Pages

Ads 468x60px

14 April 2012

IPL கிரிக்கெட்டும்... மைலாப்பூர் தேரும்!

ஹாய் எவ்ரிபடி! எக்ஸாம்ஸ்லாம் முடியற வரைக்கும் நெட் பக்கம் போனா முழியை நோண்டிடுவேன்னு மம்மி 144 போட்டிருந்தாங்க. நிரூவை (அழகான) கண் இல்லாம பாக்கச் சகிக்காதுங்கறதால ஒரு சின்ன அஞ்ஞாத வாசம். இப்போ மறுபடி வந்தாச்சு. நிரூவுக்கு இனி இல்லை இடைவேளை..!

* * * * * * * * * * * * * * * * * * * * * * * *
 
மீபத்துல மயிலாப்பூர் கோயில்ல தேரோட்டமும், அறுபத்து மூவர் உற்சவமும் நடந்தது. போயிருந்தேன். கடைத் தெரு முழுக்க பதுசு புதுசாக் கடைகள் முளைச்சிருந்துச்சு. சின்னப் பசங்களுக்கு பலூன்களும், ஊதல்களும் விக்கிற கடைங்களும், ஐஸ்கிரீம், பானி பூரி ‌மாதிரி ஸ்நாக்ஸ் கடைங்களுமா பாக்க சந்தோஷமா இருந்தது. ஏராளமான கூட்டத்துக்கு நடுவுல நடமாடறதுல ஒரு த்ரில் வேற.

அங்க நிறைய பெரிய பெரிய நிறுவனங்கள் இலவசமா நீர் மோர்ப் பந்தலும், அன்னதானப் பந்தல்களும் வெச்சிருந்தாங்க. நம்ம ஜனங்க அங்கங்க போய் வெண் பொங்கலும், ‌புளியோதரையும் அவங்க தர்ற பேப்பர் ப்ளேட்ல வாங்கிச் சாப்பிட்டுட்டு, பிளேட்டுகளை ரோட்டுலயே போட்டுட்டுப் போயிட்டிருந்தாங்க. நீர்மோர் குடிச்ச டிஸ்போஸபிள் டம்ளர்கள் வேற ரோடு முழுக்க இறைஞ்சு கிடந்துச்சு. நடக்கறவங்க அதையெல்லாம் மிதிச்சுட்டுப் போறதைப் பார்த்ததும் எனக்கு அருவருப்பா இருந்துச்சு.

குப்பைகளை எல்லாம் ரோட்டு ஓரத்துல இருக்கற குப்பைத் தொட்டிகள்லதான் எறியணும்கற பேஸிக் மேனர்ஸ் கூட இல்லாம இந்த ஜனங்கல்லாம் இருக்காங்களேன்னு கோபமா இருந்துச்சு எனக்கு. ஆனா கண்ணை நல்லாத் திறந்து சுத்துப் பக்கத்தைப் பார்த்ததும்தான் ஒரு விஷயம் புரிஞ்சுது. ஜனங்களை மட்டும் குறை சொல்லிப் பிரயோஜனமில்லை. ஏன்னா... குப்பைத் தொட்டிகள் எதுவும் அங்க வைக்கப்படலை. தெப்பக்குள ரோடு திருப்பத்துல இருந்த ஒரே ஒரு குப்பைத் தொட்டிதான் கண்ணுல பட்டுச்சு. பாவம்... ஜனங்கதான் என்ன செய்வாங்க?ன்னு தோணிச்சு.

எவ்வளவோ செலவு பண்ணி (விளம்பரத்துக்காக) அன்னதானப் பந்தலும், நீர்மோர்ப் பந்தலும் வெக்கிற கம்பெனிங்க, அதுக்குப் பக்கத்துலயே ஒரு குப்பைத் தொட்டியையும் வைக்கணும்கறது என்னோட யோசனை! (ஆமா... இவ சொன்னா அடுத்த நிமிஷம் கேட்டு செயல்படுத்திட்டுத்தான் வேற வேலை பாக்கப் போறாங்களாக்கும்...!)

* * * * * * * * * * * * * * * * * * * * * * * *

மைலாப்பூர்லருந்து மாம்பலத்துக்கு டிரெய்ன்ல வந்துட்டிருந்தப்ப... சேப்பாக்கம் ஸ்டேஷனை ரயில் தாண்டினப்ப... கைப்பிடிச் சுவர்ல பல்லி மாதிரி சில இளைஞர்கள் ஒட்டிக்கிட்டு எதையோ எட்டிப் பாத்துட்டிருந்தாங்க. என்னத்தை அப்படிப் பாக்கறாங்கன்னு நான் ஜன்னல் வழியா எட்டிப் பாத்தப்ப... அவங்க ஆங்கிள்லருந்து சேப்பாக் கிரவுண்டில நடந்துட்டிருந்த கிரிக்கெட் மேட்ச் தெளிவாப் பாக்க முடிஞ்சுது. இந்த விளையாட்டு மேல என்ன அப்படி ஒரு கிரேஸ் ஜனங்களுக்குன்னு எப்பவும் எனக்கு வியப்புதான். இதைப் பத்தி சமீபத்துல படிச்ச ஒரு தகவல் வியக்க வெச்சது. நிறையப் பேருக்குத் தெரிஞ்சிருக்குமோ என்னமோ... எனக்கு இது புதுசு.

