Pages

Ads 468x60px

27 July 2012

உங்களுக்கு பிளட்பிரஷர் இருக்கா?

ன்மீகம் பற்றிய என் கருத்துக்களை நான் சென்ற பதிவில் வெளியிட்டது என் நண்பர்களில் பலருக்கு கோபத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியிருப்பதை உணர முடிந்தது. அதில் இருந்த தவறுகளை பொருட்படுத்தாமல் கருத்திட்ட அனைவருக்கும் என் நன்றி! நண்பர்களின் கருத்துக்களிலிருந்து நான் கற்றுக் கொண்டதும் தெளிவடைந்ததும் பற்றி தனியாகப் பதிவே எழுதுகிறேன். அதனால் கோபமும் வருத்தமும் அடைந்த அனைவருக்கும்.... ஸாரி! வெரிவெரி ஸாரி! கருத்துக்கள் மாறுபட்டாலும் வார்த்தைகளைக் கையாள்வதில் கவனம் வேண்டும் என்பது நான் கற்ற பாடம். (நீரூ... டைரியத் தூக்கிக் கடாசுடி லூசு!). அடுத்து ஒரு அதிபயங்கர மொக்கையோட வர்றேன்.... இப்ப இங்க உங்களுக்கு உபயோகமான ஒரு மேட்டர் தர்றேன்!

                           ரத்த அழுத்தத்தை விரட்டும் வழி

ம் உடலில் உள்ள சின்னச் சின்ன குறைபாடுகளை கண்டுகொள்ளாமல் விடும்போது அது பெரிய ஆபத்துகளை உருவாக்குகிறது. அந்த வகையில் மிகவும் ஆபத்தானது ரத்த அழுத்தம். சாதாரண விஷயம் போல தோன்றினாலும் இதை கட்டுக்குள் வைக்காவிட்டால் இதயம், மூளை, சிறுநீரகம் மற்றும் கண்கள் என முக்கிய உறுப்புகள் பாதிக்க வாய்ப்புள்ளது என்கிறார் மருத்துவ நிபுணர் குமரன் அப்புசாமி. ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்கள் 40 வயதுக்கு மேல்தான் வரும் என்று சொன்னது அந்தக் காலம். இப்போது 25 வயதிலேயே ஹார்ட் அட்டாக் பயமுறுத்தத் தொடங்கிவிட்டது. இதற்கு அடிப்படை காரணம் ரத்த அழுத்தப் பிரச்னை.

ரத்த அழுத்தத்தை பல ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் விடும்போது இதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாய் சுருங்கி மாரடைப்பு உண்டாகிறது. மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய் சுருங்கி மூளைக்கு போகும் ரத்தம் குறைந்தால் பக்கவாதம் ஏற்படுகிறது. மேலும் மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய்கள் வெடித்து மரணம் ஏற்படும் ஆபத்தும் உள்ளது. ரத்த அழுத்தம் அளவுக்கு அதிகமாக உயர்வது, குறைவது இரண்டுமே பிரச்னைதான். வழக்கமாக மாரடைப்புக்கு பிறகு இதயம் ரத்தத்தை பம்பிங் செய்வது குறையும். அப்போது ரத்த அழுத்தம் குறைய வாய்ப்புள்ளது. இதயம் வீங்கும் பட்சத்திலும் குறைந்த ரத்த அழுத்தம் வரலாம்.

குறைந்த ரத்த அழுத்தத்தால் அடிக்கடி மயக்கம் ஏற்படலாம். அட்ரீனல் சுரப்பி எனப்படும் ஹார்மோன் சுரப்பியில் டியூமர் வரலாம். இதனாலும் ரத்த அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இயல்பாகவே அதிகளவு டென்ஷன், கோபம் உள்ளவர்களுக்கு ரத்த அழுத்தப் பிரச்னை தோன்றும். இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு கிட்னி கெட்டுப் போகவும் வாய்ப்புள்ளது. சிறு வயதில் உடலை வருத்தி வேலை செய்யாமல் இருப்பது, அளவுக்கு அதிகமாக அசைவ உணவுகளை எடுத்துக் கொள்வதால் உடலில் சேரும் கொழுப்பு, தவறான உணவு முறை, அடிக்கடி குளிர்பானங்களை உட்கொள்வதால் ரத்தத்தில் அதிகரிக்கும் உப்பின் அளவு, மது மற்றும் போதைப் பழக்கங்கள், அதிக உடல் எடை போன்ற காரணங்களால் சிறு வயதிலேயே ரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. ரத்த அழுத்த அறிகுறி உள்ளவர்கள், உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்வதுடன் உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியில் கவனம் செலுத்த வேண்டும்.

முதலில் உங்கள் உடல் எடை, உயரத்துக்கு ஏற்றதுதானா என்பதை சோதித்து சரி செய்யவும். தினமும் சில மணி நேரம் வாக்கிங் அல்லது ஏதாவது ஒரு உடற்பயிற்சியை கட்டாயம் செய்யவும். உணவில் நிறைய காய்கறிகள், பழ வகைகள் சேர்க்கவும். சாப்பாட்டில் உப்பு குறைவாக பயன்படுத்த வேண்டியது அவசியம். மருத்துவரின் ஆலோசனையுடன் அதிக உடல் எடையை குறைக்கவும். புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால் அது ரத்தக் குழாயை சுருங்க செய்யும். உடனடியாக புகைபிடிக்கும் பழக்கத்தை விடவும். இதேபோல் மிகை ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மதுப்பழக்கத்தையும் விட வேண்டும். மதுவை விட முடியாதவர்கள் மதுவின் அளவை படிப்படியாக குறைத்துக் கொள்ளவும்.

ஓட்ஸ் ஒரு கப், மோர் 20 மி.லி. அரைப்பதற்கு இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் ஒரு கட்டு கொத்தமல்லி. இவற்றை எண்ணெயில் வதக்கி அரைத்து வைக்கவும். ஓட்ஸை தனியாக மிக்சியில் அரைத்து மோரில் கலந்து வைக்கவும். இத்துடன் அரைத்த கலவையை சேர்க்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், பெருங்காயம், கருவேப்பிலை தாளித்து தேவையான உப்பு சேர்த்து கலந்து வைத்துள்ள ஓட்ஸ் கலவையை சேர்த்து உப்புமா பதத்துக்கு கிளறி இறக்கவும். இதில் தேவையான அளவு நார்ச்சத்து உள்ளதால் எச்.டி.எல். எனப்படும் நல்ல கொழுப்பை அதிகரிக்கும்.

