Pages

Ads 468x60px

25 June 2012

வாய் சொன்னதும். மனசுல வந்ததும்!


திரைப்படங்களில் ஆபாசமான காட்சிகளோ, ஆட்சேபத்திற்குரிய காட்சிகளோ வராமல் தடுப்பதற்கு சென்சார் ‌போர்ட் என்ற அமைப்பு இருக்கிறது. தொலைக்காட்சிகளுக்கும் அது மாதிரி சென்சார் போர்டு ஒன்றை ஏற்படுத்தினால் தேவலைன்னுதான் தோன்றுகிறது. சீரியல்களில் முன்னெல்லாம் ஒருத்தரை ஒருத்தர் அழிக்க நினைக்கும், குடும்பத்துக்குள்ளேயே கொலைகாரத் திட்டம் போடும் கேரக்டர்களை வைத்து கதை பண்ணிக் கொண்டிருந்தாங்க. இப்ப... டூயட், ஃபைட் சீனெல்லாம் வர ஆரம்பிச்சுடுச்சு. பத்தாக்குறைக்கு தண்ணியடிக்கிற மாதிரி, தம்மடிக்கிற மாதிரி சீன்கள்- இதுல கீழே இதெல்லாம் கெடுதல்ன்னு ஒரு ஸ்லைடு மட்டும் ‌கரெக்டா போட்டுடறாங்கப்பா.

இதுங்களாவது பரவாயில்லைங்க. இதைவிடக் கேவலமா இருக்குதுங்க விளம்பரப் படங்கள். ஒரு குறிப்பிட்ட கம்பெனியோட பாடி ஸ்ப்ரேவை ஒருத்தன் யூஸ் பண்ணினால், வேற கிரகத்துலருந்தும், எங்கயோ காட்டுப் பிரதேசத்துலருந்தும் எல்லாப் பெண்களும் (அதும் எல்லா சனியன்களும் மினி டிரஸ்தான் போட்டிருக்குமாம்) இவன் வீட்டுக்கு ஓடி வந்து இவன் முன்னால அசிங்கமா டான்ஸ ஆடிக் காட்டுமாம். என்ன ஒரு கேவலமான சிந்தனை! பெண்கள்ன்னா அவ்வளவு எளிதாப் போய்டுச்சா இவங்களுக்கு? சோப்பு, ஷேவிங் க்ரீம்லருந்து எல்லா விளம்பரங்கள்லயும் பெண்களை Misuse பண்றாங்க. இதுக்கெல்லாம் மகளிர் சென்சார்போர்டு ஒண்ணு அமைச்சு கன்ட்ரோல் பண்ணினா, இதெல்லாம் மாறிச்சுன்னா... ரொம்ப நல்லா இருக்கும். ஹும்...!

அதே மாதிரி சில விளம்பரங்களோட கான்செப்ட்படி யோசிச்சா விபரீதமா அர்த்தம் வருது. ‘காம்ப்ளான் சாப்பிடற குழந்தைங்க மத்த குழந்தைங்களை விட இருமடங்கு வளர்றாங்க’ன்னு விளம்பரம் சொல்லுது. அதன்படி பாத்தா, காம்ப்ளான் குடிக்காதவங்க ஐந்தடி உயரம் வளர்றாங்கன்னா, காம்ப்ளான் சாப்பிட்டவங்கல்லாம் 10 அடி உயரமாவா வளர்ந்திருக்காங்க? அப்படி யாரும் இதுவரைக்கும் கண்ணுல படலியேங்க... ஒரே கன்ப்யூஷன்ப்பா!

===========================================

ல சந்தர்ப்பங்கள்ல நாம மனசுக்குள்ள ஒரு எண்ணம் இருந்தாலும், வெளியில வேற ஒரு பதிலைச் சொல்ல வேண்டியிருக்கும். இதப் பத்தி யோசிச்சதுல தோணினது இது. ஒரு ஐ.டி. கம்பெனியில இன்டர்வியூ நடக்குது. அங்க ஹெச்.ஆர். கேக்கற கேள்விங்களுக்கு இன்டர்வியூவுக்கு வந்திருககற இளைஞன் பதில் சொல்றான். நான் பிராக்கெட்டுக்குள்ள கொடுத்திருக்கறது அவன் மனசுல ஓடற பதில்கள்.

கேள்வி : ஏன் எங்க கம்பெனிக்கு அப்ளை பண்ணினீங்க?

பதில் : உங்கள் நிறுவனம் இந்தத் துறையில் முன்னணி நிறுவனமாய் இருக்கறதால. (எல்லா கம்பெனிக்கும்தான் அப்ளை பண்ணேன். நீங்க ஒண்டிதான் கூப்ட்டீங்க)

கேள்வி: எங்கள் நிறுவனத்தில் ‌வேலை செய்ய ஏன் விரும்புகிறீர்கள்?

பதில் : இது சவாலான வேலை என்பதாலும், என்னை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்று நம்புவதாலும். (நான் எங்கய்யா விரும்பறேன்? வேலை தர்றேன்னு எவன் கூப்ட்டாலும் சேர்ந்துடுவேனே....)

கேள்வி: உங்களை நான் ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

பதில் : என்னிடம் உங்கள் நிறுவனத்தின் தேவைக்கேற்ற எல்லாத் தகுதிகளும் இருப்பதால். (எப்படியும் இந்த போஸ்டுக்கு யாரையாவது எடுக்கணு்ம். என்னை எடுத்துத் தொலைங்களேன்யா...)

கேள்வி : உங்கள் பலம் என்ன?

பதில் : சின்ஸியராய் உழைப்பது. (ஃபிகருங்களைக் கரெக்ட் பண்றதுதான்...)

கேள்வி : சமீபத்தில் நீங்கள் சந்தித்த சவால் என்ன? எப்படி சமாளித்தீர்கள்?

பதில் : பக்கத்து வீட்டு ஆன்ட்டிக்கு ஆபரேஷன் நடந்தப்ப நிறைய ப்ளட் தேவைப்பட்டது. அதுக்காக என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரையம் பிடிச்சு, ப்ளட் பாங்குக்கு அலைஞ்சு ரத்தம் சேகரிச்சுத் தந்து அவங்க உயிரைக் காப்பாத்தினேன். (திடீர்னு கர்ள் ஃப்ரண்ட் போன் பண்ணி சினிமாவுக்கு டிக்கெட் புக் பண்ணுன்னுட்டா. கைல சுத்தமா காசில்ல. அந்த தியேட்டர்ல கரப்பான் பூச்சி இருக்குதுன்னு ‌சொல்லி, பீச்சுக்குத் தள்ளிட்டுப் போயிட்டேன். ஹி... ஹி...)

கேள்வி: உங்களுக்கு வேலை தந்தா என்ன எதிர்பார்ப்பீர்கள்?

பதில் : எதிர்பார்ப்பு எதுவும் இல்லை. கம்பெனிக்கு ஸின்ஸியரா நான் இருந்தா, தானே எல்லாம் கிடைச்சுடும். (லேட்டா வந்தா கண்டுக்காதீங்க. சீக்கிரம் புறப்பட்டாலும் கேக்காதீங்க. மாசம் ஒரு ஹைக் குடுத்தா சந்தோஷம். வீக் எண்ட் பார்ட்டிக்கு ஸ்பான்ஸர் பண்ணினா இன்னும் சந்தோஷம்)

கேள்வி : எங்கள் நிறுவனம் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?

பதில் : இந்தத் துறையில் நம்பர் ஒன் என்று தெரியும். (உங்க கம்பெனில 55 கேர்ள்ஸ் ‌வொர்க் பண்றாங்கன்றது தெரியும். கரெக்டா ஸார்?)

கேள்வி: உங்களுக்கு வேலை தராவிட்டால் என்ன செய்வீர்கள்?

பதில்: என்னிடம் ஏதோ குறையிருக்கிறது என்பதை உணர்ந்து இன்னும் என்னை தகுதியாக்கிக் கொள்ள முயல்வேன். (‌‌பின்ன உன் சட்டையப் பிடிச்சா உலுகக முடியும்? போய்யா......ன்னு நாலு கெட்ட வார்த்தை சொல்லித் திட்டிட்டுப் போயிட்டே இருக்க வேண்டியதுதான்!)


பேஸ்புக் வழியாகவும் கருத்திட வாங்க

37 comments:

  1. சாமான்ய மனிதர்களுக்கு எழுகிற கேள்வி
    அது மனசில் மட்டுமே எழுகிறது (வருவதில்லை வார்த்தைகளாய் )
    என்ன செய்ய இன்னும் நாம் மேற்கத்திய கலச்ச்ராத்தையே நம்பி வாழ்கிறோம்

    அலுவலக நேர்முகம் - நகைச்சுவை ம்(:

    ReplyDelete
    Replies
    1. நிஜம்தான் ஸார். மேற்கத்திய கலாசாரத்தின் பாதிப்பு ரொம்பவே அழுத்தமானதுதான். என்னை Encourage பண்ணின உங்களுக்கு... My Heartful Thanks!

      Delete
  2. ரசித்தேன்.., சிரித்தேன் :)

    ReplyDelete
    Replies
    1. என் தளத்துக்கு வந்து ரசிச்ச உங்களுக்கு Many Many Thanks Sir!

      Delete
  3. விளம்பரங்கள் எதேச்சை அறியாது என்பது
    மிகவும் உண்மை சகோதரி.. தன் பொருள் விற்பதற்காக
    எந்த அளவுக்கும் இறங்குவதற்கு விற்பன்னர்கள் துணிவார்கள்
    என்பதற்கு இதுவே சாட்சி...

    நேர்காணல் கேள்விகளும் அதற்கான எதிர்மறை பதில்களும்
    மனதில் ஓடும் நேர்மறை பதில்களும் மிக அருமை...

    ReplyDelete
    Replies
    1. இந்தப் பதிவைப் படிச்சு என் கருத்துக்களுக்கு ஊக்கம் தந்த மகேந்திரன் அண்ணாவுக்கு என் சந்தோஷமான நன்றி.

      Delete
  4. //ஒரு குறிப்பிட்ட கம்பெனியோட பாடி ஸ்ப்ரேவை ஒருத்தன் யூஸ் பண்ணினால், வேற கிரகத்துலருந்தும், எங்கயோ காட்டுப் பிரதேசத்துலருந்தும் எல்லாப் பெண்களும் (அதும் எல்லா சனியன்களும் மினி டிரஸ்தான் போட்டிருக்குமாம்) இவன் வீட்டுக்கு ஓடி வந்து இவன் முன்னால அசிங்கமா டான்ஸ ஆடிக் காட்டுமாம். என்ன ஒரு கேவலமான சிந்தனை!/////

    ஏனுங்க... பொண்ணுங்க மட்டும் ஒரு குறிப்பிட்ட அழகு க்ரீம போட்டுட்டு வந்ததும், வேணாம்னு சொன்ன பையன், அவ முன்னாடி வந்து மண்டியிடுறதா காட்டுறாங்க! அப்ப, ஆம்பளைங்க எல்லாம் கிள்ளுக் கீரையா? இதைக் கேட்டா, ஆணாதிக்கவாதி'ன்னு சொல்லுறாங்க.

    #நீங்களும் அந்த ஃபேர்னஸ் க்ரீம்தானே யூஸ் பண்ணுறீங்க?

    :-)

    ReplyDelete
    Replies
    1. விளம்பரத்தோட கான்செப்டை குறை சொல்லலை சார். சென்ட். பாடி ஸ்ப்ரே இதுக்கெலாம் ஸ்மெல் மத்தவங்களை ஈர்க்குதுன்னு தான் சொல்லணும். எனக்கு எரிச்சல் தந்தது அரைகுறை ஆடை அணிந்த பெண்களை (தேவையற்று) திணிக்கறதுதான். பேர்னஸ் க்ரீம்ல பெண்ணை ஆபாசமாக் காட்டலையே... நான் எந்த செயற்கை அழகு தரும் க்ரீம்களையும் உபயோகிப்பதில்லை என்பது உங்கள் தகவலுக்கு! வருகை தந்து கருத்திட்ட உங்களுக்கு... Many Many Thanks!

      Delete
    2. ன்னியும் ஜார்-னு சொன்னதுக்கு டேங்ஸ்க்கா!
      //அரைகுறை ஆடை அணிந்த பெண்களை (தேவையற்று) திணிக்கறதுதான். பேர்னஸ் க்ரீம்ல பெண்ணை ஆபாசமாக் காட்டலையே...///
      யக்கா! நீங்க எப்புடி எடுத்துக்கறீங்கனு தெரியல. ஆனா, நவநாகரிக இளைஞிகள் இப்படித்தான் (நீங்கள் சொல்வதுபோல்- அரைகுறை ஆடை உடுத்தி) இருக்கிறார்கள். மற்றும்,

      //இவன் வீட்டுக்கு ஓடி வந்து இவன் முன்னால அசிங்கமா டான்ஸ ஆடிக் காட்டுமாம்///

      நீங்கள் சொல்லும் நடனத்தின் பெயர்- பெல்லி.உலகப் புகழ்பெற்ற நடனமாகும்.

      Delete
    3. பெல்லி டான்ஸா? தெரியாத ஒரு விஷயத்தைத் தெரிந்து கொண்டேன். உண்மையில் பல இளைஞிகளும் நீங்கள் சொல்ற மாதிரி அரைகுறையா டிரஸ் பண்றதைப் பாத்திருக்கேன். என்னத்த சொல்ல.. மிக்க நன்றி.

      Delete
  5. என்னத்தச்சொல்ல. விளம்பரப்படங்களின் கேவலத்தை பேசவந்துவிட்டு, அவற்றின் அடிப்படை
    சமூகச் சீண்டல்களைகயே
    //ஃபிகருங்களைக் கரெக்ட் பண்றதுதான்...//
    //வீக் எண்ட் பார்ட்டிக்கு//
    //பீச்சுக்குத் தள்ளிட்டுப் போயிட்டேன். ஹி... ஹி...//

    சிரிப்பானாக எழுதுவது நகைமுரண் இல்லையா?

    ReplyDelete
    Replies
    1. விளம்பரத்தில் ஆபாசம் வேண்டாமென்று கூறினேன். உண்மைதான். நகைச்சுவை உணர்வு என்பது வேறு. நான் எழுதிவிட்டதால் எதுவும் மாறிடப் போவதோ, எழுதாததால நின்னுடப் போறதோ இல்லயே... சமூக அக்கறையையும் நகைச்சுவையையும் நான் குழப்பிக்கறதில்ல சார். நல்ல கருத்துச் சொன்னதற்காக உங்களுக்கு நன்றி.

      Delete
  6. நிரஞ்சனா... நல்ல பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. என் பகிர்வைத் தட்டிக் கொடுத்து வாழ்த்தினதுல ரொம்ப ரொம்ப சந்தோஷம் நண்பரே...

      Delete
  7. ஐயையோ!

    என்னோட கமண்டைக் காணோம்!

    போங்க... இனிமே வந்து கருத்து சொல்ல மாட்டேன்!

    ReplyDelete
    Replies
    1. அடாடா... ஸ்பாம்ல போய் ஒட்டிக்கிட்டிருந்தது. கோவிச்சுக்கிட்டு இப்டில்லாம் வெளிநடப்பு பண்ணா எப்பூடி? இப்ப உங்க கருத்துலருந்து பெல்லி டான்ஸ் பத்தி கூகிள்ல தேடி தெரிஞ்சுக்கிடேனே... பாராட்டோ, திட்டோ எதுவாயிருந்தாலும் வந்தாதானே நான் வளர முடியும்... அதனால அவசியம் வாங்க ஸார்...

      Delete
  8. றொம்ப நாளைக்கு அப்புறமா வந்திருக்கிறீங்களோ நிரு ஆளயே கானோம்?????

    அழகாக சொன்னீங்க விளம்பர படங்கள் இன்று கவர்ச்சிக்கு பெயர் போயுள்ளன. அது போல் தொலைகாட்சி தொடர்களிலும் இவை இப்போது வளர ஆரம்பித்து விட்டன..

    நாமென்ன செய்ய முடியும் புலம்புவதை தவிர....

    ReplyDelete
    Replies
    1. இனியும் ஒரு வாரம் கழிச்சுதான் தினம் இணையத்துல இருப்பேன் எஸ்தர். வெளியூர் பயணங்கள் தொடர்ந்து அமைஞ்சிட்டுது. அதான். என்னை என்கரேஜ் பண்ணினதுக்கு ரொம்ப நன்றி.