ந்திய கிரிக்கெட் அணியில ‘ஏ’ பிரிவில இருக்கிற வீரர்களுக்கு வருஷத்துக்கு ஒரு கோடி ரூபாயும், ‘பி’ பிரிவு வீரர்களுக்கு 50 லட்ச ரூபாயும், ‘சி’ பிரிவில் உள்ளவர்களுக்கு 25 லட்ச ரூபாயும் சம்பளமாம். (விளையாடினாலும், விளையாடா விட்டாலும்). இதைத் தவிர டெஸ்ட் போட்டிக்கு, ஒருநாள் போட்டிக்கு 20-20 ஓவர் போட்டிக்குன்னு கணிசமா ஒரு பெரிய தொகை தரப்படுகிறதாம். மத்த நாட்டு வீரர்களுக்கு அவங்க நாட்ல கொடுக்கப்படற தொகையோட ஒப்பிடும் போது இது மிகமிக அதிகமான தொகைன்னு சொல்லப்படுகிறது. பணம் கொழிக்கும் நாடுகளான நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ‌ஆகியவைகூட தங்கள் வீரர்களுக்கு இவ்வளவு பணம் தர்றதில்லையாம்.

இந்த வருமானம் தவிர இப்ப நடந்துக்கிட்டிருக்கிற ஐ.பி.எல். ‌போட்டிகள் கிரிக்கெட்டிற்கு தங்கச் சுரங்கம் போல. சென்ற வருடம் கிரிக்கெட் வாரியத்தின் வருமானமான 1670 கோடியில 970 கோடி ஐ.பி.எல். மூலமா மட்டுமே கிடைச்சிருக்காம். ஐ.பி.எல். போட்டி நடந்தபோது டி.வி.யில 10 விநாடி விளம்பரம் செய்ய ஒரு லட்சத்திலிருந்து இரண்டு லட்சம் வரை கட்டணம் வசூலிககப்பட்டது. ஐ.பி.எல். போட்டியை நேரடி ஒளிபரப்பு செய்யும் உரிமையைப் பெற்ற செட்-மேக்ஸ் நிறுவனம் அதன் மூலம் 900 கோடி ரூபாய் லாபம் அடைஞ்சிருக்குன்றது போனஸ் ஆச்சர்யத் தகவல்!

இப்படி கிரிக்கெட் மிகப் பெரிய வியாபாரமா இன்னிக்கு இருக்கு. கவாஸ்கர், கபில்தேவ் கால வீரர்கள் இவ்வளவு விளம்பரங்கள்ல நடிக்கிற வாய்ப்பும், இவ்வளவு பணமழை கொட்டவும் வாய்ப்பில்லாமலேயே இருந்துட்டுப் ‌போயிட்டாங்க. அப்ப விளையாட்டுல ஜெயிக்கணும்கற வெறி இருந்துச்சு. இப்ப ஜெயிச்சாலும், தோத்தாலும் வீரர்களுக்குப் பணம் கொட்டறதுங்கறப்ப ஜெயிக்கிற வெறி எப்படி வரும்? 'Be sportive' என்று எல்லாத்தையும் 'Take it Easy' யாவே எடுத்துக்கறாங்க.

என்னை உறுத்துற ஒரு கேள்வி என்னன்னா... ஏன் ஜனங்க இந்த விளையாட்டுக்கு மட்டும் இவ்வளவு Importance கொடுத்துப் பாக்கறாங்க? மத்த விளையாட்டுக்களை ஏன் இந்த அளவுக்கு ஊக்கப்படுத்தறதில்லைங்கறதுதான்!

* * * * * * * * * * * * * * * * * * * * * * * *

நிரூ இந்தத் தடவை ரொம்ப சீரியஸாப் பேசியிருக்காளோன்னு தோணுது, இல்ல..? அடுத்த தடவை ரிலாக்ஸான மேட்டர்களோட சந்திக்கிறேன். ஸீ யு!

பேஸ்புக் வழியாகவும் கருத்திட வாங்க

52 comments:

  1. கிரிக்கெட்டும் ஒரு போதைப் பொருள் மாதிரி நிறையப் பேருக்கு பழகிக் போய்டுச்சுங்க. அதை அவ்வளவு சீககிரம் எழுதில்லாம் மாத்திட முடியாது.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அங்கிள்! எனக்கும் தெரியும். இருந்தாலும் அந்த விளையாட்டுல அப்படி என்னதான் சொக்குப்பொடி இருக்குன்னு ஒரு ஆச்சரியம்! அவ்வளவுதான்! Many Thanks to you!