பத்து முருங்கைக்காய்களை வேக வைத்து, உள் பகுதி சதையை சேகரிக்கவும். கடலைப்பருப்பு இரண்டு கப் ஊற வைத்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். முருங்கைக்காய் சதைப்பகுதியை அரைத்த மாவில் சேர்க்கவும். இத்துடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சிறிதளவு, அரிசி மாவு 2 டீஸ்பூன், உப்பு தேவைக்கு ஏற்ப சேர்த்து வடைக்கு தேவையான பதத்தில் பிசைந்து எண்ணெயில் பொறித்து எடுக்கவும். இதில் தேவையான இரும்புச் சத்து உள்ளதால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

காலி பிளவர் - 1 கப், பச்சை பட்டாணி - 1 கப், பீன்ஸ், கேரட் தேவையான அளவு, குடைமிளகாய் - ஒரு கப், பட்டை, கிராம்பு, சோம்பு, வரமிளகாய், கொத்தமல்லி, ஏலக்காய், சுக்கு சிறிதளவு ஆகியவற்றை நன்றாக வறுத்து பொடி செய்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்கறி வகைகளை பாதியளவு வெந்தபின் இன்னொரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கருவேப்பிலை, வெங்காயம் மற்றும் காய்கறிகள் சேர்த்து வதக்கவும். மசாலா பொருட்களையும் சேர்த்து வதக்கி மஞ்சள் தூள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும். இதில் போதுமான அளவு நார்ச்சத்து இருப்பதால் உடலில் கெட்ட கொழுப்பு சேருவதை தடுக்கும்.

தவறான உணவு முறை காரணமாக உடலில் சேரும் கெட்ட கொழுப்பு, உடல் எடை அதிகரிப்பு ஆகிய காரணங்களால் சிறு வயதிலேயே ரத்த அழுத்தப் பிரச்னை தோன்றுகிறது. மன உளைச்சல், டென்ஷன் மற்றும் அதிகபட்ச கோபமும் ரத்த அழுத்த பிரச்னையை உருவாக்குகிறது. நீண்ட நாள் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கும் ரத்த அழுத்தம் வரலாம். இதன் தொடர்ச்சியாக மாரடைப்பு, பக்கவாதம்கூட ஏற்படக் கூடும். இதுபோன்ற பிரச்னைகளை துவக்கத்திலேயே தடுக்க அதிக உடல் எடையை குறைக்க வேண்டும். அதற்கு டயட்டில் கவனம் செலுத்தவும். உடலில் நல்ல கொழுப்பு சேருவதற்கான உணவுகளை கண்டறிந்து சேர்த்துக் கொள்ளவும்.

உப்பு அதிகமாக சேர்க்கப்படும் ஊறுகாய், வத்தல், வடகம் ஆகியவற்றை தவிர்க்கவும். உணவு தயாரிப்பில் பயன்படுத்தும் எண்ணெயின் அளவை குறைக்கவும். அசைவ உணவு அடிக்கடி எடுத்துக் கொள்வதை கட்டுப்படுத்தவும். எண்ணெயில் பொறித்த உணவுகளையும் தவிர்ப்பது அவசியம். பால் மற்றும் பால் பொருட்களின் அளவையும் குறைப்பது நல்லது. கீரை மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் கெட்ட கொழுப்பு கரைந்து நல்ல கொழுப்பின் அளவு அதிகரிக்கும். பழங்கள் நிறைய எடுத்துக் கொள்ளவும். பீசா, பர்கர் உள்ளிட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். தினமும் குறைந்தபட்சம் 1 மணி நேரம் வாக்கிங் அவசியம்.

மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "உங்களுக்கு பிளட்பிரஷர் இருக்கா?"

20 July 2012

ஆடிவெள்ளி - தொடர் பதிவு!


ன் மனசுல தோணற சில விஷயங்களை நான் மத்தவங்க கிட்ட ஷேர் பண்ணிக்கறது கிடையாது. அப்படி ஷேர் பண்ணிக்கிட்டா செமத்தியா திட்டு விழும்கறதால டைரில மட்டும் எழுதி வெச்சுக்கறது என் பழக்கம். தென்றல் சசிகலா அக்கா தன்னோட ‘ஆடிவெள்ளி’ங்கற பதிவுல என்னைத் தொடரச் சொன்னதும் என் டைரிப் பக்கம் ஒண்ணை ஷேர் பண்ணா சரியா இருக்குமனு தோணிச்சு. இங்க தரேன். கல் வீசறவங்க தாராளமா வீசலாம்....

நிரஞ்சனாவின் டைரியிலிருந்து...


பொதுவா நான் பெரிய பக்திமான், பக்திப்புலி எதுவும் கிடையாது. வெள்ளிக்கிழமை கோயில்களுக்குப் போகணும்னோ, விசேஷ நாட்கள்ல போகணும்னோ எந்தக் கட்டாயமும் வெச்சுக்கறதில்லை. அம்மாவோ இல்ல மத்த ரிலேஷன்ஸோ கூட வந்தாத்தான் போவேன். வீட்லயும் ஸ்லோகம் சொல்றது, சாமி கும்பிடறதுங்கற பழக்கம் அம்மாகிட்டத்தான் உண்டு. எனக்கு இல்லை. இதுக்காக அம்மாட்ட திட்டு வாங்கினதும் உண்டு. அவங்க மனசு கோணக் கூடாதுன்னுதான் அம்மாவோட கோயிலுக்குப் போறது வழக்கம். நானாப் போக மாட்டேன். இப்படிப்பட்ட எனக்கு இந்த ஆடி மாசத்துல மட்டும் ‘கடவுள் இல்லை, இல்லவே இல்லை’ன்னு கூச்சலிட்டுட்டு நாத்திகமா ஆயிடலாம்னுதான் தோணும்.

இன்னிக்குத் தேதியில தமிழ்நாட்டுல முக்கிய நகரங்கள்ல எல்லாம் நெருக்கம் நெருக்கமா வீடுகள் கட்டப்பட்டிருக்கு. ஏறக்குறைய ரெண்டு தெருக்களுக்கு ஒரு கோயில் (சின்னதோ, பெரிசோ) உண்டு. எல்லாத்துலயும் பெரிசா கூம்பு மைக் வெச்சு, அதிகாலையிலயே பாட்டைப் போட்ட அலற ஆரம்பிச்சுதுன்னா, மதியம் வரைக்கும் ஓயறதில்லை. ஒரு புத்தகத்தை எடுத்தா கான்சென்ட்ரேட் பண்ணிப் படிக்க முடியாது. இந்தப் பக்கம் தாத்தாவானா தூக்கம் கலைஞ்ச எரிச்சல்ல, எழுந்து புலம்பிட்டிருப்பாரு.

‘இந்த சனியன் பிடிச்ச கோயிலை இடிச்சுட்டு வந்தா என்ன’ன்னு எனக்கு கோபம் பொங்கும். ஆனா வாய்விட்டுச் சொல்ல முடியாது. ஒருமுறை சொன்னதுக்கு, ‘‘பொண்ணா லட்சணமாவா திங்க் பண்ற நீ? தீவிரவாதி ரேஞ்சுக்குப் பேசறியே... கொஞ்சமாவது பக்தி இருக்கா உனக்கு?’’ன்னு ஆரம்பிச்சு அரை மணி நேரம் அம்மா டோஸ் விட்டாங்க. நிஜமா எனக்குப் புரியலைங்க. திங்க் பண்றதுலகூட பெண்ணா இருந்து திங்க் பண்றது வேற, ஆணா இருந்து திங்க் பண்றது வேறயா? மூளைங்கற வஸ்து எல்லாருக்கும் ஒரே மாதிரிதானே வைக்கப்பட்டிருக்குது?

