ஆஹா... பிரம்மச்சாரிகள்!
ஒரு காலத்துல ஃபேஷனா இருந்தது காணாமப் போய் மறுபடி இன்னொரு காலத்துல ஃபேஷனா உருமாறி வரும்னு கேள்விப்பட்டிருக்கேன். சில ட்ரெண்டுகளும் கூட அப்படி ஆகுமோ என்னமோ... தெரியலை. பழைய படங்கள்லயும் சரி, சினிமாக்கள்லயும் சரி ஒரு விஷயத்தை நான் கவனிச்சிருக்கேன்- ‘‘பேச்சிலர்க்கெல்லாம் வீடு கொடுக்கறதில்லப்பா. ஃபேமிலிக்குத் தான் நாங்க வீடு கொடுப்போம்’’ என்று ஹவுஸ் ஓனர்கள் சொல்வதாக வரும். அந்த நிலைமை இப்போது அப்படியே உல்டாவாகி விட்டிருக்கிறது. ‘‘ஃபேமிலிக்கெல்லாம் நாங்க வீடு தர்றதில்லை. பேச்சிலர்ஸ் வந்தாப் பரவாயில்லை’’ என்று ஹவுஸ் ஓனர்கள் அறிவிக்காத குறைதான்.
ஒரு குடும்பத் தலைவன் மூக்கால அழுதுக்கிட்டே ஆறாயிரம் ரூபா வாடகை தர்றான்னு வெச்சுக்கங்க. அதே நாலு பேச்சிலர்களைக் குடி வெச்சா, ஆளுக்கு ரெண்டாயிரம் போட்டு, எட்டாயிரம் தந்துடறாங்க. அதிக வாடகை தவிர, பேச்சிலர்ஸ் மோஸ்ட்லி சமையல் பண்றதில்லங்கறதால தண்ணி செலவும் குறைச்சல். இப்டில்லாம் கணக்குப் போட்டு வீட்டு ஓனர்கள் இப்பல்லாம் அதிகமா பேச்சிலர்ஸ்க்கே வீடுதர ஆரம்பிச்சிட்டாங்க. இந்த ட்ரெண்ட் மாறுதா இல்லயான்னு பாத்துட்டு என் 50வது வயசுல ஒரு பதிவு போட்டுடறேன். தவறாம அப்பவும் வந்து கமெண்ட் போட்றணும் எல்லாரும். ஓ.கே.வா? (நான் இருக்கற ஏரியாவுல கவனிச்சுப் பாத்ததை வெச்சுத்தான் இந்த மேட்டர் எழுதியிருக்கேன். உங்க ஏரியாவுல அப்படி இல்லன்னா சந்தோஷம்தான்)
* * * * * * * * * * * * * * * * * * * * * * * *
சோம பானம் தெரியுமா?
சோமம் என்றால் பச்சை இலை. இமயமலை அருகில் உள்ள சிறு மலைகளில் வளர்ந்து செழித்துக் கிடக்கிறது! சோமம் என்ற வார்த்தைக்கு போதை-ம்யக்கம் என்று பொருள். இந்த சோமச் செடியைக் கசக்கிப் பிழிந்து சாறெடுத்து புளிக்கச் செய்து வைத்துக் குடிப்பார்கள். இதுதான் ஆரம்ப காலத்து மது! அதனால் சோமபானம் என்று இந்த மதுவுக்குப் பெயர்! இதைக் குடித்து அரசர்களும் மந்திரிகளும் அந்தக் காலத்தில் ஆட்டம் போட்டார்கள். நாடும் நட்பும் இழந்து கஷ்டமும் பட்டார்கள். பகை வளர்த்து அடிக்கடி சண்டை இட்டும் கொண்டார்கள்.