      Delete
  9. வெகு நாட்களுக்குப் பின் வந்த பதிவு... பதிவு அருமை... அந்த விளம்பரப் படங்களைப் பார்த்த பொழுது என்னலும் இதே கேள்விகள் தான் எழுந்தன.... நேர்முகத் தேர்வு கற்பனை அருமை.... அடிகடி எழுதுங்கள்

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக இனி அடிக்கடி எழுதுகிறேன் சீனு. உங்களுக்கு மிக்க நன்றி.

      Delete
  10. Replies
    1. அருமைன்னு இந்தத் தோழியைப் பாராட்டினதுக்கு ரொம்ப ரொம்ப தாங்க்ஸ் நண்பரே.

      Delete
  11. உண்மையான எழுத்து இவைகளை பிடிக்காமல்தான் தொலைக்காட்சி பார்பதே நிறுத்திவிட்டேன் பெரும்பாலோர் மனத்தில் இருந்ததை வெளியே கொண்டுவந்தமைக்கு நன்றி பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஓ.... இதைப் பாராட்டின உங்களுக்கு சந்தோஷத்தோட என் நன்றி.

      Delete
  12. ரசித்து சிரித்தேன் நிரஞ்சனா

    ReplyDelete
  13. சிரிக்கவும் ரரிக்கவும் வைத்திீர்கள்.உன்னமா புரிஞ்சு வச்சிருக்கீங்க..வாழ்த்துக்கள்.

    அன்புடன் அதிசயா
    காதல் இங்கும் ஒளிந்திருக்கும்..!!!!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அதிசயா.

      Delete
  14. நான் இன்னும் படிக்கவில்லை படித்துவிட்டு கருத்து தெரிவிக்கிறேன் ......

    நிரூ என்னுடைய வலைப்பூவை சற்று திறந்து பாருடா உனக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி காத்துகொண்டிருக்கிறது .....

    ReplyDelete
    Replies
    1. இப்ப பாத்துட்டேன் விஜி. ஒரு நிமிஷம் கண் ஈரமாய்டுச்சுன்றதுதான் உண்மை. உன்னோட அன்புக்கு என்னோட நன்றி.

      Delete
  15. நிரூ உன்னுடைய இந்த கற்பனைத்திரன் மிகவும் எனக்கு பிடித்திருக்கிறது... உண்மையில் இப்படிதான் நினைப்பார்கள் சூப்பர்டாடாடா ....... கேள்விகளும், பதில்களும் அருமை ............

    ReplyDelete
    Replies
    1. ஹய்யா... என் டியர் ஃப்ரெண்ட் இதைப் படிச்சுட்டு அருமைன்னதுல ரொம்ப ரொம்ப சந்தோஷம் எனக்கு. மிக்க நன்றி.

      Delete
  16. நல்லா இருக்கு! :) அதே மாதிரி இந்த நகைக்கடை வெளம்பரம் எல்லாம் ரொம்ப ஓவரு! மாதவனையும், பிரபுவையும் வேற எங்கேயாவது மொதல்ல பார்சல் பண்ணனும்! :)

    ReplyDelete
  17. விளம்பரங்களில் பெண்கள் நடத்தடப் படும் முறை பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள் நிரஞ்சனா...... அப்படிப்பட்ட விளம்பரங்களில் நடிப்பதற்கு இந்தப் பெண்களுக்கு எங்கே போயிற்று அறிவு ? அவர்கள் என்ன தஞ்சாவூர் களிமண் பொம்மையா ? ஒன்றுமே தெரியாத பப்பாக்களா ?

    நேர்முகத்தேர்வு பற்றிய ஒரு பாமரனின் எண்ணங்களை அப்படியே பிரதிபலிக்கிறது இந்தப் பதிவு . இப்போதெலாம் கம்பெனிகள் மிகவும் ஐடியலாக இருப்பதையே விரும்புகின்றன. அந்த ஐடியல் என்பது ஒருக்காலும் அடையமுடியாத ஒன்று என்பதை பன்னாட்டு நிறுவன மேதைகள் உணரும் நிலையில் இல்லை

    ReplyDelete

படிச்சது பிடிச்சிருந்ததா இல்லையான்னு ஒரு வார்த்தை சொல்லிட்டுத் தான் போங்களேன்.. I am Waiting eagerly!

 

கலை அக்கா தந்த பரிசுகள்!

கலை அக்கா தந்த பரிசுகள்!

என் தோழி விஜி தந்த விருது!

என் தோழி விஜி தந்த விருது!