சரி... பேசவந்த விஷயத்துக்கு வர்றேன். ஏன் இந்துக் கோயில்கள்ல இவ்வளவு ஆர்ப்பாட்டங்கள், கொண்டாட்டங்கள்ங்கற விஷயம் எனக்கு எப்பவுமே புரியாத புதிர்தான். சர்ச்ல ஸ்பீக்கர் வெச்சு பாடினாலும், பேசினாலும் அந்த பில்டிங்கைத்தாண்டி ஓசை வராது. மசூதிகள்ல தொழுகைக்கு அழைக்க நேரம் மட்டும்தான் ஸ்பீக்கர் சத்தம் எழும். நம்ம இந்துக் கோயில்கள்லதான் இப்படி ஸ்பீக்கர் வெச்சுக் கத்தறதும், அமர்க்களம் பண்றதும். தவிர, திருவிழான்னா, சாமிய மேளம், வாத்தியம் முழங்க ஊர்வலமா எடுத்துட்டு வர்றதும், அது கிராஸ் பண்ற வரைக்கும், ட்ராபிக்கே ஸ்தம்பிக்க ‌வெக்கறதும் ஏன்? ஜீசஸ் சிலைய ஊர்வலமா எடுத்துட்டு வந்து பாத்திருக்கீங்களா நீங்க? இந்துக்கள் பெரும்பான்மையா இருக்கற தேசம்ங்கறதால இப்படியா? சாமியக் கும்பிடணும்னு விரும்பறவங்க கோயிலுக்குப் போய்க் கும்பிட்டுக்கட்டும். அது ஏங்க தெருவுக்கு வரணும்?

இதே ஆடி மாசத்துல இஸ்லாமியர்கள் பக்தி செலுத்த பட்டினி இருந்து, ஆறு வேளையும் தொழுது ரம்ஜான் விரதம் இருப்பாங்க நம்ம பயபுள்ளைங்க இந்த மாசத்துல ஆர்ப்பாட்டம் பண்ணி, ஏரியாவையே அலற வெச்சு தங்களோட பக்திய வெளிப்படுத்துவாங்க... கொஞ்சம் யோசிச்சுப் பாத்தா... பிள்ளையாருக்கு கொழுக்கட்டை பிடிக்கும்னும். கிருஷ்ணருக்கு வெண்ணை பிடிக்குமனும் சொல்லி அவங்க பேரைச் சொல்லி இவங்க சாப்பிடுவாங்க. ஏன் எந்தக் கடவுளுக்கும் கட்லெட். ப்ரைட் ரைஸ்லாம் பிடிக்காதா? கூழ்தான் பிடிக்குமா? ஏன்னா... கடவுள் தத்துவத்தை உருவாக்கின முன்னோர்கள் காலத்துல இந்த ஃபுட்லாம் இல்ல. அதனாலதான் கடவுள்கள் இதை சாப்பிடலை.

இது பத்தாதுன்னு ஒரு கும்பலே கைல ஒரு நோட்டை எடுத்துக்கிட்டு வீட்டுக்கு வீடு படையெடுத்துடுவாங்க- கோயில் திருவிழாவுக்கு வசூல் பண்றோம்னு. அந்தப் பணம்லாம் கோயிலுக்குப் போய்ச் சேருதோ... இல்ல ‘களவாணி’ படத்து விமல் குரூப் மாதிரி ‘நீராகாரம்’ சாப்பிடப் போய்த் தொலையுதோ... சம்பந்தப்பட்ட சாமிகளுக்கே வெளிச்சம்!

சின்னப் பிள்ளைங்க பொம்மைகளை வெச்சுக்கிட்டு, அதுங்களை சாப்பிட வெக்கறதாயும், சண்டை போட்டுக்கறதை சமாதானம் பண்றதாகவும் தனியா ஒரு பொம்மை உலகத்தை நிர்மாணிச்சுக்கிட்டு வாழும். எனக்கு கோயில்களைப் பாத்தா அப்படித்தான் பெரியவங்க நிர்மாணிச்சுட்டிருக்கற பொம்மை உலகமா தோணுது. குழந்தைங்களோட சின்ன சைஸ் பொம்மைகளுக்குப் பதிலா பெரிய சைஸ் விகரகங்கள். அதைக் குளிப்பாட்டறதும், தூங்க வெக்கறதும்...! ஒரு பக்கம் புராணங்கள்ல சாமி தூங்கவே தூங்காது தூங்கற மாதிரி நடிக்கும்னு பெருமையடிச்சுப்பாங்க. இன்னொரு பக்கம் ராத்திரியானா சாமியை சயன அறைல விடறதுக்கு ஒரு சம்பிரதாயம்!  நீங்க வேணும்னா தூங்கப் போங்கப்பா... அவங்களும் தூங்கியாகணுமா என்ன?

 ‘‘சாமிக்கு கோயில்ல சமையலறை (மடப்பள்ளி) கட்டிருயிருக்கீங்க. சாமி தூங்கறதுக்கு சயன அறைன்னு கட்டியிருக்கீங்க. சாமிக்கு ஒரு பாத்ரூம் கட்டினீங்களாடா? சாமிக்கு அதெல்லாம் போகணும்னா என்னடா பண்ணுவாரு...?’’ன்னு பெரியார் கேட்டது சரியான கேள்விதான். இதுக்கு பதில் யாரும் சொன்னதாத் தெரியலை. இறை நம்பிக்கைன்ற விஷயத்துல இப்படி எனக்குள்ள நிறைய கேள்விகள் இருக்கறதாலதான் நான் சாமி கும்பிடறதையும், கோயில்களுக்குப் போறதையும் அம்மாவோட விருப்பத்துக்காகத்தான் செஞ்சுட்டிருக்கேன்.

அதே சமயம் இன்னொண்ணையும் இங்க சொல்லி முடிக்கறேன். கடவுள் உருவங்கள்ல விநாயகரும் கிருஷ்ணனும் எனக்கு ரொம்பவே பிடித்தமானவை. கண்ணன் பத்தி பாரதியார் பாடின பாட்டுக்கள்லருந்து கோவை சரளா அக்கா எழுதின கவிதைகள் வரை அனைத்தையும் விரும்பி ரசிக்கறவ நான். நிரஞ்சனா ஒரு முரண்பாட்டு மூட்டை.

இந்த விஷயம் பத்தி தங்களோட கருத்துக்களைத் தொடர்ந்து சொல்ல நான் அழைக்கறவங்க... 1) தோழி அதிஸயா 2) நண்பர் சீனு  3) (விரும்பினால்) கோவை சரளா அக்கா.

மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "ஆடிவெள்ளி - தொடர் பதிவு!"

14 July 2012

புதிரான ‘மாஸ்’ சைகாலஜி!


நிரஞ்சனாவின் டைரியிலிருந்து...

கரத்தின் மத்தியில குறுக்கும் நெடுக்குமா விர்விர்ன்னு வாகனங்கள் பறந்துக்கிட்டிருக்கற ஒரு சாலை. அந்த பரபரப்பான சாலையில. ரோட்டோரமா தயங்கி நிக்கிறா நிரஞ்சனா. வாகனங்களுக்குக் குறுக்கே புகுந்து கடக்கறதுன்னா ஒரே பயமா இருக்குது நிரூவுக்கு. ஏதாவது வண்டி நிக்காமலோ, பிரேக் பிடிக்காமலோ இடிச்சு, நிறையப் பேர் மத்தியில கீழ விழுந்து அடிபட்டுடுச்சுன்னா என்ன பண்றதுன்னு மனசுல ஒரு உதறல் அவளுக்கு. டிராபிக் எப்படா குறையும்னு சுத்திமுத்தி பாத்துட்டிருக்கா. ‌சில நிமிஷங்கள்ல அவளைச் சுத்தி ஏழெட்டுப் பேர் அவளை மாதிரியே டிராபிக்கை கடக்கறதுக்காக நிக்கிறாங்க. இப்ப எல்லாரும் ஒருத்தரை ஒருத்தர் பாத்துக்கிட்டு, கையைக் காட்டியபடி சாலையின் குறுக்கே போகறாங்க. நிரூவும் அவங்களோடவே ஓடிடறா. விரைஞ்சுட்டிருக்கற வாகனங்கல்லாம் அவங்க கடந்து போற வரைக்கும் நிக்கிதுங்க.

ல்லூரியில முதல் வருடத்தில் சேர்றதுக்காக வர்ற அந்தப் பொண்ணோட முகத்தில பயம் பரதநாட்டியம் ஆடிட்டிருக்கு. திருவிழாவுல காணாமப் போன குழந்தை மாதிரி சுத்திச் சுத்திப் பாத்தபடி மெதுவா தயங்கித் தயங்கி நடந்து வர்றா. அவளுக்கு எதிர்ல வந்து நிக்கறா ப்ரியா. ‘‘ஹாய், நான் ப்ரியா. இங்க தேர்ட் இயர் படிக்கிறேன். உன் பேர் என்னம்மா?’’ன்னு கேக்கறா. அவளோட அழகான புன்னகை முகத்தையும், இனிமையான குரலையும் பாத்ததும் அந்தப் பெண்ணுக்குத் தெம்பு வருது. அவ பேச ஆரம்பிக்கிறதுக்குள்ள ப்ரியாவோட க்ளாஸ் மேட்ஸ் அங்க வந்துடறாங்க. ‘‘ஏய்... ப்ரியா! ஃபர்ஸ்ட் இயர் பார்ட்டி ஒண்ணப் பிடிச்சுட்டியா?’’ன்னு குஷியாக் கேட்டுக்கிட்டே ராகிங் பண்ண ஆரம்பிக்கிறாங்க. ப்ரியாவும் வேற வழியில்லாம அவங்களோட சேர்ந்துக்கறா.

டைத்தெருவோட ஓரத்துல பெட்டிக் கடை வெச்சிருக்கான் மாரி. திடீர்னு ரோட்டுல ஒரு கும்பல் ஆவேசமா ஓடி வருது. ‘‘தலைவரு இறந்துட்டாராம். இங்க என்னடான்னா... கடையத் திறந்தாடா வெச்சிருக்கீங்க? மூடுங்க...’’ன்னு கத்திக்கிட்டு கைல கிடைச்ச கல்லு, கட்டை எல்லாத்தையும் திறந்துருக்கற கடைங்க மேல வீசுது. கார்களை மறிச்சு கண்ணாடியை ‌உடைக்கிது. மாரி பதறிப் போய் கடையை அடைக்கிறான். மனசுக்குள்ள ‘உன் தலைவன் செத்தா அவன் வீட்டுலதானடா இழவு. அதுக்கு என் பொழப்பை ஏண்டா பாவிகளா கெடுக்கறீங்க?’ன்னு கதறல். கூட்டத்துக்கிட்ட கேக்கவா முடியும்? கேட்டா உயிர் மிஞ்சாதேன்னு பயந்து ஓடிடறான் இடத்தை விட்டு.

ரு தனியார் தொலைக்காட்சி நடத்தற இசை நிகழ்ச்சி மேடை அது. காம்பயரிங் பண்ணற பொண்ணு வந்து நிக்கறா. பாடப் போறவங்களைப் பத்தி அறிவிக்கிறா. கூட்டம் சத்தம் போடுகிறது. ‘‘ஹலோ சென்னை... இவ்வளவுதானா உங்க சத்தம்...! உற்சாகமா குரல் கொடுங்க...’’ என்று அவள் கூற (கத்த?) கூட்டம் மொத்தமும் இப்போது அரங்கமே அதிர்ற அளவுக்கு, வீட்டில் டி.வி. பார்ப்பவர்களின் ஸ்பீக்கர்கள் கிழியற அளவுக்கு ‘ஓஓஓஓ’ன்னு கத்துது.

-இந்த மாதிரி சம்பவங்கள்ல பாக்கறப்ப ‘கூட்டம்’ அல்லது ‘குழு’வோட மனப்பான்மை என்னை ஆச்சரியப்பட வெக்குது. தனியா டிராபிக்கை க்ராஸ் பண்ண பயப்படற நிரஞ்சனா கூட்டத்தோட சேர்ந்ததும் தைரியமா க்ராஸ் பண்றா. ராகிங் பண்ணத் தயங்கற ப்ரியா கூட்டம் சேர்ந்ததும் தானும் கலந்துக்கறா. தனியா ஒரு ரவுடி வந்தா ஒரு கை பாக்கற தைரியமுள்ள மாரி, கூட்டத்துக்கு பயந்து ஓடிடறான். அமைதியா இசையை ரசிக்க வந்தவங்க கூட கூட்டமா கத்தறப்ப தாங்களும் குரல் கொடுக்க வேண்டியிருக்கு.

பிக்பாக்கெட் செஞ்ச ஒருத்தன் மாட்டிக்கிட்டா, அவனை ஒருத்தன் அடிச்சுக் கொன்னா அது கொலை, ஆனா ஒருத்தன் அடிக்க ஆரம்பிச்சதும் உடனே நாலஞ்சு பேரா சேந்து வீரத்தக் காட்ட ஆரம்பிச்சுடுவாங்க. கூட்டம் அடிக்கறதுல அவன் செத்துட்டா அது கொலையில்ல... தப்பிச்சுரலாம்.

இந்தக் குழு மனோபாவத்தை நான் என் குடும்பத்துலயே பாத்து ஆச்சரியப்பட்டிருக்கேன். ரொம்பக் Calmஆ இருக்கற எங்கப்பா நான் கிரிக்கெட் பாக்கும் போது விராட் கோலி அதிரடியா செஞ்சுரி போட்டாக்கூட கை தட்ட மாட்டார். அதுவே வீட்ல ஒரு விசேஷம்னு பாமிலி மெம்பர்ஸ் எல்லாரும் கூடியிருக்கற போது டிவியில கிரிக்கெட் மேட்ச் ஓடி, டோனி செஞ்சுரி போட்டதுக்கு எல்லாரும் கைதட்டி சத்தம் போட்டா, அப்பாவும் கை தட்டிச் சிரிக்கறதைப் பாத்து வியந்திருக்கேன்.

என்னோட இந்த கவனிப்பை ரொம்பத் தயக்கத்துக்கப்புறம் என் ஃப்ரெண்ட் உஷாகி்ட்ட பகிர்ந்துக்கிட்டேன் ஒரு நாள். அவ சொன்னா... ‘‘சி்ன்ன வயசுல என்னோட க்ளாஸ் மிஸ் சொல்லியிருக்காங்க. நீ ஒரு ரோட்டுல நின்னுக்கி்ட்டு, சுவத்தில வராட்டி த்ட்டியிருக்கறதையே உத்துப் பாத்துட்டு பத்து நிமிஷம் இரு. உன்னைச் சுத்தி நாலஞ்சு பேரு நின்னு அந்த மாதிரி பாக்க ஆரம்பிச்சுடுவாங்க. சத்தம் காட்டாம நீ அங்கருந்து நகந்துட்டாக் கூட அந்தக் கூட்டம் அங்கருந்து நகராதுன்னு சொல்லியிருக்காங்கடி. அதான் மாஸ் சைக்காலஜி’’ அவ ‌சொன்னது ரொம்பவே வியப்பா இருந்துச்சு எனக்கு. Is it true?

இந்த மாதிரி கூட்டம்னு ஒண்ணு சேரும் போது அதுல இருக்கறவங்களோட சொந்த அடையாளங்கள், முகங்கள், குணங்கள் மறைஞ்சு கூட்டத்துக்குன்னு தனியா ஒரு முரட்டுத்தனம் உண்டாயிடறது எனக்கு ஆச்சரியத்தைத் தர்றதா இருக்கு. கூட்டம் அப்படிங்கற விஷயத்துக்கு எத்தனையோ தலைகள் இருந்தாலும் மூளைங்கற ஒண்ணு மட்டும் இருக்கறதி்ல்லைன்னு எப்பவோ படிச்சதுதான் நினைவுக்கு வருது.

மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "புதிரான ‘மாஸ்’ சைகாலஜி!"

11 July 2012

கம கம கதம்பம் - 3


                        ஆஹா... பிரம்மச்சாரிகள்!

ரு காலத்துல ஃபேஷனா இருந்தது காணாமப் போய் மறுபடி இன்னொரு காலத்துல ஃபேஷனா உருமாறி வரும்னு கேள்விப்பட்டிருக்கேன். சில ட்ரெண்டுகளும் கூட அப்படி ஆகுமோ என்னமோ... தெரியலை. பழைய படங்கள்லயும் சரி, சினிமாக்கள்லயும் சரி ஒரு விஷயத்தை நான் கவனிச்சிருக்கேன்- ‘‘பேச்சிலர்க்கெல்லாம் வீடு கொடுக்கறதில்லப்பா. ஃபேமிலிக்குத் தான் நாங்க வீடு கொடுப்போம்’’ என்று ஹவுஸ் ஓனர்கள் சொல்வதாக வரும். அந்த நிலைமை இப்போது அப்படியே உல்டாவாகி விட்டிருக்கிறது. ‘‘ஃபேமிலிக்கெல்லாம் நாங்க வீடு தர்றதில்லை. பேச்சிலர்ஸ் வந்தாப் பரவாயில்லை’’ என்று ஹவுஸ் ஓனர்கள் அறிவிக்காத குறைதான்.

ஒரு குடும்பத் தலைவன் மூக்கால அழுதுக்கிட்டே ஆறாயிரம் ரூபா வாடகை தர்றான்னு வெச்சுக்கங்க. அதே நாலு பேச்சிலர்களைக் குடி வெச்சா, ஆளுக்கு ரெண்டாயிரம் போட்டு, எட்டாயிரம் தந்துடறாங்க. அதிக வாடகை தவிர, பேச்சிலர்ஸ் மோஸ்ட்லி சமையல் பண்றதில்லங்கறதால தண்ணி செலவும் குறைச்சல். இப்டில்லாம் கணக்குப் ‌போட்டு வீட்டு ஓனர்கள் இப்பல்லாம் அதிகமா பேச்சிலர்ஸ்க்கே வீடுதர ஆரம்பிச்சிட்டாங்க. இந்த ட்ரெண்ட் மாறுதா இல்லயான்னு பாத்துட்டு என் 50வது வயசுல ஒரு பதிவு போட்டுடறேன். தவறாம அப்பவும் வந்து கமெண்ட் போட்றணும் எல்லாரும். ஓ.கே.வா? (நான் இருக்கற ஏரியாவுல கவனிச்சுப் பாத்ததை வெச்சுத்தான் இந்த மேட்டர் எழுதியிருக்கேன். உங்க ஏரியாவுல அப்படி இல்லன்னா சந்தோஷம்தான்)

* * * * * * * * * * * * * * * * * * * * * * * *

                சோம பானம் தெரியுமா?

சோமம் என்றால் பச்சை இலை. இமயமலை அருகில் உள்ள சிறு மலைகளில் வளர்ந்து செழித்துக் கிடக்கிறது! சோமம் என்ற வார்த்தைக்கு போதை-ம்யக்கம் என்று பொருள். இந்த சோமச் செடியைக் கசக்கிப் பிழிந்து சாறெடுத்து புளிக்கச் செய்து வைத்துக் குடிப்பார்கள். இதுதான் ஆரம்ப காலத்து மது! அதனால் சோமபானம் என்று இந்த மதுவுக்குப் பெயர்! இதைக் குடித்து அரசர்களும் மந்திரிகளும் அந்தக் காலத்தில் ஆட்டம் போட்டார்கள். நாடும் நட்பும் இழந்து கஷ்டமும் பட்டார்கள். பகை வளர்த்து அடிக்கடி சண்டை இட்டும் கொண்டார்கள்.

இந்த சோமபானம் உடலுக்குத் தீங்கு தராதது! .உடல் பலத்தையும், நலனையும் பாதுகாக்க வல்லது. இதைப் பின்பற்றி கள் பானம் மனிதன் கண்டுபிடித்தான். இதுவும் உடல் பலம் அளித்தது. அளவோடு குடித்தால் ஆயுளும் தந்தது! இன்றைக்கு விஞ்ஞான யுகத்தில் கெமிக்கலில் மது தயாரித்து வேக மரணத்துக்கு வழி கண்டுபிடித்து விட்டான் மனிதன்! இந்த கெமிக்கல் மதுக்கள் இளமையை ஊஞ்சலாடச் செய்து- மரணத்தைக் கூடவே வைத்துக் கொள்ள உதவுகிறது.