      Delete
  2. பல்சுவைகளும் கலந்து பதிவிட்டிருப்பது அருமை சகோ நிரஞ்சனா

    ReplyDelete
    Replies
    1. ஸாதிக்காக்காவோட வருகையே ஒரு ஸ்வீட். நல்லா இருக்குன்னு சொன்னது இன்னொரு ஸ்வீட் எனக்கு! ரெண்டு ஸ்வீட் தந்த My S.S. Many More Thanks to you!

      Delete
  3. //நிரூவை (அழகான) கண் இல்லாம பாக்கச் சகிக்காதுங்கறதால
    //

    கண் இருக்கும் போதே .. .......... ( சீ .. வாய வச்சுகிட்டு என்னால சும்மா இருக்க முடில.. மா )

    ReplyDelete
    Replies
    1. ஹா... ஹா... நல்லாச் சொன்னீங்க பிரதர்! நிரூவுக்கு தன் கண்கள் அழகானவைதானே. காக்கைக்கும்... வருகைக்கும் கருத்து்க்கும் என்னோட Heartful Thanks to you!

      Delete
  4. //ஏன் ஜனங்க இந்த விளையாட்டுக்கு மட்டும் இவ்வளவு Importance கொடுத்துப் பாக்கறாங்க? மத்த விளையாட்டுக்களை ஏன் இந்த அளவுக்கு ஊக்கப்படுத்தறதில்லைங்கறதுதான்!
    //
    எனக்கும் அதே சந்தேகம் தான் ..

    ReplyDelete
    Replies
    1. என் கருத்தை ஆமோதிச்சுப் பாராட்டின உங்களுக்கு என் நன்றி!

      Delete
  5. பல்சுவை பகிர்வா ரசிக்கும்படிதான் சொல்லி இருக்கீங்க.

    ReplyDelete
    Replies
    1. நான் எழுதினதையும் ரசிக்கும்படி இருக்குன்னு பாராட்டின உங்களுக்கு My Heartful Thanks Aunty!

      Delete
  6. கவாஸ்கர் காலத்துலயும் விளம்பரங்கள் இருந்தன.... தினேஷ் சூட்டிங்க்ஸ் போல...ஆனால் இவ்வளவு பணம் இருக்காது! அவர்களுக்கு கிரிக்கெட் ஆடி ஜெயிக்க வேண்டும் என்ற வெறியும் இல்லை! ஒன் டே மாட்சை டிரா செய்யப் பார்த்தவர் அவர்!!!

    ஐ பி எல் பற்றி இன்னொருக் கூடுதல் தகவல்....ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு மாதிரி டிக்கெட் விலை நிர்ணயம் செய்திருக்கிறார்கள். அதில் குறிப்பாகச் சென்னையில்தான் மிக அதிக டிக்கெட் விலை! என்ன ஓரவஞ்சனை? கேட்பாருமில்லை. பார்க்காமல் இருப்போருமில்லை!

    ReplyDelete
    Replies
    1. கவாஸ்கர் ஆடின பழைய மாட்ச்ல ஒண்ணு ரெண்டைதான் டிவில... அதுவும் ‌கொஞ்சம்தான் பாத்திருக்கேன் ஸ்ரீராம் ஸார். அவர் பீக்ல இருந்தப்ப நான் பொறக்கவே இல்லையே... அவர், கபில் எல்லாம் பெரிய கிரிக்கெட்டர்ஸ்ன்னு கணேஷ் அங்கிள்தான் சொன்னார். (நல்லா மாட்டி விட்டுட்டார் போலருக்கு) சென்னையிலதான் IPL டிக்கெட் விலை அதிகமா? இது எனக்கு புதுத் தகவல்! அறியத் தந்ததற்கும், கருத்துச் சொன்னதற்கும், Many more Thanks to you Sir!

      Delete
  7. மத்த விளையாட்டுக்களை ஏன் இந்த அளவுக்கு ஊக்கப்படுத்தறதில்லைங்கறதுதான்/

    மற்ற விளையாட்டுக்களையும் ஊக்கப்படுத்தினால் சாதனை புரியலாம்..

    பல்சுவைப்பகிர்வுகள் ரசிக்கவைத்தன்,, பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் பாராட்டி, எனக்கு மகிழ்வும் தெம்பும் அளித்த உங்களுக்கு... My Heartful Thanks Sister!