ஒரு காலத்துல ஃபேஷனா இருந்தது காணாமப் போய் மறுபடி இன்னொரு காலத்துல ஃபேஷனா உருமாறி வரும்னு கேள்விப்பட்டிருக்கேன். சில ட்ரெண்டுகளும் கூட அப்படி ஆகுமோ என்னமோ... தெரியலை. பழைய படங்கள்லயும் சரி, சினிமாக்கள்லயும் சரி ஒரு விஷயத்தை நான் கவனிச்சிருக்கேன்- ‘‘பேச்சிலர்க்கெல்லாம் வீடு கொடுக்கறதில்லப்பா. ஃபேமிலிக்குத் தான் நாங்க வீடு கொடுப்போம்’’ என்று ஹவுஸ் ஓனர்கள் சொல்வதாக வரும். அந்த நிலைமை இப்போது அப்படியே உல்டாவாகி விட்டிருக்கிறது. ‘‘ஃபேமிலிக்கெல்லாம் நாங்க வீடு தர்றதில்லை. பேச்சிலர்ஸ் வந்தாப் பரவாயில்லை’’ என்று ஹவுஸ் ஓனர்கள் அறிவிக்காத குறைதான்.
ஒரு குடும்பத் தலைவன் மூக்கால அழுதுக்கிட்டே ஆறாயிரம் ரூபா வாடகை தர்றான்னு வெச்சுக்கங்க. அதே நாலு பேச்சிலர்களைக் குடி வெச்சா, ஆளுக்கு ரெண்டாயிரம் போட்டு, எட்டாயிரம் தந்துடறாங்க. அதிக வாடகை தவிர, பேச்சிலர்ஸ் மோஸ்ட்லி சமையல் பண்றதில்லங்கறதால தண்ணி செலவும் குறைச்சல். இப்டில்லாம் கணக்குப் போட்டு வீட்டு ஓனர்கள் இப்பல்லாம் அதிகமா பேச்சிலர்ஸ்க்கே வீடுதர ஆரம்பிச்சிட்டாங்க. இந்த ட்ரெண்ட் மாறுதா இல்லயான்னு பாத்துட்டு என் 50வது வயசுல ஒரு பதிவு போட்டுடறேன். தவறாம அப்பவும் வந்து கமெண்ட் போட்றணும் எல்லாரும். ஓ.கே.வா? (நான் இருக்கற ஏரியாவுல கவனிச்சுப் பாத்ததை வெச்சுத்தான் இந்த மேட்டர் எழுதியிருக்கேன். உங்க ஏரியாவுல அப்படி இல்லன்னா சந்தோஷம்தான்)
* * * * * * * * * * * * * * * * * * * * * * * *
சோம பானம் தெரியுமா?
சோமம் என்றால் பச்சை இலை. இமயமலை அருகில் உள்ள சிறு மலைகளில் வளர்ந்து செழித்துக் கிடக்கிறது! சோமம் என்ற வார்த்தைக்கு போதை-ம்யக்கம் என்று பொருள். இந்த சோமச் செடியைக் கசக்கிப் பிழிந்து சாறெடுத்து புளிக்கச் செய்து வைத்துக் குடிப்பார்கள். இதுதான் ஆரம்ப காலத்து மது! அதனால் சோமபானம் என்று இந்த மதுவுக்குப் பெயர்! இதைக் குடித்து அரசர்களும் மந்திரிகளும் அந்தக் காலத்தில் ஆட்டம் போட்டார்கள். நாடும் நட்பும் இழந்து கஷ்டமும் பட்டார்கள். பகை வளர்த்து அடிக்கடி சண்டை இட்டும் கொண்டார்கள்.
இந்த சோமபானம் உடலுக்குத் தீங்கு தராதது! .உடல் பலத்தையும், நலனையும் பாதுகாக்க வல்லது. இதைப் பின்பற்றி கள் பானம் மனிதன் கண்டுபிடித்தான். இதுவும் உடல் பலம் அளித்தது. அளவோடு குடித்தால் ஆயுளும் தந்தது! இன்றைக்கு விஞ்ஞான யுகத்தில் கெமிக்கலில் மது தயாரித்து வேக மரணத்துக்கு வழி கண்டுபிடித்து விட்டான் மனிதன்! இந்த கெமிக்கல் மதுக்கள் இளமையை ஊஞ்சலாடச் செய்து- மரணத்தைக் கூடவே வைத்துக் கொள்ள உதவுகிறது.
-எதேச்சையா கண்ல பட்ட ‘ஸ்ரீகாளி முரசு’ங்கற புத்தகத்துல இருந்த தகவல்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * *
சங்கரன் பிள்ளையின் பேசும் நாய்
சத்குரு ஜகி வாசுதேவ் சொல்லும் சங்கரன்பிள்ளை ஜோக்குகள் நிறையவே பிரபலம். அதிலிருந்து ஒன்று இங்கே .உங்களுக்காக:
‘பேசும் நாய் விற்கப்படும்’ என்று சங்கரன் பிள்ளை வீட்டு வாசலில் அறிவிப்புப் பலகை மாட்டப்பட்டிருந்தது. இதைப் பார்த்த ஒரு நாய்ப் பிரியர், ‘‘நாயைப் பார்க்கணும்’’ என்றார். ‘‘கொல்லைப் பக்கம் கட்டிப் போட்டிருக்கிறேன். போய்ப் பாரும்!’’ என்றார் சங்கரன் பிள்ளை.
வந்தவர் கொல்லைப் பக்கம் போய் நாயைப் பார்த்து, ‘‘நீ பேசுவியாமே’’ என்று கேட்டார்.
-எதேச்சையா கண்ல பட்ட ‘ஸ்ரீகாளி முரசு’ங்கற புத்தகத்துல இருந்த தகவல்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * *
சங்கரன் பிள்ளையின் பேசும் நாய்
சத்குரு ஜகி வாசுதேவ் சொல்லும் சங்கரன்பிள்ளை ஜோக்குகள் நிறையவே பிரபலம். அதிலிருந்து ஒன்று இங்கே .உங்களுக்காக:
‘பேசும் நாய் விற்கப்படும்’ என்று சங்கரன் பிள்ளை வீட்டு வாசலில் அறிவிப்புப் பலகை மாட்டப்பட்டிருந்தது. இதைப் பார்த்த ஒரு நாய்ப் பிரியர், ‘‘நாயைப் பார்க்கணும்’’ என்றார். ‘‘கொல்லைப் பக்கம் கட்டிப் போட்டிருக்கிறேன். போய்ப் பாரும்!’’ என்றார் சங்கரன் பிள்ளை.
வந்தவர் கொல்லைப் பக்கம் போய் நாயைப் பார்த்து, ‘‘நீ பேசுவியாமே’’ என்று கேட்டார்.
நாயும், ‘‘ஆமா... ஆமா... ’’ என்றது.
‘‘உன்னைப் பற்றிச் சொல்லேன்’’ என்றார் நாய்ப் பிரியர்.
‘‘சின்ன வயசிலயே என்னால் பேச முடியும்னு தெரிஞ்சுக்கிட்டேன். அரசாங்கத்துக்கு உதவ நினைச்சேன். அவங்க என்னை நாய் உளவுப் பிரிவில் சேர்த்துக்கிட்டாங்க. விமானத்தில் நாடு விட்டு நாடு அனுப்புவாங்க. உலகத்தின் பல தலைவர்களின் வீட்டு வாசலில் போய்க் காத்திருப்பேன். யாருமே நாயை உளவாளின்னு நினைக்க மாட்டாங்கல்ல... எட்டு வருஷம் இப்படி உலகம் முழுக்க சுத்தினேன். அப்புறம் ரொம்பக் களைபபாயிடுச்சு. அதனால விமான நிலையத்திலேயே சந்தேகப்படுற மாதிரி ஆளுங்களை வேவு பார்த்து உதவி செஞ்சேன். பதக்கம்லாம் கொடுத்துக் கெளரவிச்சாங்க. அப்புறம் ஒரு பெண் நாயைக் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அப்புறம் நிறையக் குட்டிகள் போட்டோம். இப்ப நான் ரிட்டயர்ட் ஆகப் போ்றேன்’’ என்றது.
வந்தவர் வியப்பில் ஆழ்ந்தார். எப்பேர்ப்பட்ட திறமையான நாய் இது என ஆச்சரியப்பட்டார். உடனே அதை வாங்க முடிவு பண்ணி சங்கரன் பிள்ளையிடம் விலை கேட்டார். அவர், ‘‘250 ரூபாய்’’ என்று சொல்ல, ‘‘அப்படியா? 250 ரூபாய்தானா? ஏன் இவ்வளவு மலிவான விலை?’’ எனக் கேட்டார்.
