Pages

Ads 468x60px

Showing posts with label விருது. Show all posts
Showing posts with label விருது. Show all posts

18 August 2012

மகிழ்ச்சிக்கு மேல மகிழ்ச்சி!

டந்த ஒரு வாரமா என்னால வலைப் பக்கம் அதிகம் உலவ இயலாமல் போயிடுச்சு. ஆனா அடுத்தடுத்து ரெண்டு சந்தோஷ நிகழ்வுகள் என்னை மகிழ்ச்சியில துள்ளிக் குதிக்க வெச்சிடுச்சு. என் தங்கை போன்ற யுவராணி தமிழரசன் எனக்கு ‘ஸன்ஷைன் அவார்ட்’ கொடுத்திருக்காங்க.


தைப் பார்த்து சந்தோஷமா நன்றி சொல்லி, அந்த மகிழ்ச்சி அடங்குவதற்கு முன்னாலேயே நான் ரொம்ப மதிக்கற சிறுகதை மன்னர் வை.கோபாலகிருஷ்ணன் சார் எனக்கு ‘லீப்ஸ்டர்‘ அவார்டைக் கொடுத்து இன்னும் சந்தோஷக் கடல்ல ஆழ்த்திட்டாரு.


ந்த ரெண்டு விருதுகளையும் என்மேல இருக்கற அன்பால என்னோட பகிர்ந்துட்டிருக்கற இந்த உறவுகளுக்கு என் மனமார்ந்த நன்றி. இன்னும் பொறுப்பா நல்ல விஷயங்கள் நிறைய எழுதணும்கற உணர்வு மனசுக்குள்ள இப்ப பயமா வளர்ந்துட்டிருக்கு. எனக்கு விருது தந்த இவங்க ரெண்டு பேருக்காகவும் சத்குரு ஜக்கி வாசுதேவ் எழுதியதுல எனக்குப் பிடிச்ச இந்த விஷயத்தை இங்க பகிர்ந்துக்கறேன்.

                    மனதைக் கட்டுப்படுத்த வேண்டுமா?

ன் மனம் தேவையில்லாததை எல்லாம் நினைக்கிறது. என் மனதை நான் எப்படிக் கட்டுப்படுத்துவது? தியானம் பழக வேண்டுமென்றால் மனதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்கிறார்களே..?

முதலில் உங்கள் மனதை ஏன் கட்டுப்படுத்த முயற்சிக்கிறீர்கள்? கெட்ட விஷயங்களை நினைக்கக் கூடாது, மனதைக் கட்டுப்படுத்த பழக வேண்டும் என்றெல்லாம் ஆன்மீகவாதிகள் ‌என்று சொல்லப்படுபவர்கள் சொல்லி வந்திருக்கிறார்கள். ஆனால் அப்படி முயற்சிக்கும் போதெல்லாம் மனம் அந்த விஷயங்களைத்தான் முழு நேரமும் நினைக்க ஆரம்பிக்கும். உங்கள் மனதின் செயலைப் பொறுத்தவரையில் வகுத்தல், கழித்தல் எல்லாம் கிடையாது. அங்கே கூட்டல், பெருக்கல் மட்டும்தான். உங்கள் மனதிலிருந்து அதிரடியாக ஓர் எண்ணத்தையாவது உங்களால் நீக்க முடியுமா? முடியவே முடியாது. இல்லையா? ஏதாவது ஒன்றைக் குறித்து இன்று நினைக்கக் கூடாது என்று நீங்கள் முடிவு செய்தால் அன்று முழுவதும் அதைப் பற்றியேதான் நினைப்பீர்கள். மனதின் அடிப்படைத் தன்மைகளைப் புரிந்து கொள்ளாமல் இப்படித்தான் தவறாக முயறசித்துக் கொண்டு இருக்கிறோம்.