      Delete
  8. அருமையாக எழுதுகிறீர்கள் நிரூ. சகோ. கணேஷ் தளத்திலிருந்து லிங்க் பெற்று உங்கள் தளத்துக்கு வந்தேன். அட...பரவாயில்லையே அப்படின்னு ஆச்சர்யப்படற அளவுக்கு எழுதுறீங்க. தொடர்ந்து கலக்குங்க. அண்ணாச்சி பேரைக் காப்பாத்துங்க. நம்ம கணேஷ் சாரைத்தான் சொன்னேன். தள வடிவமைப்பு அருமை. இதுவும் அவரோட கைவண்ணம்தான்னு பார்த்தாலே தெரியுது. தொடர்ந்து சந்திப்போம் நிரூ.

    ReplyDelete
    Replies
    1. என் கண்ல படறதை, நான் ரசிக்கறதை எல்லாம் ‌Share பண்ணிக்கலாம்னு வந்தேன். நீங்க சொல்றது மாதிரி நல்லவிதமா நிறைய எழுத Try பண்றேன் ஸார். உங்களோட Guessing ரொம்ப கரெக்ட். தளம் வடிவமைப்பு அவரோடதுதான். புதுவரவான என்னை Encourage பண்ணின உங்களுக்கு My Heartful Thanks!

      Delete
  9. வணக்கம் தங்கை நிரஞ்சனா,
    நண்பர் கணேஷ் அவர்களின் தளம் மூலம் வருகிறேன்..
    அட.. நல்லா சுவாரஸ்யமா எழுதுறீங்க...
    தொடர்ந்து வருகிறேன்..
    தேர்வு முடிவுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற வாழ்த்துக்கள்..

    ஆமா.. நண்பர் கணேசை ரொம்ப கலாய்க்கிறீங்கலாமே.. ..
    அப்படியா.. உங்க எழுத்துக்களை பார்த்தா அப்படி தெரியலியே..
    சமத்தா இல்ல தெரியுது..

    பதிவுலகில் மிளிர்ந்திட என் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் கவிஞர் அண்ணா... தேர்வுகளி்ல் நல்ல மதிப்பெண் பெற என்னை வாழ்த்திய உங்கள் வெள்ளை உள்ளத்திற்கு ஒரு பொக்கே... பிடியுங்க! அவரைக் கலாய்க்கிறதெல்லாம் சும்மா உரிமையில. மத்தபடி நான் சாது தாங்க. வருகை தந்து வாழ்த்திய உங்களுக்கு... Many More Thanks!

      Delete
  10. வணக்கம் நிரஞ்சனா அக்கா நீங்கள் என் தளத்துக்கு வந்ததால்தான் உங்கள் தளத்துக்கு வந்தேன் என எண்ண வேண்டாம் ஏற்கனவே உங்கள் தளத்தில் நான் இணைந்து விட்டேன்.எனக்கு கிரிகட் பத்தி ஒரு மண்ணும் தெரியாது பட் நான் ஓர் கூடை பந்தாட்டகாரி

    ReplyDelete
    Replies
    1. எஸ்தர்! நான்லாம் ஸ்போர்ட்ஸை வேடிக்கை பாக்கற ஆளு. நீங்க கூடைப் பந்தாட்டமாவது ஆடியிருக்கீங்களே... வெல்டன்! நீங்க என் தளத்துல இணைஞ்சதை கவனிச்சேன். பொதுவா எனக்குப் பிடிச்ச தளங்களுக்கு நான் அவசியம் போவேன்- அவங்க வந்தாலும் வராட்டாலும். அதான் நல்ல பழக்கம் இல்லையா..? வருகை தந்து என்னை Encourage பண்ணின உங்களுக்கு My Heartful Thanks Sister!

      Delete
  11. நண்பர் கணேஷ் அவர்கள் பதிவைப்பார்த்து, உங்கள் பதிவுக்கு வந்திருக்கிறேன்.இயல்பான நடையுடன் இருக்கிறது உங்கள்பதிவு. வாழ்த்துக்கள்!

    அன்னதானப் பந்தல் அருகே குப்பைத்தொட்டி வைக்கவேண்டும் என்ற உங்கள் யோசனை ஏற்றுக்கொள்ளக்கூடியதே.
    கிரிக்கெட்டுக்கு நாம் மக்கள் அதிகமாகவே முக்கியத்துவம் தருகிறார்கள் என்ற உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. காதைக் கிட்ட கொண்டாங்க ஸார்... ஒரு ரகசியம் சொல்றேன்! தமிழ் Sentence சரியா அமைக்க வராது எனக்கு. எப்படி அமைக்கணும்னு க்ளாஸ் எடுத்து முதல் மூணு பதிவுக்கும் Spelling Mistake கரெக்ட் பண்ணதே அவர்தான். இந்த பதிவுதான் அவர் Guidance இல்லாம நானே எழுதிருக்கேன். இந்த ரகசியம் நமக்குள்ள இருக்கட்டும். சரியா..? என்னோட Thoughts எல்லாம் ஆமோதிக்கிற உங்களுக்கு என்னோட Very Very Special Thanks Sir!

      Delete
  12. என்ன கொடும சார் இது.... உண்மையிலேயே நல்லாத்தான் எழுதி இருக்கீங்க.....!

