுட வைத்து நெஞ்சில் தடவ குணமாகும்.

                                              -எளிய சித்த மருத்துவக் குறிப்புகள் புத்தகத்திலிருந்து
மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "கமகம கதம்பம்-2"

24 May 2012

கமகம கதம்பம்!


சின்ன வயசுலருந்தே எனக்கு நெல்லிக் காய்ன்னா ரொம்பப் பிடிக்கும். அம்மா எனக்காக நிறைய நெல்லிக்காய் வாங்கி, தேன்ல ஊற வெச்சுக் கொடுப்பாங்க. நெல்லிக்காய் பத்தின சில அரிய தகவல்கள் இதோ:

ரத்தத்தைப் பலப்படுத்தும் ஆறு சுவைகளில் இனிப்பு, புளிப்பு, கைப்பு, துவர்ப்பு, உவர்ப்பு ஆகிய ஐந்தும் நெல்லிக்காயில் உள்ளன. இனிப்பும் .உவர்ப்பும் பித்தத்தையும், புளிப்பு வாயுவையும், துவர்ப்பும் கைப்பும் கபத்தையும் போக்கக் கூடியவை.ஆக, வாத-பித்த-கபம் மூன்று தோஷங்களையும் போக்கக் கூடிய சக்தி நெல்லிக்காயில் இருப்பதால் இது மிகவும் சிறந்தது. இதில் A, B, C ஆகிய வைட்டமின்கள் இருக்கின்றன. மற்றக் கனிகளைப் போல இல்லாமல் நெல்லிக்காய் வாடினாலும் அதில் வைட்டமின் குன்றுவதில்லை. பின்ன... சும்மாவா நெல்லிககாயை ஒளவையாருக்குக் கொடுத்தார் அதியமான்?  நீங்களும் நெல்லிக்காய் வாங்கி நிறையச் சாப்பிடுங்க ஃப்ரெண்ட்ஸ்!

*   *    *   *   *    *

‘மது‌ரைவீரன்’ படப்பிடிப்புக்கு கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும் அவரது துணைவியார் டி.ஏ.மதுரமும் வந்திருந்த போது மதுரை மீனாட்சி கோயிலை சுற்றிப் பார்த்தார்கள். அப்போது அங்கிருந்த இசைத் தூண்களை அவர்களுக்குக் காட்டினார்கள் உடன் வந்தவர்கள். அந்தத் தூண்களைக் கையால் தட்டிப் பார்த்த என்.எஸ்.கே., ‘‘இதுக்குள்ள ஒரு செய்தி இருக்கு’’ என்று சொல்லிவிட்டு, ‘‘இது தும்தும், அது பம்பம், இது தீம்தீம், அது தோம்தோம்’’ என்று தூண்களை தட்டிக் காட்டினார்.

எல்லாரும் புரியாமல் அவரைப் பார்க்கவும், ‘‘என்ன புரியலையா? தும்தும் பம்பம் - துன்பம், தீம்தீம் தோம்தோம் - தீர்ந்தோம். சேர்த்துச் சொன்னா துன்பம் தீர்ந்தோம். அதாவது இசையை அனுபவித்தால் துன்பம் தீர்ந்து விடும் என்று இந்தக் கல்லும் கதை சொல்லுகிறது’’ என்றார் கலைவாணர். அந்த நகைச்சுவை மேதையின் பேச்சை ரசித்துக் கை தட்டினார்கள் சுற்றிலுமிருந்தவர்கள்.

*   *    *   *   *    *

ர்ஜுனனுக்கு ஒரு மனக்குறை. ‘‘நானும் என் வீடு தேடி வருபவர்களுக்கு இல்லையென்னாமல் தானம் செய்கிறேன். ஏன் என்னைக் கொ‌டை வள்ளல் என்ற சொல்வதில்லை? கர்ணனை மட்டும் அப்படிச் சொல்கிறார்களே... அவன் என்ன .உசத்தி?’’ என்று ஸ்ரீ கிருஷ்ணரிடம் கேட்டான். மறுதினம் காலை அர்ஜுனனை கோட்டைக்கு வெளியே அழைத்துச் சென்ற கிருஷ்ணர், கையை அசைத்து இரண்டு தங்க மலைகளை வரவழைத்தார். ‘‘அர்ஜுனா! இன்று சூரியன் மறைவதற்குள் இந்த இரண்டு மலைகளையும் நீ வறியவர்களுக்கு தானம் செய்துவிட வேண்டும். நீ கொடை வள்ளல் என்றால் உன்னால் முடியும்’’ என்றார். அர்ஜுனன் பறையறிவித்து மக்களை வரச் செய்து, வெட்டி வெட்டிக் கொடுத்துக் கொண்டேயிருந்தான்.