தியானம் செய்யும் போது என் இதயம் துடிப்பதை நிறுத்த வேண்டும் என்று எப்போதாவது எண்ணுகிறீர்களா? என் சிறுநீரகம் தன் செயலை நிறுத்த வேண்டும் என எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா? கிடையாது. அவை தத்தம் செயலைத் தொடர்ந்து நடத்த அனுமதித்தீர்கள் தானே? பிறக மனமும் தனது வேலையைச் செய்ய நீங்கள் ஏன் அனுமதிக்கக் கூடாது? உங்களால் எப்போதும் மனதைக் கட்டுப்படுத்த முடியாது. இதுவரை யாராவது தன் மனதைக் கட்டுப்படத்தி இருக்கிறார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களா? யாரும் அப்படிச் செய்ததில்லை. அப்படிச் செய்யவும் முடியாது.

இந்த மனம் ஒரு புழுவிலிருந்து, ஒரு பூச்சியிலிருந்து, ஒரு குரங்கிலிருந்து தற்போது மனிதன் வரை இத்தகைய பரிணாம வளர்ச்சி அடைய லட்சக்கணக்கான வருடங்கள் எடுத்திருக்கிறது. இவ்வளவு மகத்தான முயற்சிக்குப் பின் இத்தகைய மனம் .உங்களுக்குக் கிடைத்திருக்கும் போது அதைக் கட்டுப்படுத்த ஏன் முயற்சிக்கிறீர்கள்? அது முழுத் தீவிரத்துடன் இருக்க வேண்டும் என்றுதான் நான் விரும்புகிறேன். ஆனால் அற்புதமாக இருக்க வேண்டிய மனம் தற்போது உங்களுக்குத் துன்பத்தை உற்பத்தி செய்கிற இயந்திரமாக மாறிவிட்டத.

உங்களின் எல்லாத் துன்பங்களும் உங்கள் மனதில்தானே உற்பத்தியாகின்றன? மனதை எப்படி இயக்குவது என்று உங்களுக்குத் தெரியாததால்தான் அங்கிருந்து துன்பங்கள் உற்பத்தியாகின்றன. இதே மனதை வைத்து ஆனந்தம் எப்படி உற்பத்தி செய்வது என்று தெரிந்து விட்டால் பிறகு மனதைக் கட்டுப்படுத்த எண்ணுவீர்களா? ஒருபோதும் மாட்டீர்கள்! எனவே உங்கள் மனதை எப்படிச் சரியாக இயக்க வேண்டும் என்பதைத்தான் கற்றுக் கொள்ள வேண்டும்.

உங்கள் மனதைக் கட்டுப்படுத்தத் தேவை இல்லை. சில எளிமையான பயிற்சிகள் உள்ளன. அவற்றைக கடைப்பிடித்தால் உங்களுக்கும் உங்கள் மனதுக்கும் சிறிய இடைவெளி இருக்கும். அந்த இடைவெளியை நீங்கள் உருவாக்கி விட்டால் பிறகு உங்கள் துன்பங்கள் அனைத்தும் நிரந்தரமாக முடிவுக்கு வந்து விடும்.

மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "மகிழ்ச்சிக்கு மேல மகிழ்ச்சி!"

4 July 2012

தோழி தந்த விருது!

லைப்பதிவுகளில் எழுத ஆரம்பித்த பின்னர் எனக்கு நிறைய நட்புகளும் உறவுகளும் கிடைச்சிருக்குங்கறதுல ரொம்ப ரொம்ப சந்‌தோஷம் எனக்கு. அந்த சந்தோஷத்தின் சதவீதம் இப்போ அதிகமாய்டுச்சு. நல்ல நல்ல சமையல் குறிப்புகளை காய்கறிகளின் மருத்துவ பயன்களுடன் அழகிய பதிவுகளாக எழுதிவரும் என் இனிய தோழி விஜி பார்த்தி தான் பெற்ற விருது ஒன்றை எனக்குக் கொடுத்திருக்காங்க.


 ‘என் உறவுகளுடன் பகிர்ந்து கொள்கிறேன்’ என்று சொல்லி விஜி தந்திருக்கும் இந்த விருதினால எனக்கு இரட்டிப்பு சந்தோஷம். ஏன்னா இதை நான் விரும்பும் ஐந்து பேருக்குக் கொடுக்கலாம்னு சொல்லியிருக்காங்க.. நான் என்னைவிட நல்லா எழுதற என்னுடைய உறவுகள் ஐவருக்கு இதைப் பகிர்ந்து கொடுக்க ஆசைப்படறேன்..

1) தன் அன்பினால் என்னை உருக வைத்தவர், நீண்ட இடைவெளி விட்டு பதிவுகள் எழுதினாலும் சுவாரஸ்யமாக ரசிக்கும்படி எழுதுபவர்-.

                         கலை அக்கா!  (கிராமத்துக் கருவாச்சி)

2) இவர் எழுதும் அழகுத் தமிழ்க் கவிதைகள் என்னை மயங்க வைக்கும். உரைநடையில் எழுதினாலோ மனதில் பிரமிப்பை ஏற்படுத்தும் இவரது எழுத்து-

                     கோவை மு.சரளாதேவி அக்கா! (பெண் என்னும் புதுமை)

3) நான் வலையுலகில் நுழைந்தது முதல் இன்று வரை என்னைத் தட்டிக் கொடுத்து என் எழுத்தை ஊக்கப்படுத்துபவர் இவர். Sweet Sister என்று நான் அன்போடு அழைப்பவர்-

                              ஸாதிகா அக்கா! (எல்லாப் புகழும் இறைவனுக்கே)

4) இவரின் கவிதைத் திறமும், ரசிப்புத் திறமும் எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும். நான் விரும்பிப் படிக்கும் தளங்களில் இவருடையதும் ஒன்று-

                                   மகேந்திரன் அண்ணா! (வசந்த மண்டபம்)

5) என் பதிவுகளில் இவர் கருத்துச் சொல்லியிருக்கிறாரா என்று ஆவலுடன் தேடுவேன். மற்ற தளங்களுக்குச் சென்றாலும் இவரது கருத்து இருக்கிறதா என்றுதான் முதலில் பார்ப்பேன். அவ்வளவு சரியாக, அழகாக கருத்துச் சொல்லி ஊக்குவிப்பவர் இவர்-

                                           செய்தாலி அண்ணா! (செய்தாலி)

இந்த ஐந்து பேரும் அன்போடு நான் தரும் விருதை ஏற்றுக் கொண்டு என்னைப் பெருமைப்படுத்தும்படி வேண்டிக்கறேன். எனக்கு விருது கொடுத்த என்னுயிர்த் தோழி விஜிக்கு ‘நன்றி’ன்னு சொன்னா... ரொம்பவே சம்பிரதாயமாக இருக்கும். நேர்ல இருந்தால் என் செய்கைகளினால அன்பைத் தெரிவித்திருப்பேன். தூரத்தில் இருப்பதால்... வேறு வழியில்லாமல்... My Heartful Thanks to VIJIMMA.

இதனை ஏற்று கொண்டவர்கள் பின்வரும் விதிமுறைகளை பின்பற்றவும்.
  1. விருதை வழங்குபவருக்கு நன்றி சொல்ல வேண்டும் 
  2. விருதை பெற்று கொண்டதன் அடையாளமாக அதன் சின்னத்தை உங்கள் பிளாக்கில்  பொறித்து கொள்ளலாம்
  3. உங்களுக்கு பிடித்த 5 பிளாகர்களுக்கு இந்த விருதை வழங்கலாம்
 எனக்கு விருது கொடுத்த விஜிக்காக நான் கேட்ட கதை ஒன்றை இங்கே டெடிகேட் செய்கிறேன்.