    ReplyDelete
    Replies
    1. Oh, What an Energy Tonic to me! என் எழுத்து நல்லாயிருக்குன்னு சொன்ன உங்களுக்கு.... ரொம்ப ரொம்ப சந்தோஷத்தோட Thanks தெரிவிச்சுக்கறேன் ஸார்!

      Delete
  13. hai niru...! En friends kooda eppa parthalum tv'la palaya cricket match parthitu iruppanga. Enaku erichala irukum. Live match kooda ok..! Edho indrustnu sollalam. Palaya match pakkuradhellam sutha vest. Intha IPL potti'lam enaaku pidikiradhe illai.. Matha nattu cricket players'kum namma players than captains. Avanga namma kitta niraya tricks kathukuvanga. Adhu namaku veeknes thane. Ana namma players panam panna than kathukuvanga...!

    ReplyDelete
    Replies
    1. hayyooo! இப்படி ஒரு பாயிண்ட் இருக்கா சரவணன் ஸார்? நம்ம ப்ளேயர்ஸ் கிட்டருந்து நல்ல நல்ல விஷயங்களை கேட்ச் பண்ணிக்க சான்ஸ் இருக்குதானே... எனக்கு கிரிக்கெட் மேல காதல் கிடையாதுங்கறதால எழுதினேனே தவிர, இப்படி ஒரு விஷயத்தை யோசிக்கவே இல்ல. நல்ல Point சொன்ன உங்களுக்கு Many More Thanks Friend!

      Delete
  14. கிரிக்கெட் காய்ச்சலா...ஸ்ரீராம் குறூப்புக்குப் பிடிச்சிருக்கு.கோவில் செய்தி....ஆனால் எழுத்து அருமை.கணேஸைக் கலைச்சுப் பிடியுங்க நிரஞ்சனா.அவருக்கு ரெண்டுபேருமாச் சேர்ந்து குட்டுவம் !

    ReplyDelete
    Replies
    1. ஹய்யய்‌யோ... என்ன இது ஃப்ரெண்ட்? நிரூவை நீங்க கனக்கக் குட்டுவீங்கன்னு பாத்தா... என்னைக் கலைச்சுப் பிடிக்கச் சொல்றீங்க. ஆஹா... ஒண்ணு சேர்ந்துட்டாங்கய்யா... ஒண்ணு சேர்ந்துட்டாங்கய்யா... மீ எஸ்கேப்!

      Delete
    2. எழுத்து அருமைன்னு நீங்க சொன்ன ஒரு வார்த்தையே எனக்கு Bottle of Vitamin Tablets சாப்பிட்ட மாதிரி இருக்கு. My Heartful Thanks ஹேமாக்கா! கணேஷ் அங்கி்ளைக் குட்ட என்னோட கை கோத்ததுல சந்தோஷம். அவரைக் குட்ட நீங்கதான் சரி. (அதுசரி... கனக்கக் குட்டறதுன்னா என்ன அங்கிள்?)

      Delete
    3. கனக்கக் குட்டுறதுன்னா....வேண்டிய அளவு வலிக்குதுன்னு சொல்ற வரைக்கும் நிறையக் குட்டுறது !

      Delete
  15. சகோதரி நிரஞ்சனா. அருமையான பதிவு. இரண்டாவது வாசிக்கும் போது ஐய்யோ இதுவும் பல தொகுப்பாக நீண்ட இடுகையாகுமோ என்று தயக்கத்தோடு வாசித்தேன். 2 விடயத்தோடு முடித்ததற்கு நன்றி. (மிக நீண்டால் எரிச்சலாக இருக்கும் வாசிக்க.) நல்ல விழிப்புணர்வு இடுகை வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொன்னதை நோட் பண்ணிக்கிறேன் வேதாக்கா. எதை எழுதினாலும் ஷார்ட்டா ஸ்வீட்டா எழுதிடறேன். சரிதானே... வந்து வாழ்த்திய உங்களுக்கு My Heartful Thanks!

      Delete
  16. ஏன்னா... குப்பைத் தொட்டிகள் எதுவும் அங்க வைக்கப்படலை. தெப்பக்குள ரோடு திருப்பத்துல இருந்த ஒரே ஒரு குப்பைத் தொட்டிதான் கண்ணுல பட்டுச்சு. பாவம்... ஜனங்கதான் என்ன செய்வாங்க?ன்னு தோணிச்சு.
    தொகுப்பது அருமையாக அமைகிறது தொடருங்கள் திரு .கணேஷ் அவர்களின் பதிவின் மூலம் வந்தேன் .

    ReplyDelete
    Replies
    1. தொகுப்பு அருமைன்னு பாராட்டின உங்களுக்கு என்னோட Heartful Thanks!

      Delete
  17. Replies
    1. சுவையான பதிவுன்னு பாராட்டன உங்களுக்கு என் பணிவான நன்றி.

      Delete
  18. நல்ல பகிர்வு நிரஞ்சனா! கிரிக்கெட் - இது இல்லாமல் இருக்கவே முடியாது என்கிற நிலை பலருக்கு - போதை போலவே!

    புளியோதரை-நீர்மோர் - சாப்பிட்டவுடன் அந்த டம்ளர்களையும் ப்ளேட்களையும் போட அட்லீஸ்ட் ஒவ்வொரு ஸ்டால் வாசலிலும் ஒரு பெரிய ட்ரம் ஸ்டால் போடுபவர்களே வைக்கலாம்.

    தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. என்னுடைய கருத்தை ஆதரிச்சுப் பாராட்டின உங்களுக்கு... My Heartful Thanks Sir!

      Delete
  19. நல்ல சிந்திக்க வைக்கும் செய்தி... நேக பகிர்ந்து கொண்ட முறை எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு..

    ReplyDelete
    Replies
    1. ஸவிதா... ரொம்பப் பிடிச்சிருக்குன்னு நீங்க சொன்னது எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்குங்க... Many More Thanks To You!

      Delete
  20. Your article is good and simply superb. But I do not understand why Ganeshji wants us to give you a 'kuttu' on your head. No I will not do it. It is a good article. Please keep it up. Ganeshji, please excuse me for appreciating niranajan madam.

    ReplyDelete
    Replies
    1. Mohan Sir, அவர் எழுதறதைவிட நான் நல்லா எழுதுவேன்னு சொன்னதுல ஒரு செல்லக் கோபம் அவருக்கு. அவர் சொன்னதைக் கண்டுக்காம என்னை, என் எழுத்தைப் பாராட்டின உங்களுக்கு என்னோட Heartful Thanks!

      Delete
  21. கிரிக்கெட்டை போதையாக மாற்றிய பெருமை இந்தியா கிரிக்கெட் வாரியத்துக்கு உண்டு. இப்போதும் நான் கிரிக்கெட்டின் ரசிகன், இந்த மாதிரியான கிரிக்கெட்டுக்கு அல்ல. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. கரெக்ட் பாலா ஸார்... கிரிக்கெட்டுக்கு ரசிகனா இருக்கலாம். வெறியா இருக்கறது தப்புன்னுதான் நான் சொல்ல வந்தேன். பல்லி மாதிரி சுவர்ல ஒட்டிக்கிட்டு தலைய நீட்டி எம்பிப் பாத்துட்டிருந்தாங்க. கை ஸ்லிப்பாகி ட்ரெய்ன் வரும்போது விழுந்துட்டா...ன்னு நினைக்கறப்பவே மனசு பதறிச்சு. உயிரை விடவா அந்த விளையாட்டு பெரிசு? அதும் டிவில க்ளோஸ்அப்லயும் வேற வேற ஆங்கிள்லயும் பாக்கற வசதி இருக்கற இக்காலத்துல... You Can Understand my Feelings Friend! My Heartful Thanks to You!

      Delete
  22. தங்களுக்கு நேரம் கிடைத்தால் இதையும் கொஞ்சம் பார்க்கலாமே

    மக்கள் உரிமை மையம் என்ற நமது இயக்கம் மக்களுக்காக, மக்களின் அடிப்படை உரிமைகளைக் காப்பதற்காக தோற்றுவிக்கப்பட்ட ஓர் இயக்கம். உணவு, உடை, உறைவிடம், கல்வி மற்றும் மருத்துவம் இவைகளே ஒரு மனிதனின் வாழ்வாதாரமாக, அடிப்படை உரிமைகளாக இன்று அனைத்து உலக நாடுகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

    மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் இத்தகைய அடிப்படை உரிமைகள் இன்று அனைத்து தரப்பு மக்களுக்கும், அவர்கள் எந்த சாதி, மத, இன,மொழியினை சார்ந்தவர்களாயினும் மறுக்கப்படுகின்றது. மேலும் மக்களுக்கான அடிப்படை உரிமைகள் அனைத்தும் இன்று வர்த்தகமாக மாறி விட்ட சூழலில் அவை தரம் குன்றிய நிலையிலோ அல்லது பொருள் படைத்தவர்களுக்கு மட்டும் என்ற நிலையிலோ தான் அவர்களை சென்றடைகிறது.

    கலப்படம் மிகுந்த உணவுப்பொருட்கள், சுகாதரமற்ற சுற்றுப்புறம், எதிர்கால வாழ்விற்கு உதவாத கல்விமுறை, புதிய நோய்களை உருவாக்கும் மருத்துவமுறை இவைகளாலும், இது தொடர்பான துறைகளில் ஈடுபட்டுப் பொருளீட்டுவதையே குறிக்கோளாகக் கொண்ட சுயநல கூட்டங்களாலும் மக்கள் இன்று பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

    பல்வேறு வழிகளிலும், தங்களுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இத்தகைய சுயநலவாதிகளை எதிர்த்துப் போராட இயலாத வாழ்க்கைச் சூழ்நிலைகளிலும், போராட வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லாத நிலையிலும் தான் இன்று நம் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

    மக்கள் தங்களுக்கு இருக்கும் அடிப்படை உரிமைகளைப் பற்றியும், அவற்றை தரமான வகையிலே பெறுவதற்கு வழிவகை செய்யும் சட்டங்கள் பற்றியும், அவற்றில் குறைகள் இருப்பின் அக்குறைகளைக் களைவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் பற்றியும் அறியாமலிருப்பதே இந்நிலை தொடர்ந்து கொண்டிருப்பதற்கான காரணங்களாகும்.

    மக்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும், அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்து தர வேண்டிய கடமையை மேற்கொண்டிருக்கும் அரசு நிர்வாகமும், ஆட்சி நிர்வாகமும் இந்த அவல நிலையை மாற்றுவதற்குப் பதிலாக, தம்மை மக்களின் எசமானர்களாகக் கருதிக்கொண்டு, அவர்கள் மீது தம்முடைய அதிகார பலத்தைப் பிரயோகப்படுத்துவதும், எங்கும் விதிமீறல் எதிலும் லஞ்சம் என மக்களைப் பெரும் துன்பத்திற்கு ஆளாக்குகின்றனர்.

    இவ்வாறாக பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு, தங்களின் நிலையினைப் பற்றியும், தம் நாட்டின் நிலையினைப் பற்றியும் விளக்க வேண்டிய, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய செய்தித்துறையும், ஊடகத்துறையும் செயலிழந்த நிலையில் உள்ளன.

    ஒவ்வொரு நாளும் நடக்கும் நிகழ்வுகளை, ஒரு செய்தியாக தருவதோடு செய்தித்துறை தன்னுடைய வேலையை நிறுத்திக் கொள்கின்றது. மேலும் தனிநபருக்கோ, ஒரு அமைப்பிற்கோ அல்லது ஒரு அரசியல் கட்சித் தலைமைக்கோ ஆதரவாக செய்திகளை வெளியிட்டு, நிகழ்வுகளின் உண்மைத் தன்மையை சீர்குலைத்து ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கின்றது.

    இது போன்றே திரைத்துறையும், நல்ல பல முற்போக்கு கருத்துகளையும்,நம் முன்னோர்களின் நாகரிகம் மிகுந்த, பண்பு மிகுந்த வாழ்க்கை முறைகளையும் நம் கண் முன்னே காட்சிகளாக கொடுத்துக் கொண்டிருந்த தன் உயர்ந்த நிலையினின்று மாறி, இன்று வெறும் காதல், வன்முறை, ஆபாசம் மற்றும் அர்த்தமற்ற நகைச்சுவை என இவற்றை மட்டும் கொண்டு, நம் இளைஞர் சமுதாயத்தை நல்ல சிந்தனைகளிலிருந்தும், நற் செயல்களிலிருந்தும் விலக்கி அவர்களுக்கு ஒரு தவறான பாதையைக் காட்டி கெடுத்துக் கொண்டிருக்கின்றது.

    சீரழிவான நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நம் நாட்டைச் சீர்படுத்தவும், பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டிருக்கும் நம் நாட்டு மக்களைப் பாதுகாக்கவும், அவர்களை அந்நிலையிலிருந்து மீட்டெடுக்கவும், அவர்களுக்குப் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நாம் அனைவரும் சாதி, மத, இன, மொழி என எந்த விதமான பாகுபாடுகளுமின்றி ஓரணியில் திரண்டு, பாதிக்கப்பட்டவர்க்குத் தகுந்த நியாயம் கிடைக்கவும், பாதிப்பை ஏற்படுத்தும் கயவர்களுக்குத் தகுந்த தண்டனை கிடைக்கவும் சட்டத்தை துணையாகக் கொண்டு, நியாயமான வழியில் செயல்படவேண்டியது அவசியமாகின்றது.

    இத்தகைய அவசியமான சூழ்நிலையில், இதனையே தன்னுடைய உயரிய நோக்கமாகக் கொண்டு, மக்கள் உரிமை மையமும் அதனுடைய தோழமை இயக்கமான உட்டோபியன் சட்ட மையமும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

    இவ்விரு இயக்கங்களிலும் மருத்துவர்கள்,வழக்கறிஞர்கள்,மாணவர்கள்,இளைஞர்கள்,அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிபவர்கள் என சமுதாயத்தின் அனைத்து தரப்பினரும், தங்களால் இயன்ற வகையில், இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
    for readmore www.fcrights.in

    ReplyDelete
  23. கிரிக்கெட்டைப் பைத்தியம் மாதிரி பார்த்தவள் தான் நான். இப்ப இல்ல. இத்தனை கோடி கோடியா சம்பாதித்து நாட்டுக்கு ஏதாவது செய்யப் போறாங்களா. அட்லீஸ்ட் 2%?
    ஆன்லைன்ல 1500 கொடுத்து வாங்கிப் பார்க்கப் போறத தெரிஞ்ச பையன் சொல்லித்து.
    நிரூ உங்க எழுத்து நல்லாவே இருக்கு. ஃப்ரெஷாவும் இருக்கு.
    நிறைய எழுதுங்க.

    ReplyDelete
    Replies
    1. கிரிக்கெட் பத்தின உங்களோட ஆதங்கத்தை சொன்னீங்க வல்லிம்மா. நான் நூறு சதம் ஒத்துப் போறேன். மைலாப்பூர்ல தான் நீங்க இருக்கீங்க இல்ல..? நான் சொன்னது சரிதானேம்மா... என் எழுத்தை தட்டிக் கொடுத்த உங்களுக்கு என் பணிவான வணககங்கள் and My Beartful Thanks!

      Delete
  24. நிரஞ்சனா,
    எப்போதும் யாராவது ஒருவனை " ஹீரோ " வாகக் கொண்டாடுவதையே நாம் விரும்புகிறோம். நமக்கு எவனையாவது பார்த்துக் கைதட்ட வேண்டும், விசில் அடிக்க வேண்டும், அவன் அங்கே புரியும் தனிமனித சாதனைகளுக்கு நாம் இங்கே குதியாட்டம் போட வேண்டும், அவன் கோடிகளில் கொழிப்பதற்கு நாம் இங்கே கண்விழித்து காலத்தை வெட்டியாகக் கழிக்க வேண்டும்.................மனித இனம் தோன்றிய காலத்தில் இருந்தே இந்த உணர்வு இருந்து வந்து இப்போது அது புரையோடிப் போய்விட்டிருக்கிறது.

    தோனி யை ஹீரோவாக நினைப்பவன், டெண்டுல்கரை ஹீரோவாக நினைப்பவன், விராட் கோக்லியை ஹீரோவாக நினைப்பவன், என கிரிக்கெட் வீரர்கள் ஒவ்வொருவருக்கும் இங்கே ரசிகர்கள் உண்டு ! அந்த ரசிக மனோபாவம் தான் இப்படி வெறித்தனமாக கண்மூடித்தனமாக ஐ.பி.எல் பார்க்க மக்களைத் தூண்டுகிறது. அதோடு, " மச்சி, நேத்து தோனி அடிச்ச சிக்ஸரோட ஹைட் 104 மீட்டராமே ? " என்று தன் சக நண்பர்களிடம் சிலாகித்துக் கொள்வதற்கு அவர்களுக்கு ஏதாவது ஒரு விஷயம் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

    ஆனால், அத்தகைய சராசரித்தனங்களையும் ஒரு விமர்சன நோக்கோடு பார்க்கும் தங்கள் அணுகுமுறை நீங்கள் சமூக அக்கறையுள்ள ஒரு பொறுப்பான பெண்ணும் கூட என்பதைக் காட்டுகிறது.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்! நிறையவே ஜாலியாக இருக்க முயன்றாலும் எனக்குள்ளயும் நிறையக் கேள்விகளும் சமூக அக்கறையும் உண்டு. அப்பப்போ வெளிக்காட்டிக்கணும்கறதுதான் என்னோட எண்ணமும். நீங்கள் சொல்லியிருக்கிற கருத்துக்களோட நான் 100 சதம் ஒத்துப் போறேன். Many Many Thanks to you!

      Delete
  25. கல்கியில் சிலகாலம் ஒரு பெண் எழுதி விட்டு அப்புறம் காணாமல் போனார்.அவரைப் பின்பற்றி இந்த மணிப் பிரவாள,பேச்சு நடையில் எழுத முயற்சிக்கிறீர்கள்.
    எளிய நடையில் நல்ல தமிழில் எழுதுங்களேன்..

    மயிலை தேரோட்ட நினைவுகளைத் தூண்டி விட்டு விட்டீர்கள்;படித்தவுடன் மயிலை அழைக்கிறது.

    நிறைவாகவும்,நிறையவும் எழுதுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. மணி்ப்பிரவாள நடை... எனக்குத் தோன்றிய விதமாய் எழுதுகிறேன். அவ்வளவுதான். இனி நல்ல தமிழில் எழுத முயற்சிக்கிறேன். ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு... Many Many Thanks!

      Delete

படிச்சது பிடிச்சிருந்ததா இல்லையான்னு ஒரு வார்த்தை சொல்லிட்டுத் தான் போங்களேன்.. I am Waiting eagerly!

 

கலை அக்கா தந்த பரிசுகள்!

கலை அக்கா தந்த பரிசுகள்!

என் தோழி விஜி தந்த விருது!

என் தோழி விஜி தந்த விருது!