      -எதேச்சையா கண்ல பட்ட ‘ஸ்ரீகாளி முரசு’ங்கற புத்தகத்துல இருந்த தகவல்.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * *

         சங்கரன் பிள்ளையின் பேசும் நாய்

த்குரு ஜகி வாசுதேவ் சொல்லும் சங்கரன்பிள்ளை ஜோக்குகள் நிறையவே பிரபலம். அதிலிருந்து ஒன்று இங்கே .உங்களுக்காக:

பேசும் நாய் விற்கப்படும்’ என்று சங்கரன் பிள்ளை வீட்டு வாசலில் அறிவிப்புப் பலகை மாட்டப்பட்டிருந்தது. இதைப் பார்த்த ஒரு நாய்ப் பிரியர், ‘‘நாயைப் பார்க்கணும்’’ என்றார். ‘‘கொல்லைப் பக்கம் கட்டிப் போட்டிருக்கிறேன். போய்ப் பாரும்!’’ என்றார் சங்கரன் பிள்ளை.

வந்தவர் கொல்லைப் பக்கம் போய் நாயைப் பார்த்து, ‘‘நீ பேசுவியாமே’’ என்று கேட்டார்.

நாயும், ‘‘ஆமா... ஆமா... ’’ என்றது.

‘‘உன்னைப் பற்றிச் சொல்லேன்’’ என்றார் நாய்ப் பிரியர்.

‘‘சின்ன வயசிலயே என்னால் பேச முடியும்னு தெரிஞ்சுக்கிட்டேன். அரசாங்கத்துக்கு உதவ நினைச்சேன். அவங்க என்னை நாய் உளவுப் பிரிவில் சேர்த்துக்கிட்டாங்க. விமானத்தில் நாடு விட்டு நாடு அனுப்புவாங்க. உலகத்தின் பல தலைவர்களின் வீட்டு வாசலில் போய்க் காத்திருப்பேன். யாருமே நாயை உளவாளின்னு நினைக்க மாட்டாங்கல்ல... எட்டு வருஷம் இப்படி உலகம் முழுக்க சுத்தினேன். அப்புறம் ரொம்பக் களைபபாயிடுச்சு. அதனால விமான நிலையத்திலேயே சந்தேகப்படுற மாதிரி ஆளுங்களை வேவு பார்த்து உதவி செஞ்சேன். பதக்கம்லாம் கொடுத்துக் கெளரவிச்சாங்க. அப்புறம் ஒரு பெண் நாயைக் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அப்புறம் நிறையக் குட்டிகள் போட்டோம். இப்ப நான் ரிட்டயர்ட் ஆகப் போ்றேன்’’ என்றது.

வந்தவர் வியப்பில் ஆழ்ந்தார். எப்பேர்ப்பட்ட திறமையான நாய் இது என ஆச்சரியப்பட்டார். உடனே அதை வாங்க முடிவு பண்ணி சங்கரன் பிள்ளையிடம் விலை கேட்டார். அவர், ‘‘250 ரூபாய்’’ என்று சொல்ல, ‘‘அப்படியா? 250 ரூபாய்தானா? ஏன் இவ்வளவு மலிவான விலை?’’ எனக் கேட்டார்.

‘‘ஏன்னா, இது நிறையப் பொய் பேசும்’’ என்றார் சங்கரன் பிள்ளை.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * *

    நெல்லி சாப்பிடுங்கோ ஃப்ரெண்ட்ஸ்!

வீட்டில் நெல்லி மரம் வளர்ப்பது மிகுந்த நன்மை தரும். பெருமாளுக்கு நெல்லி இலையால் அர்ச்சனை செய்யலாம். அவருக்குப் பிடித்தமான நைவேத்தியம் நெல்லிக் கனி. வீட்டின் வாசலில் நெல்லி மரம் இருந்தால் பில்லி, சூனியம் ஆகியவை நெருங்காது என்பது நம்பிக்கை. ஏகாதசியில் நெல்லிக் கனியை தண்ணீரில் போட்டு வைத்து, மறுநாள் துவாதசி அன்று எடுத்துச் சாப்பிட்டால் காசியில் குடியிருப்பதற்கு ஒப்பான பலன் கிடைக்கும். நெல்லி மரம் உள்ள வீட்டில் லட்சுமி தங்குவாள் என்பது ஐதீகம்.

-வேற வேற புத்தகங்கள்லருந்து நான் திரட்டின தகவல்கள் இது. எனக்குப் பிடிச்ச நெல்லிக் கனியைத் தரும் மரத்தை வீட்ல வளர்த்தா எவ்வளவு நல்லது பாருங்க... நெல்லிக்காயை வெச்சு சமையல்கூட பண்ணலாம்னு இந்தப் பதிவுல பார்த்துத் தான் தெரிஞ்சுக்கிட்டேன். நீஙகளும் நெல்லிக் கனியை.... வெயிட்... வெயிட்... ஓவரா நெல்லி புராணம் பாடற இவளை நெல்லியாலேயே அடிச்சா என்னன்னு யாரோட மைண்ட் வாய்ஸோ எனக்குக் கேக்குது. அடுத்த மேட்டருக்கு எஸ்கேப்...!

* * * * * * * * * * * * * * * * * * * * * * * *

           ஐயோ பாவம் முதியவர்கள்!

சில வயசானவங்க தங்களோட முதுமையை ஏத்துக்க மறுக்கறது ஏன்னே புரியலை உதாரணத்துக்கு எங்க பக்கத்து வீட்ல இருக்கற ஒரு பாட்டி. அவங்களை மகனும் மருமகளும் எந்தக் குறையும் சொல்லாம தாங்கறாங்க. ஆனா இவங்களுக்குள்ள ‘நமக்கு வயசாய்டுச்சே. முன்ன மாதிரி எந்த வேலையும் செய்ய முடியலையே‘ன்ற காம்ப்ளக்ஸ் இருக்கும போல... அதனால அவங்க சொல்லச் சொல்லக் கேக்காம எல்லா வேலையையும் இழுத்துப் போட்டுக்கிட்டு செய்வாங்க. அதனால ஏதாவது தப்பாகி திட்டும் வாங்கிப்பாங்க.