ரு தமிழன் துபாய் சென்றிருந்தபோது அங்கே நடக்கவிருந்த ஒட்டக ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்ள பெயர் கொடுத்திருந்தான். அதற்காக ஒரு ஒட்டகத்தை வாடகைக்கு எடுக்க விரும்பினான். ஒட்டகத்தின் உரிமையாளர் சொன்ன தொகை மிக அதிகமாக இருந்ததால், ‘‘ஏன்ப்பா இவ்வளவு அநியாயமாக் கேக்கறே?’’ என்று கேட்டான். அதற்கு ஒட்டக உரிமையாளன், ‘‘‌என் ஒட்டகம் சாதாரணமானதில்லைங்க. மத்தவங்கல்லாம் ஒட்டகத்தை அடிச்சு ஓட்டுவாங்க. என் ஒட்டகத்தை நீங்க அடிச்சு ஓட்ட வேண்டாம். அது காதுகிட்ட குனிஞ்சு ‘அப்பாடா’ன்னு ஒரு வார்த்தை சொன்னா வேகமா ஓடும். இந்த வார்த்தையை சொல்லச் சொல்ல ஓட்டத்தோட வேகம் அதிகமாகும். அதே மாதிரி அதோட காதுல ‘கடவுளே’ன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டா ஓட்டத்தை நிறுத்திடும்’’ என்றான்.

தமிழன் மகிழ்ந்து போய் அவன் கேட்ட பணத்தைக் கொடுத்து விட்டு, ஒட்டகத்தை எடுத்துச் சென்றான். பந்தயம் துவங்கியதும் அதன் காதில் ‘அப்பாடா’ என்றான். வேகமாக ஓடியது. அதையே மீண்டும் மீண்டும் சொல்ல, வேகத்தின் அளவு கூடிக் கொண்‌டே போனது. அந்த சுவாரஸ்யத்தில் பந்தயப் பாதையை விட்டு ஒட்டகம் விலகி விட்டதை சற்று தாமதமாகத்தான் கவனித்தான். அதேசமயம் ஒட்டகம் ஒரு பெரிய மணல் மேட்டின் உச்சியை நோக்கி ஓடிக் கொண்டிருப்பதையும் கவனித்தான். பதட்டத்தில் அவனுக்கு நிறுத்தும் வார்த்தை மறந்து‌ போய்விட, அ‌தன் லகானைப் பிடித்து இழுத்து நிறுத்த முயன்றான். முடியவில்லை. என்னென்னவோ சொல்லி கத்திப் பார்ததான். நிற்கவில்லை அது.

இன்னும் நாலடியில் ஒட்டகம் கீழே விழுந்து விடும் நிலை. தன்னை மறந்தவனாய், ‘‘கடவுளே! நான் செத்தேன்!’’ என்றான். அடுத்த கணம்... கால்களை மணலில் ஊன்றி தேய்த்துக் கொண்டு ஒட்டகம் ஓட்டத்தை நிறுத்தி விட்டது. சரியாக சரிவுக்கு ஓரங்குலம் முன்னால் நின்றிருந்தது. கீழே விழுந்திருந்தால் தானும், ஒட்டகமும் இறந்திருப்போம் என்பதை உணர்ந்ததும், அவன் தன்னை மறந்து பெருமூச்சு விட்டு, ‘‘அப்பாடா! தப்பிச்சேன்’’ என்றான்.
மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "தோழி தந்த விருது!"

19 May 2012

நான் பெற்ற இன்னொரு பரிசு!

ஹாய் எவ்ரிபடி! ரொம்ப ரொம்ப சந்தோஷத்தோட உங்க முன்னாடி வந்திருக்கேன் நிரூ! சந்தோஷத்துக்குக் காரணம் இந்த விருது...


என் அன்பிற்கும் பாசத்துக்கும் உரிய, கலை அக்கா (கிராமத்துக் கருவாச்சி) எனக்கு இந்த விருதைக் கொடுத்திருக்காங்க. ரொம்ப ரொம்ப சந்தோஷத்தோட அன்போட விருது தந்த அக்காவுக்கு நிறைய நிறைய நி்றைய நன்றி சொல்லிக்கறேன்.

ஆனா... அவங்க இந்த விருதை ஏன் தந்தாங்கன்றது உங்களுக்கெல்லாம் தெரியாதுதானே... சொல்றேன். உங்க மானிட்டரைக் கொஞ்சம் உத்துப் பாருங்க... கரெக்ட், அப்படித்தான். இப்ப வேகமா ஒரு கொசுவத்தி சுத்தறது உங்க கண்ணுக்குத் தெரிஞ்சிருக்குமே...  ‌எஸ்! ப்ளாஷ்பேக்தான்.

மூணாம் வகுப்பு படிக்கிற சமயம் நிரூவோட ஸ்கூல்ல ஆண்டு விழா வர்றதுன்னு பல போட்டிகள் வெச்சாங்க. மாறுவேடப் போட்டின்னு சொன்னதும், அவ ரொம்ப இன்ட்ரஸ்ட்டா ‘நான் கலந்துக்கறேன் மிஸ்’ன்னு சொல்லிட்டு வந்துட்டா. வீட்டுக்கு வந்து அம்மாகிட்ட விஷயத்தைச் சொன்னதும், அம்மா ‘‘காந்தித் தாத்தா வேஷம் போட்டா நல்லா இருக்கும் நிரூ. எப்படிப் பேசணும்னு நான் சொல்லித் தர்றேன்’’ன்னு சொன்னாங்க.  காந்தி வேஷம் போட்டா, இடுப்புல ஒரு துண்டை மட்டும் கட்டி, கைல ஒரு தடியக் கொடுத்தாப் போதும், ‌மாறு வேஷத்துக்கு வேற செலவு பண்ண வேணாம்கற அம்மாவோட சூப்பர் ப்ளான் அவளுக்குத் தெரியாம அப்பாவி நிரூவும் சந்தோஷமா ஒத்துக்கிட்டா.

‘‘என் பெயர் மோகன்தாஸ் கரமசந்த் காந்தி. நான் வெள்ளையரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த நாட்டுக்கு சுதந்திரம் வாங்க உழைத்தேன். என்னை மகாத்மா என்று அழைக்கிறார்கள்’’ இதுதான் அம்மா சொல்லிக் கொடுத்த டயலாக். இதை மூணு நாளா சொல்லச் சொல்லி ப்ராக்டிஸ் கொடுத்தாங்க. நிரூவும் சரியாவே சொன்னா. அம்மாவுக்கு செம குஷி. ஆனா ஆண்டு விழா அன்னிக்கு காலையில நிரூவுக்கு அதிர்ச்சி காத்திருந்துச்சு. காந்தி வேஷத்துக்காக மொட்டை போட்டுக்கணும்னாங்க அம்மா.

நிரூவுக்கு பயங்கர கோபம். மாட்டேன்னா. ‘‘நிரூவுக்கு அழகான ஹேர். மொட்டைல்லாம் வேணாம். தலையில துண்டைக் கட்டி மொட்டைத் தலை மாதிரி பண்ணிடலாம்’’ன்னு நிரூவுக்கு சப்போர்ட் பண்ணாரு அவ மாமா. அம்மா அதெல்லாம் கேக்காம பிடிவாதமா, ‘‘சும்மாருங்கண்ணா. வளர்ற குழந்தைதானே... சீக்கிரம் வளர்ந்துடும்’’ன்னுட்டு மொட்டை போட வெச்சுட்டாங்க.