பகல் முழுவதும் சளைக்காமல் அர்ஜுனன் வெட்டி வெட்டி தானம் செய்தும்கூட ஒரு மலையில் பாதி தான் கரைந்திருந்தது. மாலை மங்குவதற்கு இன்னும் சற்று நேரம் தான் இருந்தது. அர்ஜுனன் களைப்பாகி, ‘‘என்னால் முடியவில்லை கண்ணா!’’ என்றான். கண்ணன் உடனே ஆளையனுப்பி கர்ணனை அழைத்து வரச் சொன்னார். கர்ணன் வந்து வணங்கி நிற்க, அர்ஜுனனிடம் சொன்ன அதே வார்த்தைகளைக் கர்ணனிடமும் சொன்னார் கண்ணன். கர்ணன் ஒரு கணமும் யோசிக்காமல், யாசகம் கேட்டு வந்த இருவரிடம், ‘‘இந்த மலையை நீ வைத்துக் கொள், அந்த மலையை அவன் எடுத்துக் கொள்ளட்டும்...’’ என்று சொல்ல, அவர்கள் அவனைப் புகழ்ந்து வாழ்த்தி விட்டுச் சென்றனர். ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனைத் திரும்பிப் பார்க்க, அவரின் பார்வையின் பொருளும், கர்ணனின் கொடைச் சிறப்பும் அர்ஜுனனுக்குத் தெளிவாகப் புரிந்தது.

*   *    *   *   *    *

மேஸான் மழைக் காடுகள் உலகிலுள்ள பிராணவாயுவில் 20 சதவீதத்தை உற்பத்தி செய்கிறது. அமேஸான் நதி எவ்வளவு அதிகத் தண்ணீரைக் கடலில் பாய்ச்சுகிறது என்றால் நதி கடலில் சங்கமித்த இடத்திலிருந்து 100 மைல் தூரத்தில் கூடக் கடலிலிரந்து இனிப்பத் தண்ணீர் (Fresh Water) பெறலாம். அமேஸான் நதியிலுள்ள நீர் அதையடுத்த எட்டுப் பெரிய நதிகளின் நீரின் மொத்த அளவை விட அதிகம். அமெரிக்காவிலுள்ள எல்லா நதிகளின் நீரின் மொத்த அளவைவிட மூன்று மடங்கு நீர் அமேஸான் நதியில் உள்ளது.

*   *    *   *   *    *

ரெண்டு நாள் முன்னால நான் வீட்டுக்குப் போக டைமாயிடுச்சேன்னு ஸ்கூட்டிய வேகமா ஓட்டிட்டுப் போய்ட்டிருந்தப்ப பைக்ல வந்துட்டிருந்த ஒரு ஆளை முந்திட்டேன். நான் கடந்ததும் சிக்னல்ல ரெட் விழுந்துட்டுதனால மத்த வாகனங்கள் தேங்கிடுச்சு. கொஞ்ச தூரம் போயிருப்பேன்... ‘ரொய்ய்ய்ய்ங்’ன்ற சத்தத்தோட படுவேகமா என் வண்டிய உரசற மாதிரி வந்து ஓவர்டேக் பண்ணிட்டு, பெருமையாத் திரும்பிப் பார்த்துட்டுப் போனான் அதை ஒட்டின இளைஞன்.

 நான் பயந்துபோய் வண்டியை ஓரமா நிறுத்தி, ஆசுவாசப்படுத்திக்கிட்டு ரெண்டு நிமிஷம் கழிச்சு வண்டியை எடுத்தேன். ஆம்பளைங்களோட இந்த சைக்காலஜிதான் எனக்குப் புரியறதே இல்லை. ஒரு பெண் ஓவர்டேக் பண்ணிட்டுப் போயிட்டா எந்த விதத்துல உங்களுக்கு கிரீடம் குறைஞ்சு போகுது? ஏன் இப்படி வெறித்தனமா பைக் ஓட்டணும்? (என் மூஞ்சியை ‌‌ஸைட் அடிக்க வந்திருப்பான்னு நெனைக்காதீங்க. மீ ஹெல்மெட் போட்டு முகத்தை மறைச்சுட்டு வண்டி ஓட்டற டைப்பாக்கும்!)

*   *    *   *   *    *

O.K. Friends! நான் கிளம்பறதுக்கு முன்னாடி.... Let us end with a smile...

ராமு : ‘‘என் வொய்ஃபுக்கு சமைக்கத் தெரியும். சமைக்க மாட்டேங்கறாடா...’’

சோமு : ‘‘நீ குடுத்து வெச்சவண்டா. என் வொய்ஃபுக்கு சமைக்கத் தெரியாது. ஆனா சமைக்கறாடா..!’’

மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "கமகம கதம்பம்!"
 

கலை அக்கா தந்த பரிசுகள்!

கலை அக்கா தந்த பரிசுகள்!

என் தோழி விஜி தந்த விருது!

என் தோழி விஜி தந்த விருது!