உதாரணத்துக்கு நேத்து மகனும் மருமகளும் கிளம்பிப் போனதும் தன் செல்லுக்கு ரீசார்ஜ் பண்றேன்னுட்டு கடைக்குப் போயி நம்பர் எழுதிக் குடுத்திருக்காங்க. வீட்டுக்கு வந்து அரை மணி நேரம் கழிச்சும் ரீசார்ஜ் ஆகலையேன்னு கடையில போய் கேட்டப்ப. கடைக்காரர் இவங்க எழுதின நம்பரைப் படிக்க, அப்பத்தான் தான் கடைசி நம்பரை 5க்கு பதிலா 3 எழுதிக் கொடுத்துட்டது புரிஞ்சது. அப்புறம் என்ன... அந்த நம்பருக்கு போன் பண்ணினா ஒரே ’ஸ்விட்ச் ஆஃப்’ மெஸேஜ்தான். கடைக்காரரும் கை விரிச்சுட்டாரு. சாயங்காலம் மகன் வந்ததும் 300 ரூபா நஷ்டமானதைச் சொல்லிப் புலம்ப... ‘என்ட்ட சொல்லிருந்தா நான் பண்ணியிருக்க மாட்டேனா’ன்னு மகன சத்தம் போட்டாரு. அந்தப் பாட்டியைப் பாக்கவே பாவமா இருந்துச்சு எனக்கு. முதுமைய ஏத்துக்கிட்டு இயல்பா அமைதியா இருக்க இந்த மாதிரி சில முதியவங்களால ஏன் முடியலைன்னுதான் தெரியலை.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * *

    ச்சும்மா... கொஞ்சம் ஹெல்த் டிப்ஸ்!

* கொதிக்கும் எண்ணெய் காலில் பட்டுப் புண்ணாகி விட்டதா..? பச்சை .உருளைக் கிழங்கை அரைத்துப் புண்ணின் மேல் வைத்துக் கட்டுங்கள். புண் ஆறி விடும்.

* உருளைக்கிழங்கு வாயுப் பொருளல்ல. குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு மிகத் தேவையானது. உருளைக் கிழங்கிலுள்ள புரதப் பொருள், தானியங்களிலுள்ள புரதப் பொருள்களை விடச் சிறந்தது. உருளைக் கிழங்கு மற்ற தானியங்களைவிட சுலபமாக ஜீரணமாகும். சோறை வைத்துக் கொண்டு உதவி காய்கறிகளை வைத்துக் கொள்வது போல உருளைக் கிழங்கை வைத்துக் கொண்டு உதவிக்கு காய்கறிகளை வைத்துக் கொள்ளலாமே! உருளைக் கிழங்கு மனிதன் உணவில் தவிர்க்க முடியாத பங்கினைப் பெற்றிருக்கிறது.

* பல் ஈறுகளில் வீக்கம் இருக்கிறதா? உப்புப் பொடியையும், மஞ்சள் பொடியையும் சம பாகமாகக் கலந்து பல் துலக்கிய பிறகு ஈறுகளில் வைத்துத் தேய்த்துவிட்டு வாயைக் கொப்புளித்துக் கொண்டு வந்தால் ஈறு சம்பந்தப்பட்ட தொல்லைகள் நீங்கி விடும்!

                                            -இந்தத் தகவல்களையெல்லாம் எனக்குச் சொன்னது
                                                                                       ‘கல்கண்டு’ புத்தகமுங்கோ!

மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "கம கம கதம்பம் - 3"

6 July 2012

உங்களுக்காக ஒரு குட்டிக் கதை!


                   மகிழ்ச்சிக்கு வழி...

“நான் துன்பச் சிறையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறேன்” என்றான் அவன்.

“ என்ன காரணம்?” என்று கேட்டார் ஒரு பெரியவர்.

“மற்றவர்கள் எனக்குத் துன்பம் கொடுக்கிறார்கள்”

“உனக்குத் துன்பம் கொடுப்பது உன்னுடைய மனம்தான்”

“அப்படியா சொல்கிறீர்கள்?“

“ஆமாம்!”

“அப்படியானால் துன்பத்திலிருந்து விடுபட என்ன வழி?”

“மனதைப் புரிந்து கொள்... அது போதும்.”

“எப்படிப் புரிந்து கொள்வது?” என்றான் அவன்.

“இந்தக் கதையைக் கேள்“ என்று அவர் சொன்னார் - “ஆசையாக ஒரு பூனையை வளர்த்தார் ஒருவர். அந்தப் பூனை ஒருநாள் எலியைப் பிடித்து கவ்விக் கொண்டு வந்தது, அவருக்கு அது மகிழ்ச்சியாக இருந்தது.

மறுநாள் அந்தப் பூனை, அவர் ஆசையாக வளர்த்த ஒரு கிளியைக் கவ்கிக் கொண்டு வந்தது, அவருக்கு அது அதிர்ச்சியாக இருந்தது,

இன்னொரு நாள் அந்தப் பூனை எங்கேயோ சென்று காட்டிலேயிருந்து ஒரு குருவியைப் பிடித்துக் கவ்விக் கொண்டு வந்தது. இப்போது அவர் மகிழவுமில்லை; வருந்தவுமில்லை.

எதையாவது பிடிப்பது பூனையின் சுபாவம் என்பதைப் புரிந்து கொள்ள அவருக்குக் கொஞ்ச காலம் ஆயிற்று.

தனக்குப் பிடிக்காத எலியைப் பிடிக்கிறபோது இன்பம். தனக்குப் பிடித்தமான கிளியைப் பிடிக்கிறபோது துன்பம், தனக்குச் சம்பந்தமே இல்லாத குருவியைப் பிடிக்கிறபோது இன்பமுமில்லை... துன்பமுமில்லை...” -அவர் கதையை முடித்தார். இவன் சிந்திக்கத் தொடங்கினான்.

துன்பச் சிறையின் கதவுகள் திறக்கப்படுகிற ஓசை அவன் செவிகளில் விழுந்தது.

“மனதைப் புரிந்து கொள்கிறவர்களே மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.”

-கதையும் கருத்தும் நல்லா இருக்கே. இவ்வளவு புத்திசாலியா நிரூன்னு ஆச்சரியப்படறீங்களா... இல்லிங்க... ‘உள்ளமே உலகம்’ங்கற புத்தகத்துல தென்கச்சி கோ.சுவாமிநாதன் எழுதியிருந்த இந்தக் கதை படிச்சதும் பிடிச்சது. ஷேர் பண்ணிக்கிட்டேன். உங்களுக்குப் பிடிச்சிருக்கா...?


மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "உங்களுக்காக ஒரு குட்டிக் கதை!"

4 July 2012

தோழி தந்த விருது!

லைப்பதிவுகளில் எழுத ஆரம்பித்த பின்னர் எனக்கு நிறைய நட்புகளும் உறவுகளும் கிடைச்சிருக்குங்கறதுல ரொம்ப ரொம்ப சந்‌தோஷம் எனக்கு. அந்த சந்தோஷத்தின் சதவீதம் இப்போ அதிகமாய்டுச்சு. நல்ல நல்ல சமையல் குறிப்புகளை காய்கறிகளின் மருத்துவ பயன்களுடன் அழகிய பதிவுகளாக எழுதிவரும் என் இனிய தோழி விஜி பார்த்தி தான் பெற்ற விருது ஒன்றை எனக்குக் கொடுத்திருக்காங்க.


 ‘என் உறவுகளுடன் பகிர்ந்து கொள்கிறேன்’ என்று சொல்லி விஜி தந்திருக்கும் இந்த விருதினால எனக்கு இரட்டிப்பு சந்தோஷம். ஏன்னா இதை நான் விரும்பும் ஐந்து பேருக்குக் கொடுக்கலாம்னு சொல்லியிருக்காங்க.. நான் என்னைவிட நல்லா எழுதற என்னுடைய உறவுகள் ஐவருக்கு இதைப் பகிர்ந்து கொடுக்க ஆசைப்படறேன்..

1) தன் அன்பினால் என்னை உருக வைத்தவர், நீண்ட இடைவெளி விட்டு பதிவுகள் எழுதினாலும் சுவாரஸ்யமாக ரசிக்கும்படி எழுதுபவர்-.

                         கலை அக்கா!  (கிராமத்துக் கருவாச்சி)

2) இவர் எழுதும் அழகுத் தமிழ்க் கவிதைகள் என்னை மயங்க வைக்கும். உரைநடையில் எழுதினாலோ மனதில் பிரமிப்பை ஏற்படுத்தும் இவரது எழுத்து-

                     கோவை மு.சரளாதேவி அக்கா! (பெண் என்னும் புதுமை)

3) நான் வலையுலகில் நுழைந்தது முதல் இன்று வரை என்னைத் தட்டிக் கொடுத்து என் எழுத்தை ஊக்கப்படுத்துபவர் இவர். Sweet Sister என்று நான் அன்போடு அழைப்பவர்-

                              ஸாதிகா அக்கா! (எல்லாப் புகழும் இறைவனுக்கே)

4) இவரின் கவிதைத் திறமும், ரசிப்புத் திறமும் எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும். நான் விரும்பிப் படிக்கும் தளங்களில் இவருடையதும் ஒன்று-

                                   மகேந்திரன் அண்ணா! (வசந்த மண்டபம்)

5) என் பதிவுகளில் இவர் கருத்துச் சொல்லியிருக்கிறாரா என்று ஆவலுடன் தேடுவேன். மற்ற தளங்களுக்குச் சென்றாலும் இவரது கருத்து இருக்கிறதா என்றுதான் முதலில் பார்ப்பேன். அவ்வளவு சரியாக, அழகாக கருத்துச் சொல்லி ஊக்குவிப்பவர் இவர்-

                                           செய்தாலி அண்ணா! (செய்தாலி)

இந்த ஐந்து பேரும் அன்போடு நான் தரும் விருதை ஏற்றுக் கொண்டு என்னைப் பெருமைப்படுத்தும்படி வேண்டிக்கறேன். எனக்கு விருது கொடுத்த என்னுயிர்த் தோழி விஜிக்கு ‘நன்றி’ன்னு சொன்னா... ரொம்பவே சம்பிரதாயமாக இருக்கும். நேர்ல இருந்தால் என் செய்கைகளினால அன்பைத் தெரிவித்திருப்பேன். தூரத்தில் இருப்பதால்... வேறு வழியில்லாமல்... My Heartful Thanks to VIJIMMA.

இதனை ஏற்று கொண்டவர்கள் பின்வரும் விதிமுறைகளை பின்பற்றவும்.
  1. விருதை வழங்குபவருக்கு நன்றி சொல்ல வேண்டும் 
  2. விருதை பெற்று கொண்டதன் அடையாளமாக அதன் சின்னத்தை உங்கள் பிளாக்கில்  பொறித்து கொள்ளலாம்
  3. உங்களுக்கு பிடித்த 5 பிளாகர்களுக்கு இந்த விருதை வழங்கலாம்
 எனக்கு விருது கொடுத்த விஜிக்காக நான் கேட்ட கதை ஒன்றை இங்கே டெடிகேட் செய்கிறேன்.

ரு தமிழன் துபாய் சென்றிருந்தபோது அங்கே நடக்கவிருந்த ஒட்டக ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்ள பெயர் கொடுத்திருந்தான். அதற்காக ஒரு ஒட்டகத்தை வாடகைக்கு எடுக்க விரும்பினான். ஒட்டகத்தின் உரிமையாளர் சொன்ன தொகை மிக அதிகமாக இருந்ததால், ‘‘ஏன்ப்பா இவ்வளவு அநியாயமாக் கேக்கறே?’’ என்று கேட்டான். அதற்கு ஒட்டக உரிமையாளன், ‘‘‌என் ஒட்டகம் சாதாரணமானதில்லைங்க. மத்தவங்கல்லாம் ஒட்டகத்தை அடிச்சு ஓட்டுவாங்க. என் ஒட்டகத்தை நீங்க அடிச்சு ஓட்ட வேண்டாம். அது காதுகிட்ட குனிஞ்சு ‘அப்பாடா’ன்னு ஒரு வார்த்தை சொன்னா வேகமா ஓடும். இந்த வார்த்தையை சொல்லச் சொல்ல ஓட்டத்தோட வேகம் அதிகமாகும். அதே மாதிரி அதோட காதுல ‘கடவுளே’ன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டா ஓட்டத்தை நிறுத்திடும்’’ என்றான்.

தமிழன் மகிழ்ந்து போய் அவன் கேட்ட பணத்தைக் கொடுத்து விட்டு, ஒட்டகத்தை எடுத்துச் சென்றான். பந்தயம் துவங்கியதும் அதன் காதில் ‘அப்பாடா’ என்றான். வேகமாக ஓடியது. அதையே மீண்டும் மீண்டும் சொல்ல, வேகத்தின் அளவு கூடிக் கொண்‌டே போனது. அந்த சுவாரஸ்யத்தில் பந்தயப் பாதையை விட்டு ஒட்டகம் விலகி விட்டதை சற்று தாமதமாகத்தான் கவனித்தான். அதேசமயம் ஒட்டகம் ஒரு பெரிய மணல் மேட்டின் உச்சியை நோக்கி ஓடிக் கொண்டிருப்பதையும் கவனித்தான். பதட்டத்தில் அவனுக்கு நிறுத்தும் வார்த்தை மறந்து‌ போய்விட, அ‌தன் லகானைப் பிடித்து இழுத்து நிறுத்த முயன்றான். முடியவில்லை. என்னென்னவோ சொல்லி கத்திப் பார்ததான். நிற்கவில்லை அது.

இன்னும் நாலடியில் ஒட்டகம் கீழே விழுந்து விடும் நிலை. தன்னை மறந்தவனாய், ‘‘கடவுளே! நான் செத்தேன்!’’ என்றான். அடுத்த கணம்... கால்களை மணலில் ஊன்றி தேய்த்துக் கொண்டு ஒட்டகம் ஓட்டத்தை நிறுத்தி விட்டது. சரியாக சரிவுக்கு ஓரங்குலம் முன்னால் நின்றிருந்தது. கீழே விழுந்திருந்தால் தானும், ஒட்டகமும் இறந்திருப்போம் என்பதை உணர்ந்ததும், அவன் தன்னை மறந்து பெருமூச்சு விட்டு, ‘‘அப்பாடா! தப்பிச்சேன்’’ என்றான்.
மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "தோழி தந்த விருது!"
 

கலை அக்கா தந்த பரிசுகள்!

கலை அக்கா தந்த பரிசுகள்!

என் தோழி விஜி தந்த விருது!

என் தோழி விஜி தந்த விருது!