நிரூவுக்கு கோபமான கோபம். அழுகையான அழுகை. ஃபங்ஷனுககு வந்து ஸ்டேஜ் கிட்ட காந்தியா நின்னப்பவும் அவ கோபம் அடங்கலை. அவ பேரை அனவுன்ஸ் பண்ணி, கூப்பிட்டாங்க. மெதுவா நடந்து போய் ஆடியன்ஸைப் பாத்து நிக்கறா. கைதட்டல் கிடைச்சுது. ஆனா பாருங்க... கோபத்துல பேச வேண்டிய டயலாக் மறந்துடுச்சு. ‘‘நான்... நான்... மோகன்தாஸ் காந்தி’’ன்னு சொல்லிட்டு முழிக்கிறா.

ஸ்டேஜ்ல சைட்ல இருந்த அம்மா, கோபமா, ‘‘சுதந்திரத்துக்குப் பாடுபட்டேன்னு சொல்லேண்டி’’ன்னு சின்னக்குரல்ல சீறினாங்க. நிரூ ஒரு செகண்ட்கூட லேட்டாக்காம, ‘‘சுதந்திரத்துக்கப் பாடுபட்டேன்னு சொல்லேண்டி’’ன்னு மைக்ல சத்தமாச் சொல்லிட்டா. ஆடியன்ஸ்லருந்து ஒரே சிரிப்புச் சத்தம். வெக்கப்பட்டுக்கிட்டு ஸ்டேஜுக்குப் பின்னாடி ஓடிட்டா நிரூ.

‘‘கடைசி நேரத்துல ‌‌சொதப்பிட்டியேடி... உனக்கு ஒரு பிரைஸும் கிடைககாது.’’ன்னு அம்மா திட்டிககிட்டே இருக்க, அந்த நேரத்துல பரிசுகளை அறிவிச்சிட்டிருந்தாரு ஹெச்.எம். மாறுவேடப் ‌போட்டியில நிரூவுக்கு ஆறுதல் பரிசு கிடைச்சுது. ஏன்னா... பரிசு தரலைன்னு ‘ஆங்ங்ங்...’ன்னு சைரன் குரல்ல நிரூ அழ ஆரம்பிச்சா, அவளோட சத்தத்துல பதினெட்டு பட்டி ஜனங்களும் ராவெல்லாம் தூங்க முடியாம சண்டைக்கு வருவாங்கன்னு ஹெச்.எம்.முக்குத் தெரியும். அதனாலதான் பரிசு கொடுத்தார். ‘‘அந்த பயம் இருக்கட்டும்...’’னு நிரூவும் பரிசை வாங்கிட்டு சந்தோஷமா வீட்டு்க்கு வந்தா.

இந்த விஷயம் கலைக்காவுக்குத் தெரிஞ்சதாலதான் நிரூவுக்கு விருது கொடுத்திருக்காங்க. முன்னயாவது ஸ்கூல்ல அழுதா பதினெட்டு பட்டியும் அலறும். ‘‘எனக்கு விருது தரலையே...’’ன்னு கலை அக்காவோட தளத்துல இப்ப நிரூ அழுதான்னு வைங்க... நெட் மூலமா அகில உலகமும் எதிரொலிக்குமே, உலகம் தாங்காதேன்னு பயந்து போயித்தான் கலைக்கா எனக்கு விருது தந்திருக்காங்க. ஹா... ஹா....

அச்சச்சோ...  வேணாம் கலைக்கா... இதுக்கெல்லாம் கோபப்பட்டு கருக்கு மட்டையத் தூக்காதீங்க. என்னைப் பத்தி எதாச்சும் எழுதணும்னு சொன்னீ்ங்களேன்னுதான் இப்படிச் சொன்னேன். நீங்க அன்பா, பாசமாதான் கொடுத்தீங்கன்னு நம்ம மக்களுக்கெல்லாம் நல்லாவே தெரியும். சரிதானே ஃப்ரெண்ட்ஸ்!
மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "நான் பெற்ற இன்னொரு பரிசு!"
 

கலை அக்கா தந்த பரிசுகள்!

கலை அக்கா தந்த பரிசுகள்!

என் தோழி விஜி தந்த விருது!

என் தோழி விஜி தந்த விருது!