‘‘ஏன்னா, இது நிறையப் பொய் பேசும்’’ என்றார் சங்கரன் பிள்ளை.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * *
நெல்லி சாப்பிடுங்கோ ஃப்ரெண்ட்ஸ்!
வீட்டில் நெல்லி மரம் வளர்ப்பது மிகுந்த நன்மை தரும். பெருமாளுக்கு நெல்லி இலையால் அர்ச்சனை செய்யலாம். அவருக்குப் பிடித்தமான நைவேத்தியம் நெல்லிக் கனி. வீட்டின் வாசலில் நெல்லி மரம் இருந்தால் பில்லி, சூனியம் ஆகியவை நெருங்காது என்பது நம்பிக்கை. ஏகாதசியில் நெல்லிக் கனியை தண்ணீரில் போட்டு வைத்து, மறுநாள் துவாதசி அன்று எடுத்துச் சாப்பிட்டால் காசியில் குடியிருப்பதற்கு ஒப்பான பலன் கிடைக்கும். நெல்லி மரம் உள்ள வீட்டில் லட்சுமி தங்குவாள் என்பது ஐதீகம்.
‘‘உன்னைப் பற்றிச் சொல்லேன்’’ என்றார் நாய்ப் பிரியர்.
‘‘சின்ன வயசிலயே என்னால் பேச முடியும்னு தெரிஞ்சுக்கிட்டேன். அரசாங்கத்துக்கு உதவ நினைச்சேன். அவங்க என்னை நாய் உளவுப் பிரிவில் சேர்த்துக்கிட்டாங்க. விமானத்தில் நாடு விட்டு நாடு அனுப்புவாங்க. உலகத்தின் பல தலைவர்களின் வீட்டு வாசலில் போய்க் காத்திருப்பேன். யாருமே நாயை உளவாளின்னு நினைக்க மாட்டாங்கல்ல... எட்டு வருஷம் இப்படி உலகம் முழுக்க சுத்தினேன். அப்புறம் ரொம்பக் களைபபாயிடுச்சு. அதனால விமான நிலையத்திலேயே சந்தேகப்படுற மாதிரி ஆளுங்களை வேவு பார்த்து உதவி செஞ்சேன். பதக்கம்லாம் கொடுத்துக் கெளரவிச்சாங்க. அப்புறம் ஒரு பெண் நாயைக் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அப்புறம் நிறையக் குட்டிகள் போட்டோம். இப்ப நான் ரிட்டயர்ட் ஆகப் போ்றேன்’’ என்றது.
வந்தவர் வியப்பில் ஆழ்ந்தார். எப்பேர்ப்பட்ட திறமையான நாய் இது என ஆச்சரியப்பட்டார். உடனே அதை வாங்க முடிவு பண்ணி சங்கரன் பிள்ளையிடம் விலை கேட்டார். அவர், ‘‘250 ரூபாய்’’ என்று சொல்ல, ‘‘அப்படியா? 250 ரூபாய்தானா? ஏன் இவ்வளவு மலிவான விலை?’’ எனக் கேட்டார்.
‘‘ஏன்னா, இது நிறையப் பொய் பேசும்’’ என்றார் சங்கரன் பிள்ளை.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * *
நெல்லி சாப்பிடுங்கோ ஃப்ரெண்ட்ஸ்!
வீட்டில் நெல்லி மரம் வளர்ப்பது மிகுந்த நன்மை தரும். பெருமாளுக்கு நெல்லி இலையால் அர்ச்சனை செய்யலாம். அவருக்குப் பிடித்தமான நைவேத்தியம் நெல்லிக் கனி. வீட்டின் வாசலில் நெல்லி மரம் இருந்தால் பில்லி, சூனியம் ஆகியவை நெருங்காது என்பது நம்பிக்கை. ஏகாதசியில் நெல்லிக் கனியை தண்ணீரில் போட்டு வைத்து, மறுநாள் துவாதசி அன்று எடுத்துச் சாப்பிட்டால் காசியில் குடியிருப்பதற்கு ஒப்பான பலன் கிடைக்கும். நெல்லி மரம் உள்ள வீட்டில் லட்சுமி தங்குவாள் என்பது ஐதீகம்.
