ஹாய்... ஒரு பழைய்ய புத்தகத்துலருந்து ‘சுட்ட’ கேள்வியை நான் இங்க குடுத்திருக்கேன். ரொம்ப ஸிம்பிளான இந்தக் கேள்விக்கு விடை கண்டுபிடிக்கணும் நீங்க. யோசிச்சுக கண்டுபிடிச்சுட்டா, எனக்குச் சொல்லுங்க. சாக்லெட் தர்றேன்.
இப்ப... கணக்குப் போடற வரைக்கும் உங்களுக்கு போரடிக்காம இருக்க ஒரு கதை சொல்லப் போறேன்.
ஒரு வியாபாரி தன்னோட வீட்ல ஒரு கழுதையையும், நாயையும் வளர்த்துட்டிருந்தான். நாய் கழுதையோட நட்பா பழகிட்டிருந்தது. ஆனா விஸ்வாசத்தைக் காட்டி நல்ல பேர் வாங்கறதுக்காக கழுதை பேசறதை முதலாளி கிட்ட போட்டக் கொடுத்துடும். இந்த விஷயம் தெரியாம கழுதை நாயை நம்பிட்டிருந்தது.
அந்த வியாபாரி எப்ப வியாபாரத்துக்காகப் போனாலும் கழுதை மேல தன் சுமைகளை ஏத்திக்கிட்டுப் போவான். ஒவ்வொரு முறை சுமை அதிகமாக சுமத்தப்படும் போதும் கழுதை கனம் தாங்காமல் முனகல் குரல் எழுப்பும். வியாபாரியும் அதன் மேல பரிதாபப் படற மாதிரி நடிச்சு, அதோட சுமையிலருந்து கொஞ்சத்தைக் குறைப்பான். அப்பாவிக் கழுதையும் தனக்காக சுமையக் குறைச்சிருக்கானேன்னு கஷ்டப்பட்டு பாரத்தைச் சுமந்துக்கிட்டு நடை போடும்.
அந்தக் கழுதை தனக்கு இருந்த ஒரு மனக்குறைய தன் தோழன் (என்று நம்பி) நாயிடம் சொன்னது. ‘‘இந்த முதலாளி என்னைக் கடுமையா வேலை வாங்கறான். ஆனா எனக்குச் சரியான சாப்பாடு தர்றதில்லை. ஆறிப் போன சோறும், அழுக்கான தண்ணியும் தான் தர்றான். அதை நினைச்சாத்தான் கடுப்பா வருது’’ அப்படின்னு கழுதை சொன்னதும், ‘‘அடப்பாவமே!’’ன்னு அதுக்கு ஆதரவாப் பேசின நாய், வழக்கம் போல முதலாளிகிட்ட போட்டுக் குடுத்துடுச்சு.
கதறிய கழுதை!
ஒரு வியாபாரி தன்னோட வீட்ல ஒரு கழுதையையும், நாயையும் வளர்த்துட்டிருந்தான். நாய் கழுதையோட நட்பா பழகிட்டிருந்தது. ஆனா விஸ்வாசத்தைக் காட்டி நல்ல பேர் வாங்கறதுக்காக கழுதை பேசறதை முதலாளி கிட்ட போட்டக் கொடுத்துடும். இந்த விஷயம் தெரியாம கழுதை நாயை நம்பிட்டிருந்தது.
அந்த வியாபாரி எப்ப வியாபாரத்துக்காகப் போனாலும் கழுதை மேல தன் சுமைகளை ஏத்திக்கிட்டுப் போவான். ஒவ்வொரு முறை சுமை அதிகமாக சுமத்தப்படும் போதும் கழுதை கனம் தாங்காமல் முனகல் குரல் எழுப்பும். வியாபாரியும் அதன் மேல பரிதாபப் படற மாதிரி நடிச்சு, அதோட சுமையிலருந்து கொஞ்சத்தைக் குறைப்பான். அப்பாவிக் கழுதையும் தனக்காக சுமையக் குறைச்சிருக்கானேன்னு கஷ்டப்பட்டு பாரத்தைச் சுமந்துக்கிட்டு நடை போடும்.
அந்தக் கழுதை தனக்கு இருந்த ஒரு மனக்குறைய தன் தோழன் (என்று நம்பி) நாயிடம் சொன்னது. ‘‘இந்த முதலாளி என்னைக் கடுமையா வேலை வாங்கறான். ஆனா எனக்குச் சரியான சாப்பாடு தர்றதில்லை. ஆறிப் போன சோறும், அழுக்கான தண்ணியும் தான் தர்றான். அதை நினைச்சாத்தான் கடுப்பா வருது’’ அப்படின்னு கழுதை சொன்னதும், ‘‘அடப்பாவமே!’’ன்னு அதுக்கு ஆதரவாப் பேசின நாய், வழக்கம் போல முதலாளிகிட்ட போட்டுக் குடுத்துடுச்சு.