-வேற வேற புத்தகங்கள்லருந்து நான் திரட்டின தகவல்கள் இது. எனக்குப் பிடிச்ச நெல்லிக் கனியைத் தரும் மரத்தை வீட்ல வளர்த்தா எவ்வளவு நல்லது பாருங்க... நெல்லிக்காயை வெச்சு சமையல்கூட பண்ணலாம்னு இந்தப் பதிவுல பார்த்துத் தான் தெரிஞ்சுக்கிட்டேன். நீஙகளும் நெல்லிக் கனியை.... வெயிட்... வெயிட்... ஓவரா நெல்லி புராணம் பாடற இவளை நெல்லியாலேயே அடிச்சா என்னன்னு யாரோட மைண்ட் வாய்ஸோ எனக்குக் கேக்குது. அடுத்த மேட்டருக்கு எஸ்கேப்...!
* * * * * * * * * * * * * * * * * * * * * * * *
ஐயோ பாவம் முதியவர்கள்!
சில வயசானவங்க தங்களோட முதுமையை ஏத்துக்க மறுக்கறது ஏன்னே புரியலை உதாரணத்துக்கு எங்க பக்கத்து வீட்ல இருக்கற ஒரு பாட்டி. அவங்களை மகனும் மருமகளும் எந்தக் குறையும் சொல்லாம தாங்கறாங்க. ஆனா இவங்களுக்குள்ள ‘நமக்கு வயசாய்டுச்சே. முன்ன மாதிரி எந்த வேலையும் செய்ய முடியலையே‘ன்ற காம்ப்ளக்ஸ் இருக்கும போல... அதனால அவங்க சொல்லச் சொல்லக் கேக்காம எல்லா வேலையையும் இழுத்துப் போட்டுக்கிட்டு செய்வாங்க. அதனால ஏதாவது தப்பாகி திட்டும் வாங்கிப்பாங்க.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * *
ஐயோ பாவம் முதியவர்கள்!
சில வயசானவங்க தங்களோட முதுமையை ஏத்துக்க மறுக்கறது ஏன்னே புரியலை உதாரணத்துக்கு எங்க பக்கத்து வீட்ல இருக்கற ஒரு பாட்டி. அவங்களை மகனும் மருமகளும் எந்தக் குறையும் சொல்லாம தாங்கறாங்க. ஆனா இவங்களுக்குள்ள ‘நமக்கு வயசாய்டுச்சே. முன்ன மாதிரி எந்த வேலையும் செய்ய முடியலையே‘ன்ற காம்ப்ளக்ஸ் இருக்கும போல... அதனால அவங்க சொல்லச் சொல்லக் கேக்காம எல்லா வேலையையும் இழுத்துப் போட்டுக்கிட்டு செய்வாங்க. அதனால ஏதாவது தப்பாகி திட்டும் வாங்கிப்பாங்க.
உதாரணத்துக்கு நேத்து மகனும் மருமகளும் கிளம்பிப் போனதும் தன் செல்லுக்கு ரீசார்ஜ் பண்றேன்னுட்டு கடைக்குப் போயி நம்பர் எழுதிக் குடுத்திருக்காங்க. வீட்டுக்கு வந்து அரை மணி நேரம் கழிச்சும் ரீசார்ஜ் ஆகலையேன்னு கடையில போய் கேட்டப்ப. கடைக்காரர் இவங்க எழுதின நம்பரைப் படிக்க, அப்பத்தான் தான் கடைசி நம்பரை 5க்கு பதிலா 3 எழுதிக் கொடுத்துட்டது புரிஞ்சது. அப்புறம் என்ன... அந்த நம்பருக்கு போன் பண்ணினா ஒரே ’ஸ்விட்ச் ஆஃப்’ மெஸேஜ்தான். கடைக்காரரும் கை விரிச்சுட்டாரு. சாயங்காலம் மகன் வந்ததும் 300 ரூபா நஷ்டமானதைச் சொல்லிப் புலம்ப... ‘என்ட்ட சொல்லிருந்தா நான் பண்ணியிருக்க மாட்டேனா’ன்னு மகன சத்தம் போட்டாரு. அந்தப் பாட்டியைப் பாக்கவே பாவமா இருந்துச்சு எனக்கு. முதுமைய ஏத்துக்கிட்டு இயல்பா அமைதியா இருக்க இந்த மாதிரி சில முதியவங்களால ஏன் முடியலைன்னுதான் தெரியலை.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * *
ச்சும்மா... கொஞ்சம் ஹெல்த் டிப்ஸ்!
* கொதிக்கும் எண்ணெய் காலில் பட்டுப் புண்ணாகி விட்டதா..? பச்சை .உருளைக் கிழங்கை அரைத்துப் புண்ணின் மேல் வைத்துக் கட்டுங்கள். புண் ஆறி விடும்.
* உருளைக்கிழங்கு வாயுப் பொருளல்ல. குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு மிகத் தேவையானது. உருளைக் கிழங்கிலுள்ள புரதப் பொருள், தானியங்களிலுள்ள புரதப் பொருள்களை விடச் சிறந்தது. உருளைக் கிழங்கு மற்ற தானியங்களைவிட சுலபமாக ஜீரணமாகும். சோறை வைத்துக் கொண்டு உதவி காய்கறிகளை வைத்துக் கொள்வது போல உருளைக் கிழங்கை வைத்துக் கொண்டு உதவிக்கு காய்கறிகளை வைத்துக் கொள்ளலாமே! உருளைக் கிழங்கு மனிதன் உணவில் தவிர்க்க முடியாத பங்கினைப் பெற்றிருக்கிறது.
* பல் ஈறுகளில் வீக்கம் இருக்கிறதா? உப்புப் பொடியையும், மஞ்சள் பொடியையும் சம பாகமாகக் கலந்து பல் துலக்கிய பிறகு ஈறுகளில் வைத்துத் தேய்த்துவிட்டு வாயைக் கொப்புளித்துக் கொண்டு வந்தால் ஈறு சம்பந்தப்பட்ட தொல்லைகள் நீங்கி விடும்!
-இந்தத் தகவல்களையெல்லாம் எனக்குச் சொன்னது
* * * * * * * * * * * * * * * * * * * * * * * *
ச்சும்மா... கொஞ்சம் ஹெல்த் டிப்ஸ்!
* கொதிக்கும் எண்ணெய் காலில் பட்டுப் புண்ணாகி விட்டதா..? பச்சை .உருளைக் கிழங்கை அரைத்துப் புண்ணின் மேல் வைத்துக் கட்டுங்கள். புண் ஆறி விடும்.
* உருளைக்கிழங்கு வாயுப் பொருளல்ல. குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு மிகத் தேவையானது. உருளைக் கிழங்கிலுள்ள புரதப் பொருள், தானியங்களிலுள்ள புரதப் பொருள்களை விடச் சிறந்தது. உருளைக் கிழங்கு மற்ற தானியங்களைவிட சுலபமாக ஜீரணமாகும். சோறை வைத்துக் கொண்டு உதவி காய்கறிகளை வைத்துக் கொள்வது போல உருளைக் கிழங்கை வைத்துக் கொண்டு உதவிக்கு காய்கறிகளை வைத்துக் கொள்ளலாமே! உருளைக் கிழங்கு மனிதன் உணவில் தவிர்க்க முடியாத பங்கினைப் பெற்றிருக்கிறது.
* பல் ஈறுகளில் வீக்கம் இருக்கிறதா? உப்புப் பொடியையும், மஞ்சள் பொடியையும் சம பாகமாகக் கலந்து பல் துலக்கிய பிறகு ஈறுகளில் வைத்துத் தேய்த்துவிட்டு வாயைக் கொப்புளித்துக் கொண்டு வந்தால் ஈறு சம்பந்தப்பட்ட தொல்லைகள் நீங்கி விடும்!
-இந்தத் தகவல்களையெல்லாம் எனக்குச் சொன்னது
‘கல்கண்டு’ புத்தகமுங்கோ!