அந்த மனுஷன் பாத்தான். ஒரு ஐடியா பண்ணினான். அடுத்த நாள் கழுதையக் கட்டிப் போட்டுட்டு, அதனோட மூக்குக் கிட்ட சாப்பாட்டையும், தண்ணியையும் காட்டிட்டு வீட்டுக்குக் கொண்டு போயிட்டான். அதுவும் கயிறு அனுமதிக்கற தூரம் வரை ஓடி வந்து ஏமாந்துடுச்சு. இப்படியே அதை சாப்பாடு, தண்ணி தராம அஞ்சாறு நாள் பட்டினி போட்டான். காஞ்சு போய்க் கிடந்த கழுதையோட மனசுல, ‘‘அது கிடைச்சாலே போதுமே, அதுக்காக கஷ்டப்பட்டாலும் பொறுத்துக்கலாமே... இப்படிக் கிடைக்காம கஷ்டப்படறது கொடுமையால்ல இருக்கு?’’ன்னு நினைப்பு ஓடிச்சாம்.
அதுக்கப்புறமா ஒருநாள் வந்து கழுதையோட கட்டை அவுத்துவிட்டுட்டு, அதுக்கு எதிரா ஆறின சோறையும், அழுக்குத் தண்ணியையும் வெச்சான். காஞ்சு போயிருந்த கழுதை மடமடன்னு சாப்பிட்டுட்டு, தண்ணியைக் குடிச்சிடுச்சு. முதலாளியைப் பார்த்து அது கண்ணீர் விட்டு, ‘‘ஐயா... நான் இனிமே எதுவும் கேக்க மாட்டேன். இந்த பழைய சோறும், அழுக்குத் தண்ணியும் எனக்குக் கிடைச்சாலே போதும்...’’ன்னு கதறி அழுதுச்சாம். தன்னோட தந்திரம் பலிச்சுப் போச்சேன்ற சந்தோஷத்துல நாயைக் கூட்டிட்டு வீட்டுக்குள்ள போனானாம் மனுஷன்.
-என்ன, சின்னப் பசங்களுக்கு சொல்ற ‘பஞ்சதந்திரக் கதை’ மாதிரி இருக்கேன்னு நினைக்கறீங்களா? ரெண்டு நாளா பஸ்(நெரிசல்)லதான் போய் வந்துட்டிருக்கேன். பஸ் பிரயாணத்தின் போது இந்தக் கதை மனசுல தோணிச்சு. உங்ககிட்ட ஷேர் பண்ணிக்கிட்டேன். மத்தபடி மனசுல வேற எதையும் நினைச்சுக்கிட்டு இந்தக் கதைய நான் சொல்லலைப்பா..!
அதுக்கப்புறமா ஒருநாள் வந்து கழுதையோட கட்டை அவுத்துவிட்டுட்டு, அதுக்கு எதிரா ஆறின சோறையும், அழுக்குத் தண்ணியையும் வெச்சான். காஞ்சு போயிருந்த கழுதை மடமடன்னு சாப்பிட்டுட்டு, தண்ணியைக் குடிச்சிடுச்சு. முதலாளியைப் பார்த்து அது கண்ணீர் விட்டு, ‘‘ஐயா... நான் இனிமே எதுவும் கேக்க மாட்டேன். இந்த பழைய சோறும், அழுக்குத் தண்ணியும் எனக்குக் கிடைச்சாலே போதும்...’’ன்னு கதறி அழுதுச்சாம். தன்னோட தந்திரம் பலிச்சுப் போச்சேன்ற சந்தோஷத்துல நாயைக் கூட்டிட்டு வீட்டுக்குள்ள போனானாம் மனுஷன்.
-என்ன, சின்னப் பசங்களுக்கு சொல்ற ‘பஞ்சதந்திரக் கதை’ மாதிரி இருக்கேன்னு நினைக்கறீங்களா? ரெண்டு நாளா பஸ்(நெரிசல்)லதான் போய் வந்துட்டிருக்கேன். பஸ் பிரயாணத்தின் போது இந்தக் கதை மனசுல தோணிச்சு. உங்ககிட்ட ஷேர் பண்ணிக்கிட்டேன். மத்தபடி மனசுல வேற எதையும் நினைச்சுக்கிட்டு இந்தக் கதைய நான் சொல்லலைப்பா..!
இப்ப, அந்தக் கணக்கைச் சரியாப் போட வராதவங்களுக்காக இங்க விடையைத் தர்றேன்: